Monday, September 7, 2009

மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?

மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...

எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...

சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...

எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)

நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?

1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)

2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?

3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?

4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?

இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...

கட்டுரையாளர்

குழலி பக்கங்கள்


Monday, August 24, 2009

சீரழிந்த நக்சலிசம்

எஸ்.ஏ.பெருமாள்

மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப்பாதுகாப்புப்படை, மாநில ஆயுத போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே மேற்குவங்கத்தில் லால்கார் மலைப்பகுதியில் மார்க்சிஸ்ட்டுகளை மாவோயிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகள்

சுட்டுக் கொலை செய்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் இந்த பயங்கரவாதக் குழுக்களுக்குள் ஆயுதப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட உறவுகளும் தொடர்புகளும் உண்டு. துப்பாக்கி, வெடிகுண்டுகளோடு படுகொலைகளை நிகழ்த்தி வரும் பயங்கரவாதிகளை இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசும், அவர்களது செய்தி ஊடகங்களும் வெறும் தீவிரவாதிகள் என்றே பிரச்சாரம் செய்கின்றன. பயங்கரவாதம் இங்கு மட்டும் தீவிரவாதமாகவே கருதப்படுகிறது.

1968ம் ஆண்டில் நக்சல் பாரியில் ஆயுதமேந்திய புரட்சியை சாருமஜாம்தார், கனுசன்யால், ஜங்கால் சந்தாஸ் தலைமையில் நடத்தி தனிக்கட்சி தொடங்கினார்கள். நக்சல் பாரிப்புரட்சி நாடெங்கும் பரவுகிறது என்றனர். பின்பு பிரதேச அளவில் பல குழுக்களாய் பிளவுபட்டுப் போனார்கள். ஒன்றையொன்று மறுக்கின்ற குறுங்குழுக்களாய் சிதறிப் போயினர்.

பின்னர் இதில் பலரும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கைவிட்டதாகக் கூறினர். ஒரு பகுதியினர் தேர்தல் பாதைக்கும் வந்தனர். ஆயுதப் புரட்சிக்கு இது தருணமல்ல என்ற முடிவிலிருந்தே ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதற்கு நேபாள மாவோயிஸ்ட்டுகளை சிறந்த உதாரணமாய் கூறலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிய மார்க்சிய நிலைபாடு புரட்சியின் மூலம்தான் என்பது அனைத்து மார்க்சியர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஆயுதப் புரட்சியினால் மட்டும் என்பதல்ல. புரட்சி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் ஆளும் வர்க்கமும் அதன் அரசு இயந்திரமும் மட்டுமே தீர்மானிக்கின்றன. இந்த வடிவம் காலத்திற்குக் காலம், தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்பது கூட சட்டரீதியான நடைமுறைகளின் மூலம் மக்களைத் திரட்டுவதற்கான முயற்சிதான். சமூக மாற்றத்துக்கான புரட்சியை எந்த ஒரு குறிப்பிட்ட வடிவத்தோடும் வரம்பு கட்டிவிட முடியாது. இதற்கு நக்சலைட்டுகளின் அனுபவமே போதுமானது.

பொதுவாக மாவோயிஸ்ட்டுகள் மலைப்பிரதேசங்களையே தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ளனர். அரசுகளின் நிழல்படாமல் எந்த வளர்ச்சியுமின்றி பழங்குடி மக்கள் நிராதரவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்ற எந்த அடிப்படைத் தேவைகளும் கிடைக்காத பழங்குடி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளோடு ஊடுருவிவிடுகிறார்கள். அரசுகளின் மீதான கோபத்தில் ஒரு பகுதியும், பயத்தினால் ஒரு பகுதியுமாய் பழங்குடிகள் இவர்களிடம் சரணடைகின்றனர். போலீஸ் தாக்குதல்கள் வரும்போது மாவோயிஸ்ட்டுகள் பழங்குடிகளை மனிதக் கேடயங்களாய் பயன்படுத்துகின்றனர்.

ரயில்கள், பாலங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் உற்பத்தி மையங்கள், பெரும் தொழிற்சாலைகளுக்குக் குண்டு வைக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள், அவர்களது அத்தியாவசியத் தேவைகள், போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் மீது திட்டமிட்டு குண்டுவீசுகின்றனர். பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை சீர்குலைத்தால் தொடர்ந்து அப்பகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே நீடிக்கும். தங்கள் பிடியிலுள்ள பழங்குடிப் பகுதிகளையும் இதன்மூலம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்துக் கொள்கிறார்கள். பழங்குடி மக்களின் நலன்களுக்காகவே ஆயுதமேந்துகிறோம் என்று அவர்களை நம்ப வைக்கிறார்கள். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஊழல் மலிந்த காவல்துறையைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். போதை மருந்துக்கான பயிர் சாகுபடி மலைப்பகுதிகளில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது. பணத்தை வைத்து நவீன ஆயுதங்களை அவர்களால் வாங்கிக் குவிக்க முடிகிறது.

வர்க்கப்புரட்சியின் மூலம் வர்க்கங்களை ஒழிப்பது எனும் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடு, எதிரி வர்க்க உறுப்பினர்களை ஒழிப்பது எனும் தனிநபர் பயங்கரவாதமாய் சீரழிந்து போனது. இப்போது தனது வர்க்க உறுப்பினர்களையே கொல்வது, மார்க்சிஸ்ட்டுகளை கொலை செய்வது என்ற பயங்கரவாதமாய் வளர்ச்சியடைந்துள்ளது. இதைக் கூட மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாகவே சந்திக்க விரும்புகிறது என்று பகிரங்கமாய் கூறியுள்ளது. சந்திக்கும் என்பது உறுதி.

Monday, August 17, 2009

வார்த்தை பொருக்கிகளான இன்டர்நெட் புரட்சியாளர்களும் அவரதம் எழுத்து நடையும் (பகுதி ஒன்று)

அன்பு நிறைந்த இணயதளவாசக நண்பர்களே! இணைய தளத்தை ஆரோக்கியமான அரசியல் விவாதங்களுக்கு பயன் படுத்தும் முறை கொஞ்கம் கொஞ்சா£க சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் தங்களை அக்மார்க் புரட்சியாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே முத்திரை குத்திக்கொள்ளும் சில அனானிகளும், த.நா.மா.லெ.க மற்றும் ம.க.இ.க வகையராக்களுகம் அவர்களை யாராவது விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்பவர்களை தரம் தாழ்ந்து கேவலமான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி ஒன்று அவர்களை அடுத்த முறை விவாதம் நடத்த விடாமல் செய்வது அதையும் மீறி நின்றால் அடுத்தது அந்த பக்கம் தலை வைத்து படுக்காமல் ஓடிவிடுவது இந்த இரண்டு நிலையையே எடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு இன்று தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் வர்க்க எதிரி மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான்.

நந்திகிராமை முடிந்த அளவு அவதூறு செய்ய பயன் படுத்தினார்கள் அதை எதிர்த்து சந்திப்பு, விடுதலை போன்ற வளைத்தளங்களில் பதிலடி கிடைத்தவுடன் அடுத்து காரப்பட்டு விவகாரத்தை கையில் எடுத்து "பொய் பொய்யை தவிர வேறில்லை" என்ற அடிப்படையில் எழுதினார்கள். அதற்கும் சரியான பதிலடி கொடுத்த பின்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். தற்போது லால்கர் பிரச்சனை. மாவோயிஸ்டுகள் அத்வானி மற்றும் மம்தாவுடன் கொஞ்சி குலாவுவதை இவர்களால் கண்டிக்க முடியாது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாட நடந்த போராட்டத்தில் அவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தியதாய் பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் உலாவ விடுகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி போராட்டம் நடந்தப்பட்டது. அதில் ஆறுமுகசாமி உள்ளிட்டு ப.ம.க, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ தோழர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதற்கு பின் அங்கு நடந்த பல போராட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் கலந்துக்கொண்டன. ஆனால் வெட்டி பரபரப்பும் வார்த்தை ஜாலங்களையும் முதலீடாக மற்றி, காவல் துறையுடன் மோதுவது போல சீன் போடும் இவர்கள் தற்போது நடராஜர் ஆலயத்தை விடுவிக்க ஆகப்பெறும் வேலையை தாங்கள் மட்டுமே செய்ததாக மார்தட்டுகின்றனர்.

ஒரு போராட்டட்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்களை அங்கீகாரம் செய்யத்தெரியாத அல்லது அவர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. தங்களது கட்சியின் பெயரை வெளியே சொல்ல அசிங்கப்பட்டுக் கொண்டு அதாவது த.நா.மா.லெ.க என்ற பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு பல்வேறு பெயர்களில் உலாவந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது கட்சி திட்டம் எப்படி காலாவதியானது என்று வரி வரியாக சந்திப்பு கிழித்து காயப்போட்ட பிறகு அதற்கும் பதில் சொல்ல தயாரில்லை. ஆனால் இணையதளத்தில் வேலை செய்யும் பல அப்பாவி இளைஞர்களை தங்களது போலி புரட்சிகர வசனங்களால் மூளை சலவை செய்து, வளைதளத்தில் எழுதியே புரட்சியை உண்டாக்கலாம் என்று முயற்சி செய்கின்றனர்.

கருத்துக்களை தூர எரிந்துவிட்டு வார்த்தைகளை தேடித்தேடி பொறுக்கி அவர்கள் எழுதுவது அவர்களுக்கே உரிய கலை. (தலைப்பு இப்போது புரிந்திருக்கும்) உதாரணமாக: "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்று மாமேதை லெனின் சொன்னதை பயன்படுத்தி மற்ற கட்சிகளை வீராவேசத்துடன் திட்டுவார்கள். ஆனால் "தேவையேற்படும் போது அதையும் கம்யுனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்" என்று அவரின் அடுத்த வரியை மறைத்து அல்லது மறந்து விடுவர். (இப்படி இவர்களது "கட்டிங் பீஸ்" பல உள்ளது தேவையெனில் எழுதுவோம்) ஒரு சம்பவம் குறித்து அவர்களின் பொய் எப்படி பட்ட அடிபடையற்றது என்பது பல முறை நிருபிக்கப்பட்டுள்ளது, வேண்டு மென்றால் இதற்கு பிண்ணூட்டம் அவர்கள் அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அவர்கள எத்துனை அய்யோக்கியதனமான பொய்யர்கள் என்று மீண்டும் ஒரு முறை நிருபனம் செய்யலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை சேர்ப்பதற்கென்றே அவர்கள் ஒரு பிரிவை வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவை சார்ந்த வர்க, வெகுஜன இயக்கங்கள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டங்களில் துண்டு பிரசுரத்துடன் நுழைவது வேண்டுமென்றே கலகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேப்போல் தனிநபர்களை தாக்காமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. அவர்கள் எழுத்து நடையின் லட்சனம் அதுதான். கேட்டால் பெரிய லட்சிய கொம்பர்கள் போல கதையளப்பார்கள். எத்தனை பேர் அவர்களுக்கு பிண்ணூட்டம் அனுப்பினாலும் அத்தனை பிண்ணூட்டங்களையும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு நபர்கள் அனுப்புவதாக கற்பனை செய்துக்கொண்டு தனிநபர் தாக்குதலில் இறங்குவார்கள். அவர்களின் நரகல் எழுத்து நடையை படிப்பவர்கள் உடன் கண்டு பிடித்து விடலாம். அவர்கள் அனானி போலவும், புனைப்பெயரிலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அதை எதிர்த்து எழுதுபவர்கள் அவர்களது முகவரி மற்றும் ஜாதகத்தை வெளியிட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். என்னே ஒரு ஜனநாயக மான்பு. இப்போது இந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் எத்துனை நரகல் நடை பதில் வரும் என்று பாருங்கள். ஒன்னு அப்படி வரும் இல்லை எனில் இதை படித்ததாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பொய்கள் ஆதாரத்துடன் அடுத்தடுத்து நிருபிக்கப் படும் என்று மேலே உள்ளது அல்லவா.

இன்னும் கூட பல அப்பாவி நண்பர்கள் அவர்களை புரட்சியாளர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். த.நா.மா.லெ.க வினர் புரட்சிகரமான வார்த்தைகளை பொறுக்குவார்களே அல்லாது எதையும் அவர்களால் களத்தில் நின்று செய்யமுடியாது. இலங்ககை பிரச்சினையில் அவர்கள் ஒருப்பக்கம் தமிழ் என்று கதைப்பார்கள், மறுபக்கம் புலிகளின் ஆதரவு முகம் காட்டுவார்கள், முத்துக்குமரனை வீரனாக சித்தரிப்பார்கள், மற்றொறுபுறம் அந்த அப்பாவி இளைஞனை கேவலப்படுத்துவார்கள், இலங்கை பிரச்சினையில் அவர்கள் நிலை என்ன என்று கண்டு பிடிப்பத்ற்குள் உங்கள் தலைமுடி பாதியாகிவிடும். இவர்கள் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுவார்கள் இணையதள வாசகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கூட்டத்தை அடையாள படுத்தவே இந்த பதிவு இங்கு செய்யப்படுகிறது.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

Saturday, May 2, 2009

உருப்படாத மகஇக

தேசம் தீப்பற்றி எரிகிற போது நான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்கொண்டுதான் தீயை அணைப்பேன் என்று அடம்பிடிக்க நாம் என்ன 68 ஆம் ஆண்டுகளின் நக்சல்பாரிகளா?

மார்க்சிஸ்ட்டுகளை  அடிக்காத கட்சி ஏதாவது இந்தியாவில் உண்டா காங்கிரஸ் துவங்கி நக்சல்பாரி வரை எல்லாக்கட்சிகளும் நம் ஊழியர்கலைக் கொலை செய்துள்ளன.தாக்கியுள்ளன.

பீகாரில் நக்சல்பாரிகளுடன் கூட்டணி அமைத்து சிபிஐ,சிபிஎம் போட்டியிடுகின்றன.வங்கத்தில் அவர்கல் செய்துவரும் அட்டூழியங்களையும் நந்திகிராம் என்னும் ஊரில் நிலம் எடுக்கும் திட்டமே இல்லை என அரசு அறிவித்த பிறகு நில மீட்பு இயக்கத்தை மம்தா தலைமையில் நக்சலைட்டுகள் துவக்கி சகல பாவங்களையும் செய்தார்கள்.அதற்காக பீகாரில் அவர்களோடு நாம் கூட்டணி சேர்வதை தவிர்க்கவில்ல்லையே?

யாரோடு சேர்ந்து அரசியல் போராட்டம் நடத்துவது என்பதை மாறிக்கொண்டே இருக்கும் தேச நிலைமையும் மாறிக்கொண்டே இருக்கும் முதலாளித்துவக்கட்சிகளின் நிலை பாடுகளும் நம் சொந்த பலமும்தான் தீர்மானிக்கின்றன.

தொழிலாளி வர்க்க நலனுக்கு அதிகபட்சம் உகந்தது எது என்று பார்த்து அவ்வப்போதைய நிலைமைக்கேற்ப முடிவெடுப்பதுதான் சரி.

உணர்ச்சிவசப்பட்டு எந்நேரமும் டென்சனாக அலைவது நம் பாதை அல்ல.அது 68இல் பிரிந்துபோனவர்களின்பாதை.

ஒரிஸ்ஸாவில் நக்சல்பாரிகள் ஒரு அயோக்கிய இந்துத்வ் சாமியாரைப் போட்டுத்தள்ளினார்கள்.விளைவு? பல்லாயிரம் கிறித்துவ மக்கள் தாக்கப்பட்டார்கள்.பெண்கல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.கொலை செய்த நக்சலைட்டுகள் ஆரெஸெஸ்காரன் இதைச்சாக்கிட்டு சிறுபான்மை மக்களைத் தாக்குவான் என்கிற நிலைபாட்டில் யோசிக்கவில்லை.அல்லது அப்படித்தாக்குதல் வந்தால் அதிலிருந்து மக்களைக் காக்கிற வலு நமக்கு இருக்கிறதா என்கிற கணிப்பும் நக்சல்களுக்கு இல்லை.உணர்ச்சிவயப்பட்ட கொலை இன்று எத்தனை ஆயிரம் அப்பாவி மக்களுக்கு வினையாக முடிந்துவிட்டது.

தாக்கினால் திருப்பித்தாக்கும் வலுவும் மனநிலையும் நமக்கும் உண்டு.பல இடங்களில் செய்தும் இருக்கிறோம்.ஆனால் அதையும் பொதுவிதியாக நாம் வைக்க முடியாது.சூழலைக் கணக்கில் கொள்ள வேண்டும். 

சொந்தக்காலில் நிற்கும் வளர்ச்சியை எட்டும்வரை நாம் நிலைமைக்கேற்ப மக்கள் நலன் காக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

Thursday, March 26, 2009

பொறுக்கி தின்ன வாய்சவடாலும் எதிர்புரட்சிக்கு மகஇகவும்

நாங்க மாவோவைச் சொன்னாலும்
மகஇக எஸ்.ஓ.சி பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.

அரை காலனித்துவ
அரை முதலாளித்துவப்
அரை நிலபிரப்புத்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
மகஇக கலைக்குழு பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !

தோழர் . மக்கள் இன்னும் தயாராய் இல்லை

அது வரைக்கும் ?

ஓட்டு போடாதிங்க!

அப்புறம் பாருங்க.. நேரா புரட்சிதான் !

கேட்டவரை அதிரச்சியடைய

டோட்டலாய் விளக்கினார் தோழர்

யாருமே கட்சியில் இல்லாட்டாலும் - சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
தன் கொள்கையை மட்டும் இழக்காது.

மக்கள் விரோதிகள் எவரும் இனி
(மமதா மாவோஸ்ட் கூட்டுபோல)
மகஇக விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !

யாருமே எங்கள ஏதுக்களனாலும் தமிழ்நாட்டுல
இருக்கிற நாலுபேரும் தடுத்தாலும்
சாருமஜீம் தாரு சபதம் முடிக்காமல் மகஇக அடங்காது.

அப்புறம் எப்போது புரட்சி?

அது இருக்கட்டும் தோழரே சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:

அன்று சாருமஜீம் தாருயை அடையாளம்
கண்டோம் அவரிடம் வந்த
அத்தனைபேரையும் கொன்றோம்.

கம்யுனிஸ்ட் கட்சி உள்ளே இருந்தே
இடது சீரகுலைவை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.

அப்புறமா மேற்கு வங்க நக்சல்பாரி கிராமத்தில்
ஆட்சியைப் பிடிச்சோம்.

அடுத்தது புரட்சி ?

பின்னே ஆயுதம் வன்முறை இல்லாமல்
சோசலிசம் படைக்க முடியாது என்பதை
சாரும் மஜீம்தாரு தலைமையில் அழித்தொழிப்பு என்று சொல்லி
அப்பாவி மக்கள ஏமாத்தி கொண்ணு போட்டோம் !

கல்லாவை வென்றெடுக்க
தனி தனியாக 82 கடை விரிச்யோம்

அமெரிக்காவிடம் நல்ல பேர எடுக்கு
புதுசு புதுச இயக்கம் வைச்சோம்
மகஇக என்.ஜீ.ஓ ஆரம்பிச்சோம் !

காசு சேரத்து கம்யுட்டர வாங்கி
இனையத்தில் சிபிஎம் ஆதிக்கம் ஒழிச்சோம்


சரி புரட்சி எப்போது ?

அட ! மமதாவை வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !

பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
52 சிபிஎம் தோழர்களை கொண்று போட்டோம்.

பிஜேபினு பேதம் பார்க்காமல்
அத்வானி அரவனைத்துகிட்டோம்.

வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி தொழிலாளி வாழ்வை ஒழிச்சோம்
அத்வானிக்கு கொடுத்த உறுதி மொழிப்படி
குஜராத்துக்கு கம்பெனியை மாத்தினோம் !

இதுவா புரட்சி !

இது மட்டுமா ! பாரப்பண ஆதிக்கத்தை ஒழிக்க
பாரப்பண தலைமையை ஏதுக்கிட்டோம்.
இட ஒதுக்கீடு தலித்துகளுக்கும்
பிற்பட்டவர்களுக்கும் கொடுக்க
கூடாதுன்னு புரட்சிக்காக
அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.

புலிகளை பாசிஸ்ட்டுகள் என்று சொன்னோம்
யாரும் கவணிக்கதால்
புலிகளை ஆதரிச்சி காசு பணமும்
போராட்டத்தின் தலைமையும் பெற்றோம் !


ஈழத்தமிழருக்காய் உயிரகளை எரித்து கசிந்து
பிண வாடை எடுத்த சுடுகாட்டில் அஞ்சாமல்
முன்நின்று வசுலித்த எங்கள் போரத்தந்திரம் சும்மாவா ?

இதிலென்ன புரட்சி ?

அன்ட பிசரண்ட அகிலம் அதிர - எங்கள்
ஆயுத கிடங்கில் புதிய கலாச்சாரத்தில்
புதிய ஜனநாயகத்தில் நாக்குழறி
முத்துக்குமார போன்ற அப்பாவி
இளைஞர்கள் 11 பேரின் படுகொலையில்
எச்சு ஊறி புலிகள் பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !

அடைந்தால் தனி நாடு அடையாவிட்டால்
சுடுகாடு என்று கோசம் போட்ட
தலைவர்களால் முடியாததை
இலங்கை பிரச்சனை
முன்வைத்து தமிழ்நாட்டை தனியாக
பிரிக்கபோகிறோம் ஓட்டுப பொருக்காத
கட்சியா ஆட்சி செய்ய போகிறோம்

நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?

போதும் எப்போதுதான் புரட்சி ?

வந்தது கோபம் தோழருக்கு :

அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி புரட்சின்னா. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?
எங்க கட்சி பேரே எங்களுக்கு
தெரியாது கட்சி திட்டமே கிடையாது
ஆனா ஓன்னு ஓட்டுபோடாதே புரட்சி செய்

காலனியம் பேசுவோம்!
ஏகாதிபத்தியம் எதிர்ப்போம்னு
சொல்லுவோம்!
இருந்தாலும் எங்க புரட்சி
குண்டு சட்டிக்குள்ளத்தான்!
அதாங்க எங்க எல்லையெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்
எங்களது அகில இந்திய தலைமையெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்!

அப்புறம் என்ன இருக்கவே இருக்குது
வாய்ச்சவடால் அகில இந்திய புரட்சிய
நடத்திட வேண்டியதுதான்.

பங்காரு அடிகளாரின் சிவப்பு படைக்கு
போட்டியா நாங்க இப்ப
கும்பமேளா நடத்தத் துவங்கிட்டோம்
முதலாளித்துவ பயங்கரவாத
மாநாடு நடத்துவோம்
வரக்கூட்டத்தை அப்படியே
லபக்கென்று பிடித்துக்கொண்டு
இலங்கைக்காக ஒரு ஆர்ப்பாட்டம்
நடத்துவோம்!

அய்யோ இந்தப் புரட்சிக்குத்தான்
இந்தக் கத்தா?

இங்கு சீர்குலைவாளர்கள்தான் புரட்சிக்கு எதிரிகள்

யார் சொன்னது

போலிகள் புரட்சி பண்ணவில்லையென்று

பன்னினார்கள் எத்தனையோ

சொல்ல சொல்ல வாய்

வலிக்கும். தேர்தல்

தேதி வந்தவுடன்

தேடி தேடி 8 சிபிஎம் தோழர்களை

கொண்ணுட்டானுங்க.


சிபிஐ எம் எல் எஸ்.ஓ.சி

பேரை கேட்டதால் தான்

என்னவோ புடலங்காய்க்கும்

புரட்சி வந்து முறுக்கிகொண்டதுவோ..


ஆரம்பித்தது வரலாறு அறுபத்தேழிலிருந்து

கூடவே துரோகத்தனத்துக்கும்

கம்யூனிஸ்ட்களை கொன்று குவித்தும்

இன்னமும் அடங்க மறுக்கிறது

குறுதியின் வெப்பம்


கண்காட்டும் தலைவருக்கு

தாசனாகி உழைக்கும் மக்களுக்கு நீசனாகி

மாமா வேலை செய்து செய்து

பாசிஸ்டாக பல்லிளித்து

பார்ப்பன பணியாவிற்கும்

அமெரிக்க ஏஜண்டுகளுக்கும் பாத பூசை

ஆண்டுக்கு ஒருமுறை சிபிஎம் தோழர்கள் படுகொலைபூசை

தேர்தல் தொடங்கியவுடன் ஓட்டுபோடாதே என்று உண்டியல் பூசை.


ஆயிரம் தரகு வேலை

ஆயிரம் பூசைகள் செய்து களைத்து

82 பிரிவாய் பிரிந்துபோய் தெரு

வெறிநாய் போல் அலைந்து திரியும்

நல்லோரே வல்லோரே

உங்களுக்கு மொத்தமாய் பூசை

செய்கிறோம் கூடவே நிரந்தர ஓய்வையும்


இங்கு இடதுசாரிகள் தான் கடவுள்கள்

நாங்கள் எடுக்கிற அவதாரத்தில்

உங்கள் ஆவியும் , அமெரிக்காவும்

உங்கள் திருட்டு வேலையும்,

சீர்குலைவும் காணாமல் போகும்.

Monday, February 16, 2009

புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது

ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்


சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்


அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது


புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி


புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...


கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்

நன்றி குழலி 

வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்'

விடுதலை இராசேந்திரன்

'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

'காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.

இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் 'அவாள்' ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் 'கள்ள மவுனத்தால்' வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் 'புதிய ஜனநாயகம்' பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.

காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை 'பூமி தான' இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.

'இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி' என்பது 'புதிய ஜனநாயகத்தின்' கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே 'கடைந்தெடுத்த அயோக்கியர்கள்' தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் - பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் - கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு - ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.

வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.

பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் - சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் 'புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை - தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு 'மண்டலாக்கம்' வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.

'புதிய ஜனநாயகத்தின்' இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.

1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை" என்று எழுதிய 'புதிய ஜனநாயகம்' "மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை" என்றும் எழுதியது. ('புதிய ஜனநாயகம் - மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று 'அருண்சோரி'களும், 'சோ'க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் 'புதிய ஜனநாயகம்' அன்று இவ்வாறு ஒலித்தது. "நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக." (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)

மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய 'புதிய ஜனநாயகம்' அதைச் செய்யவில்லை. மாறாக - இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.

"இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன" என்று எழுதியதோடு "அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்" என்று அறைகூவலும் விடுத்தது.

வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, 'புதிய ஜனநாயகம்' இவ்வாறு எழுதியது. "இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி - இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் - நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியது ('புதிய ஜனநாயகம் 1993 - செப். 16-31, அக் 1-15)

ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான "புரட்சிப் புயல்", "இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது" என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. ('புரட்சிப் புயல்' - 1985 டிசம்பர்)

"ஒரு அரசியல் தலைவரை - எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே" என்று, எழுதும் 'புதிய ஜனநாயக'த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் 'புதிய ஜனநாயகம்' இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை 'புதிய ஜனநாயக'த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.

போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை 'புதிய ஜனநாயகம்' மறைத்து - "கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்" என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?

போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து 'முதல் தகவல் அறிக்கையே' பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகாரில் யாத்திரை தடை செய்யப்பட்ட நிலையில், வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவைத் திரும்பப் பெற்ற வரலாறுகளையெல்லாம் மறைக்க, 'புதிய ஜனநாயகம்' ஏன் துடிக்க வேண்டும்? பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது, வி.பி.சிங், ஒப்புதல் பெற்றுத் தானே? ஏதோ வி.பி.சிங்கை கேட்காமல் லாலுவே முடிவு எடுத்தது போல் ஏன் திரித்து எழுத வேண்டும்?

ராஜீவ் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார் என்றால், ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான்; 'இன்னும் கேவலமாக தோற்பதைவிட, நாடு திரும்புவதே மேல்' என்ற முடிவின் பேரில் வி.பி.சிங் திருப்பி அழைத்ததாக அதையும் கொச்சைப்படுத்துகிறது 'புதிய ஜனநாயகம்'.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா?

'புதிய ஜனநாயகத்தின்' கட்டுரை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். "இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்" - என்று 1993-ல் அறிவித்த ம.க.இ.க. ('புரட்சிப் புயல்' - பக்.27, 28) 1998-ம் ஆண்டு கட்சித் திட்டத்துக்கான ஆவணத்தில் அத்திட்டம் காணாமல் போனது ஏன் என்பதும் நமக்குப் புரியவில்லை.

"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள்.

இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.

'கவி'யின் இந்த கட்டுரை 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை சந்தேகப்பட வைத்துவிட்டது!

நன்றி பெரியார் முழக்கம் தபெதிக வார ஏடு பிப்ரவரி 2009

Saturday, February 7, 2009

ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!

என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளியான கட்டுரையில் உள்ள முரண்பாடுகள் இங்கே விமர்சிக்கப்படுகிறது.
முதல் பொய்: புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன.

ம.க.இ.க. இனவாதிகளே உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு மேற்கண்ட வரிகளே உதாரணமாக திகழ்கிறது. உண்மையை மக்களிடம் மறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் கூட உங்களிடம் இனிமேல் பிச்சை வாங்க வேண்டும். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன? கம்யூனிச வேடம் இப்போதுதான் கலைய ஆரம்பித்துள்ளது. போகப் போக புரியும் தமிழ் மக்களுக்கு இதுஒரு இலங்கை ஆதரவு என்.ஜீ.ஓ. என்று.

இரண்டாவது பொய்: இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன.

தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் - தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!

மூன்றாவது பொய்: புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது புலிகள் மீதான விமர்சனம் அல்ல. கரிசனம். அதாவத புலிகளை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம். தமிழகத்தில் எழுந்துள்ள இனவாத இரைச்சலில் குளிர் காயும் ஓநாய்த்தனம் என்றுதான் இதனை உரைக்க முடியும்.

நான்காவது பொய்: இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

தமிழ் இனவாதத்தின் அப்பட்டமான - மலிவான - இழிவான குரலின் பிரதிபலிப்பு மேற்கண்ட வரிகள். ம.க.இ.க. சி.பி.ஐ.(எம்-எல்) எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மை முகம் இதுதான். அதாவது, இந்தியாவின் இதர மொழிவாரிய இன மக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கவலைப்படுவது தெரிகிறது. அதுசரி ஏதோ நீங்கள் இந்தியா முழுவதும் புரட்சியை கொண்டு வந்து கிழிக்கப் போவதாக ஏமாற்றுகிறீர்களே தமிழகத்தை தாண்டி உங்களுக்கு வேற்று மாநிலங்களில் அமைப்பு இருந்தால் அவர்களை வைத்து போராடியிருக்கலாமா? குரல் கொடுக்க வைத்து இருக்கலாமே? ஏதோ லண்டனில் ம.க.இ.க. இருப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டு பெருமையடிக்கும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கருநாடக, ஆந்திர உழைக்கும் மக்களைக் கூடவா அணித்திரட்ட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறோம் உங்களது குழு வெறும் தமிழக அளவில் சீர்குலையை மட்டுமேன முன்னிறுத்தும் குழு என்று. அது மட்டுமா? வெறும் இனவாதக்குழு! இது படிப்படியாக வளர்ந்து சிங்கள இனவாதத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் அளவிற்கு வளர்ந்து விடும். புலிகளுக்கும் உங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. அதனால்தான் உங்களால் மற்ற மாநில மக்களை அணிதிரட்ட முடியலி்லை. புலிகளுக்கு அட்வைஸ் செய்வதற்கு முன்னால் ஒருமுறை உங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. பாவம் இணையவாதிகளை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. உங்கள்ம முகம் கிழிய ஆரம்பித்துள்ளது.

ஐந்தாவது பொய்: சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.

நீங்கள் வக்காலத்து வாங்கும் புலிகள் பிரேமதாசா அரசாங்கத்தோடு இணைந்து இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்த சுயநிர்ணய உரிமை எங்கே போனது! புலிகள் ஒன்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துக் கொள்ளாதவர்கள் இல்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணம் மிக முக்கியமானது. அதுசரி! தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகளிடம் மாட்டிக் கொண்டுள்ள மக்களை விடுவிப்பது சம்பந்தமாக ஒரு வார்த்தைக்கூட - முனகல்கூட வரமாட்டேங்குதே இது என்ன இலங்கை தமிழ மக்கள் மீது உள்ள பாசமா? அல்லது புலிகள் மீதான கரிசனமா? ம.க.இ.க. செய்யப்போகும் புரட்சி இந்தியாவில் அல்ல என்பது மட்டுமல்ல. செய்ய விரும்புவது இலங்கையில் உள்ள முல்லைத் தீவில் மட்டும்தான் என்பது புரிகிறது.
புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். என்று சொல்லும் ம.க.இ.க. (சி.பி.ஐ.-எம்)எஸ்.ஓ.சி. தலைமை புலிகளை வெறும் புல்லு தின்னும் புலிகளாக நினைப்பது சூப்பர் காமெடி. அதாவது இவர்கள் நோக்கில் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் புலிகளால்தான் முடியும்! மற்ற இலங்கைத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குதான் லாயக்கு! ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க இரயாகரன். இனவாதத்தின் உச்ச கட்டத்தில் ம.க.இ.க.

பொய் ஆறு: தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் முக்கியமான கட்சியான தி.மு.க. - அதிமுக - சி.பி.எம். - காங்கிரசு போன்றவைகள் புலிகளை ஆதரிக்கவில்லை. மாறாக அங்கு பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் நிற்கின்றன. ஆனால் தமிழ் இனவாதம் நடத்தும் சிறு கட்சிகள்தான் இந்த வேடத்தை தற்போது ஏற்று நடத்துகிறத. அதில்கூட தாங்கள்தான் புரட்சிகரமான முன்னிணியில் இருப்பதாக பீத்திக் கொள்கிறது ம.க.இ.க. இனவாதமே உன்பெயர்தான் சந்தர்ப்பவாதமா?

பொய் ஏழு: தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை.

உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாக அணுக மாட்டோம் என்ற ஒரே புரட்சிகர சீர்குலைவு அமைப்பின் உன்னத குரல் இதுதான். இதைத்தான் இரயாகரன் கேள்வி கேட்டார் இதுவரை அவருக்கு எந்தவிதமான பதிலையும் வினவு அளிக்கவில்லை. சந்திப்பு கேள்வி எழுப்பினால் ம.க.இ.க. இனவாதிகள் தனிநபர் அவதூறுகளை அள்ளித் தெளித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். கொள்கை குன்றுகளாய் மிளிர்கிறார்கள்.

பொய் எட்டு: இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும்.

இந்தியா கைவிட்டு விட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதாவது இவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கதான் இலங்கையின் உற்ற நன்பனாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்களோ என்னவோ? பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நட்பாயிருப்பதால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களை நாம் அறிவோம்! இவர்கள் புரட்சிகரவாதிகள் அல்லவா? அதன் இப்படியெல்லாம் சிந்தித்து - சீர்தூக்கி வர்க்க ஆராய்ச்சி செய்கிறார்கள்....

பொய் ஒன்பது: வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

பரவாயில்லை இந்தியாவில்தான் ஓட்டுக் கட்சிகள் - பாராளுமன்றம் பன்னித் தொழுவம் என்று கூறி ஜனநாயகம் இல்லை என்று மாரடிக்கும் இந்தக் கூட்டம். வெளிநாட்டில் எல்லாம் சோசலிச ஜனநாயகம் நிலவுவதாகவும் அந்தக் கட்சிகள் எல்லாம் இவர்களைப் போலவே வர்க்கத்தை கடந்து நிற்பதாகவும் கூத்தடிப்பது வேடிக்கையானது. இவர்கள் அணிகள் எல்லாம் இதனைப் படித்து விட்டு புல்லரித்துப் போவார்கள்.

நன்றி தோழர் சந்திப்பு


Tuesday, January 27, 2009

முதலாளித்துவசேவகர்களும் மகஇக குருடர்களும்.

இங்கே சில அறிவுகெட்ட மன்னிக்கவும் அறிவே இல்லாத நன்பர்கள். சிலர் இனையதளத்தில் கலர் கலரா படத்தை போட்டு 15 கட்டுரை எழுதி . நாளைக்கே புரட்சி கொண்டுவர அவர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்கள் நமது மதிப்புக்குறிய மகஇக தத்துவகுருடர்கள்.

இவர்களின் அப்பன் சாரும் மஜீம்தார் கொள்கையை பின்பற்ற நினைக்கிறார்கள் . கிராமத்தை வளைத்து நகரத்தைப்பிடிக்க நகரத்தில் உள்ள அதிக அறிவு படைத்த அப்பாவி இளைஞர்களின் அறியாமையில் சமைக்க பார்க்கிறார்கள் புரட்சியை.

போராட்டத்திற்கும் இவர்களுக்கும் சம்மபந்தமே இல்லை.

இவர்கள் மாநாட்டில் யாரைப்பற்றி பேச போகிறார்கள் . முழுக்க முழுக்க சிபிஎம் கட்சியை திட்டி தீர்க்கபோகிறார்கள் . அதற்காக முதலாளித்துவ பயங்கிற வாத மாநாடு என்று பெயர் வைத்து முதலாளிகளிடம் இருந்து பணம் பெற்று கம்யூனிச எதிர்ப்பு கருத்துகளை அள்ளிவிடபோகிறார்கள்.

எங்களுடைய கவலை எல்லாம் அப்பாவி இளைஞர்கள் சிந்திக்கவேண்டும் என்பதுதான்.
லெனினின் மிகச்சரியாக இளம்பருவகோளாறு என்று இவர்களைபோன்றவர்களின் நடவடிக்கை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துஉள்ளார்.

  • அறிவு உள்ள எந்த மனிதனும்தான் செய்யப்போகிற வேலை என்ன?
  • அதன் மூலம் என்ன சாதிக்க போகிறோம்.
  • பிரச்சனைக்கான அடிப்படை காரணம் என்ன?
  • அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
  • ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள வழிமுறைகள் என்ன?
  • அதில் எந்தவழி முறையில் சென்றால் மக்களின் ஆதரவு பெறமுடியும்.
  • மக்களை போராட்டகளத்திற்கு கொண்டு வரமுடியும் .
  • அப்படிவருகிறவர்கள் ஒருபுரட்சிகரமனப்பான்மையோடு வருவார்களா?
  • அவர்களின் போராட்டத்தின் எல்லை என்ன?
  • உண்மையில் மக்களின் வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் அவர்களுக்குதெரியுமா? தெரியாதா?
  • அப்படிதெரிந்தால் என்னமா திரியான போராட்ட வடிவத்தை விரும்புவார்கள்?
  • அவர்கள்யார் தலைமையில் அணிவகுப்பார்கள் ?
இது குறித்து சிந்தித்து செயல்படும்போதுதான் இடதுசாரிகளின் நிலைப்பாட்டின் குறைந்த பட்சி அம்சத்தையாவது புரிந்துகொள்ளமுடியும்.

Wednesday, January 21, 2009

மகஇக தமிழ் மாநில அமைப்பு கமிட்டி

பரம்பிரம்மம்

ஓம் மகஇக நமக
ஓம் பாஸிஸ்டாய நமக
ஓம் பொறுக்கித்தின்னுவோம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக

அவனின்றி அணுவும் அசையாது
மகஇக இன்றி அவனும் அசைய
மாட்டான் , அசைவுகள் காத்து
கிடக்கின்றன அமெரிக்காவின்
பதில்களுக்காக……….

நாயையும் புரட்சியாளனாக்கலாம்
வல்லபேச மருதையனாக்கலாம்
சூட்சுமம் தேடித்தேடிதேடலாம்
கடலளவு துரோகத்தில்
கையளவு பருகினால் போதும்…

அன்று -தசாவதாரங்கள் போதாதென
ஆழ்வார்களாக கடவுளர்கள்
அவதரிக்க-இன்று கலியுகம்
பத்தவதாரங்கள் பத்தாதென
பாரயிரம் பாடிவருகின்றனர் போலிகள்….

வல்லபேசயிசம் ரெங்கராஜன்யிசம்
சாரும்யிசம் கனபதியிசம்
கணிணியிசம் புத்தகயிசம்
புடலங்காயிசம் -ஆயிரம்
இசங்கள் வந்தாலும்
பரம்பிரம்மம் ஒன்றே……

ஞானத்தை தேடி திருமலை
பழனி,சபரிமலை
கோயில்
கோயிலாய் அலைவோரே
கோடிகோடியாய் கோட்டினாலும்
நரகத்துக்கு கடவு சீட்டு
மகஇக உறுப்பினர் சீடு….

வர்க்கமென்ன வர்க்கம்
வாடத முகமுண்டு
இனையத்தில் வளைக்கும் திறனுண்டு
அதற்கு வினவு என்றோர் பெயருண்டு
நரியை பரியாக்கியவன்
சிவனெனில் யானையை
எறும்பாக மாற்ற மந்திரம்
ஓதிக்கொண்டிருக்கிறார்
தலைமை அய்யர் பிரம்மசிறீ மருதையன்ஜீ….

சாதுகள்ளர்னெ நினைத்தயோ
அற்பனே பல்லாவரம்
நந்திகிராம், காரப்பட்டென
தேவையெனில் ஆங்கார தரிசனமும்
உண்டு
சாரு மஜூம் தார், திபங்கர்
மருதையன், வீராச்சாமி என ஆயிரம்
ஐயர் வந்தாலும்
மாறாத துரோகத்துக்கு
காரணம் கண்டறிந்தாயோ
புழுவே அதுதான் பிரம்மம்
பரப்பிரம்மம்
இன்னும் புரியவில்லையா
புரியும் படி
செப்புகின்றேன் அதுதான்
மகஇக தமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)

Tuesday, January 6, 2009

தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.)

தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயம்

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தற்போது தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் முத்திரைப் பதித்து வருகின்றனர். 1990களுக்குப் பிறகு தலித்திய அமைப்புகள் எழுச்சிகரமாய் ஏற்றம் பெற்று வருகின்றன. சாதிய இழிவுகளுக்கு எதிராகவும் - சனாதன மனு (அ)நீதிக்கு எதிராகவும் இவர்களது குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் உடனடியாக சமூக மாற்றம் யாருக்குத் தேவையோ இல்லையோ தலித் மக்களுக்கு இது அடிப்படையாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது. எனவே, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதல் தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் வரை நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துக் கொண்டு சாதிய நிலவுடைமைய அமைப்பை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர். 

எனவே நமது போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது என்பதோடு - முதலாளித்துவத்திலும் புரையோடிப் போய் கொண்டிருக்கக்கூடிய சாதியத்தையும் சேர்த்து வீழ்த்த வேண்டியுள்ளது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலம் தொட்டு சாதிய விடுதலைக்கான முழக்கத்தையும் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கீழ்வெண்மணி இன்றைக்கும் அதற்கு சாட்சியமாய் நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கீரிப்பட்டி முதல் உத்தப்புரம் வரை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வரும் போராட்டம் சாட்சியமாய் விளங்குகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்முயற்சி எடுத்து செயலாற்றி வருகிறது. தலித் மக்கள் மட்டுமல்ல அடுக்கப்பட்ட மக்களில் அட மூட்டைகளாய் மாறிப்போன அருந்ததிய மக்கள் வரை... அவர்களுக்கான பிரச்சனைகளை முன்னின்று செயலாற்றி வருகிறது.

இதற்காக விரிவான அளவில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்கு முன்வரக்கூடிய பெரும் பகுதியினரை அணி திரட்டுவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரமாய் செயலாற்றி வருகிறது. அமைப்புகள் உருவாவதும், அமைப்புகள் காணாமல் போவதும் சமகாலத்தில் நிகழக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வர்.

இந்நிலையில் வளர்ந்து வரும் தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.) கும்பல். தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது ஏதோ வாக்கு வங்கி அரசியல் நடத்துவதற்காக துவங்கப்பட்டதாக கொச்சைப்படுத்துகிறது. இவ்வாறு குற்றம் சுமத்துவது ஆட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கூட இவ்வாறு சொல்லத் துணிய மாட்டார்கள். சொல்வது புரட்சியை (தமிழகத்திலோ - இந்தியாவிலோ) கொண்டு வருவதற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அமெரிக்காவில் வாங்கி வந்திருக்கும் ம.க.இ.க. தொடை நடுங்கிகள்தான். 
(பார்க்க வினவு-ஏகலைவன் கமெண்ட்)
இவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததியர் பேரவை... என்று அனைத்து தலித் அமைப்புகளையும் முதலாளித்துவ அமைப்புகளாகவும் - சாதிய அமைப்புகளாகவும் பார்க்கும் சனாதன - பார்ப்பனீய மனோபாவத்தின் வெளிப்பாடே! மொத்தத்தில் இந்த ம.க.இ.க. குழு தலித் மக்களின் எதிரியே! இதனை ஏமாற்றுவதற்காகவே தலித் அடையாளத்தோடு பவனி வருகிறது ம.க.இ.க.

உண்மை என்ன? இவர்களது சுய முகம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய அவசியமான ஒன்று... இந்த ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. தொடை நடுங்கி நக்சலிச) புரட்சியாளர்களின் உண்மை முகம் என்ன என்று யாருக்கும் தெரியாது? நான் தொடர்ந்து குற்றம் சுமத்தும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இவர்கள் யாருக்கும் சொந்தப் பெயர் இல்லை. எல்லாம் போலிப் பெயரில் - போலி முகமூடியுடன் செயலாற்றுவதுதான்.

அது தலைமை முதல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் வரை.... சரி இதில் உள்ள மற்றொரு ரகசியத்தையும் இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏதோ இவர்கள் பார்ப்பனீத்தை எதிர்ப்பதற்கு பிறந்தவர்கள் போல் பேசுவார்கள்... ஆனால் அது நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதற்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

இவர்களது தலையே ஒரு பார்பனீயத் தலைமைதான். குறிப்பாக வல்லபேச என்கின்ற பார்ப்பனர் மருதையனாகவும், ரெங்கராஜன் என்கின்ற பார்ப்பனர் வீராச்சாமியாகவும் மாறியது ஏன்? அதுவும் மருதையன், வீராச்சாமி எல்லாம் தலித் அடையாளத்துடன் கூடிய பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது? இதுதான் மர்மம். ஏதோ தாங்கள் எல்லாம் தலித் மக்களின் நண்பர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலி மனோபாவம். உத்தப்புரத்திலாகட்டும்... கல்கேரியாகட்டும்... எந்தக் கிராமத்திலாவது தலித் மக்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் போது அங்கே களத்தில் நின்று போராடிய வரலாறு இவர்களுக்கு உண்டா? இல்லை! மாறாக பிரச்சாரத்திற்காக சிதம்பரத்தை எடுப்பார்களே தவிர களத்தில் இறங்க மாட்டார்கள் இந்த போலி புரட்சியாளர்கள்.

இதேபோல்தான் இவர்கள் கியூபாவையும், கியூப புரட்சியும் எப்படி நடந்தது என்று போகிற போக்கில் கேள்வி எழுப்புவார்கள். தங்களை நக்சலிசத்தின் உண்மை வாரிசாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் கியூப வழியில் கடந்த 30 ஆண்டு காலமாக களத்தில் என்ன செய்தார்கள்? புதிய ஜனநாயகம் பேசி சிறு பத்திரிகைகளோடு மோதுவதும் - சி.பி.எம்.க்கு எதிராக அவதூறு பேசி ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரிவதைத் தவிர! இவர்களது தொழில் பேசுவது நக்சலிசம் ஆனால் சீர்குலைப்பது வர்க்கப் போராட்டத்தை!

அடுத்து இந்த தொடை நடுங்கி புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தை பன்னித் தொழுவம் என்று தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கி என்பார்கள்! இதன் மூலம் இவர்கள் செய்வது என்ன? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் என்று திட்டுவதுதான். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் செயல்படுவார்கள்! இது இவர்களுக்கு பொறுந்தாது! ஏனென்றால் இவர்கள் சி.ஐ.ஏ.-வால் உருவாக்கப்பட்ட சீர்குலைவு என்.ஜீ.ஓ. கம்யூனிஸ்ட்டுகள். அதனால்தான் இவர்கள் நக்சலிசம் பேசி - அதற்காக தங்களது போராடிக் கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் தியாகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருப்பவர்கள்!

இந்த மகஇக என்.ஜீ.ஓ.க்கள் தற்போது இணையத்தின் மூலம் புரட்சியை நடத்துவதற்கு கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தங்களது அணிகளுக்கு இணையத்தில் எப்படி செயல்படுவது என்று வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 டசன் ம.க.இ.க. போலி புரட்சியாளர்கள் தற்போது இணையத்தில் செயலாற்றி வரும் புதிய எழுத்தாளர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை இணையத்தில் இருந்தும் - எழுத வருவதிலிருந்தும் வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதாவது இணையத்திலும் ஆள் புடிக்கிறேன் பேர் வழி என்று கிளம்பி... எல்லாத்துக்கும் நான் சொல்றதுதான் சரி! என்கிற பார்ப்பனீய பாசிச மனோபாவத்தில் அடாவடி அடித்துக் கொண்டிருக்கும் வினவு மற்றும் ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. தொடை நடுங்கிகளை அடையாளம் காண்பீர்! இவர்கள் தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயத்தின் மறுவடிவ புரட்டர்களே என்பதை.

சந்திப்பு 

Monday, January 5, 2009

மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி !

விஜயகாந்த்,ரஜினிகாந்த் போன்ற புரட்சியாளர்கள் முதல்வர்களாக வர வேண்டும் கொடி பிடித்து அலையிற நாட்டில் போலி ஜனநாயகம்,போலி அரசியல்வாதிகளின் கை பிடிக்குள் இருக்கிற நாட்டில்,கம்யூனிச சிந்தனைவாதிகளும் போலி கம்யூனிஸ்ட்டுகளாக அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது

கர்நாடக கம்யூனிஸ்ட்,கேரள, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் அந்த அந்த மாநில உணர்வோடுதான் இருந்தால்தான்  வோட்டு பொறுக்க முடியும் . எடுத்துக்காட்டாக ஒரு தமிழன்.தமிழன் என்ற உணர்வோடு இருந்தால் கேரளாவில் ஒரு சின்ன பெட்டிக்கடை கூட வைத்து பிழைக்க முடியாது. பிழைக்க போன இடத்தில் மலையாளிகளின் உணர்வோடு ஒத்துப் போனால் தான்,அந்த தமிழனால் உயிர் பிழைக்க முடியும்

. இந்த நிலைபாட்டை புரிந்து கொண்டால் தான் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகளை புரிந்து கொள்ள முடியும். இதனால் தான் கேரளா கம்யூனிஷ நாடாக இருந்தாலும்,தண்ணீர் தர மறுக்கிறது.இந்த நடைமுறை உண்மையை உணர்ந்தால் தான் இந்த மண்ணுக்கேத்த புரட்சியை முன்னெடுத்து செல்ல முடியும்.

மொழி,சாதி ,மதம் ,நாடு போன்ற பிரிவினை செய்யாத ஒரு புதிய இந்தியாவை அமைப்பது வெறும் கம்யூனிஷ்டுகள் மட்டுமே செய்ய வேண்டும் என்று குறை கூறி திரிபுவாதம் பேசாமல் அனைவரும் பங்கேற்க,பங்கேற்கபடி  செய்ய வேண்டும்.

 அதை விட்டு விட்டு கம்யூனிஸ்டுகளை குறை கூறுவதால் மட்டும் மகஇக-வே நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் ஆகிவிட முடியாது.

இந்தியாவில் ஊழல் பெருச்சாளிகளின் நிழலின் தான் பொதுவுடைமை ,பெரியார் இயக்கங்கள் வளர வேண்டிய சூழலுக்கு தள்ள பட்டு கிடக்கின்றன.

அந்த கட்சியை  சேர்ந்த தோழர்கள் தங்களின் சொந்த பணத்தை,நேரத்தை,உழைப்பை ஏன் சில சமயங்களில் இரத்தத்தைக் கூட கொடுத்து, தன் குடும்ப நலனை விட,நாட்டு நலனே முக்கியம் என்று பணம், பணம் என்று பணத்துக்கு பின்னால் ஓடும் சராசரி மனிதப் பிணங்களுக்கு மத்தியில் தியாக தீபங்களாக,உண்மையான மனிதர்களாக நடமாடி வருகிறார்கள்.

இவர்களுக்கு நீங்கள் மரியாதை கூட தர வேண்டாம்.அவமானப்

படுத்தாதீர்கள்! இவர்களின் தியாகங்களை கொச்சை படுத்தாதீர்கள்!

  பெரியார் படைத் தளபதி கி.வீரமணி பெரியார் சிந்தனைகளை விற்று காசக்கிறார் என்று ஊளைவிடுகிறீர்கள்.பெரியார் சிந்தனைகளை விற்று காசாக்குவது கடினம்.மக்களை சிந்திக்கிற தூண்டுகிற உண்மைகள் அவைகள். அந்த கடினமான பணியை பெரியாரின் இறப்புக்கும் பிறகும் கூட செய்து பெரியார் இயக்கத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டிய பெருமை,கம்பீரம் தமிழர் தலைவர் கி.வீரமணிக்கு உண்டு.இந்த நல்ல விஷயத்தை முடிந்தால் பாராட்டக் கற்றுகொள்ளுங்கள்.

உங்கள் அணுகுமுறையில்,பேச்சில்,உங்கள் எழுத்தில் அழுகல் வாடை அல்லவா வீசுகிறது?கடவுளை கட்டி அழுகிற முட்டாள் மூடநம்பிக்கைவாதிகளை, முதலாளிகளை காப்பாற்றுகிற பணமுதலைகளின் அசல் குரலாகத்தான் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

ஏ.....! ஓநாய் கூட்டமே!உன் குரலை நீயே உற்றுக் கேள்.அந்த உண்மை உனக்கே புரியும்.!

பொய் முகத்தோடு,பொய் இமெயில் முகவரியோடு,எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு அழுகிப் போன எழுத்துக்களை அள்ளி வீசும் கோழைகளே !நீங்களோ உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்? நீங்களா புரட்சியின் புதல்வர்கள்? அட! மானம் கெட்டவர்களே!

அரசு டாஸ்மாக் சாராயம் விற்ற காசில் ரேஷன் கடையில் சர்க்கரை பொங்கல்,ஒரு ரூபாய் அரிசி என்று இலவசமாக வழங்கும் போலி அரசியல்வாதிகளை தான் நீங்கள் அதிகமாக விமர்சிக்க வேண்டும்? அவர்கள் தானே ஆட்சியில் இருக்கிறார்கள்? 

மிஞ்சிப்போனால் தமிழ் நாட்டுக்குள் வெறும் பத்து இடங்களுக்கும் குறைவாக தேர்தலில் வெற்றி பெறும் (உங்கள் பாணியில் சொன்னால்) போலி கம்யூனிஸ்டுகளின் மீத உங்கள் எழுத்து அசிங்களை அள்ளி வீசுவது? அதிமுக,திமுக,தேமுக,மதிமுக போன்ற நாடு "முன்னேற" உழைக்கும் உண்மையான அரசியல்வாதிகளை,உண்மையான கம்யூனிஸ்ட்டுகளான நீங்கள் விமர்ச்சனம் செய்யுங்கள்! அந்த விமர்சனத்தை பார்த்து புல்லரித்துப் போகும் மக்கள் உங்களுக்கே ஒட்டு போட்டு புளகாங்கிதம் அடைவார்கள்!

எங்களுக்கு யாரும் ஓட்டெல்லாம் போட மாட்டர்கள் என்ற அவநம்பிக்கை உங்களுக்கு தோன்றினால்...

உங்கள் செயல்,நடவடிக்கைகள்,குழுக்களை கலைத்து விட்டு மக்களோடு மக்களாக வாழ முயற்சி செய்யுங்கள்!

பெரியார்,பொதுவுடைமை இயக்கங்களை குறை சொல்லுவது மட்டும்ந்தான் உங்கள் புரச்ச்ச்ச்ச்.....சி அரசியல் என்றால் தயவு செய்து எல்லோரும் நல்ல மன நோய் மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்!

அதுதான் உங்களுக்கும்,மக்களுக்கும்,நாட்டுக்கும் நல்லது!


ஆதிசிவம், சென்னை. www.beyouths.co.cc

Saturday, January 3, 2009

மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமை மகஇக சில கேள்விகள்?

பார்ப்பனீயத்திற்கு எதிராகவும், மக்களுக்கான அரசியல் என்றும் செயல்பட்டு வரும் மகஇக (மக்கள் கலை இலக்கிய கழகம்) அமைப்பின் தலைமையின் மேலும் அந்த அமைப்பின் சில செயல்பாடுகளின் மீதும் சில கேள்விகள் உள்ளன.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான மகஇகவின் நிலைப்பாடு

இடஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் மகஇகவின் நிலைப்பாடு இடஒதுக்கீடு விடயத்தில் மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் சி.பி.எம். (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மா)மின் குரலிலேயே பேசினால் கூட பரவாயில்லை அதையும் விட மோசமான பார்ப்பனீய ஆதரவு குரலில் பேசுகின்றன(பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுவது போன்ற தோற்றமளிக்கும் ஆனால் செயல்முறையில் பார்ப்பனீயத்துக்கு ஆதரவான குரல் தான் அது) இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படிக்கும் வரை இடஒதுக்கீடு பற்றிய இவர்களின் கருத்துகளை இந்திய சமூக சூழலில் மண்டியுள்ள சாதிய சமூக தாக்கங்களை பார்க்காமல் வெறுமனே எதையும் வர்க்க வேறுபாட்டோடு மட்டுமே பார்க்கும் கம்யூனிஸ்ட்களின் பார்வையே என்று நினைத்திருந்தேன், ஆனால் இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படித்த போது தான் இவர்கள் கம்யூனிஸ் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவை விட ஆபத்தான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது, அதையும் விட ஆபத்தானது இவர்களின் நிலைப்பாட்டை எதிர்க்க போகும் போது அதை எதிர்ப்பவர்களை மிக எளிதாக தீண்டாமையை ஆதரிப்பவர்களாக காண்பிக்க இயலும் என்பதே இதில் மிகவும் ஆபத்தானது.

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் மறுப்பு எழுத இயலும் (இடஒதுக்கீடு பற்றி சில புத்தகங்கள், சில நேரடி அனுபவங்கள், சில கட்டுரைகள் எழுதிய என்னாலேயே முடியும் போது) இடஒதுக்கீட்டு ஆதரவு அறிவு ஜீவிகள் அவர்களின் வாதங்களை நொடிப்பொழுதில் தூளாக்க முடியும்.இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டின் நியாயங்களை Reverse Descrimination, Revenge என்பதுவே என்பது போன்ற கருத்தியலை முன் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவு ஜீவிகள், ஊடகங்கள் வாதத்தை வலுப்படுத்தும் விதமாகவே இவர்களின் தர்க்கம் அமைகின்றது.

முதலாளி தொழிலாளி என்று இரட்டை வர்க்கங்களை மட்டுமே உலகில் உள்ளன என்பவர்கள் போலும் இவர்கள், இந்திய சமூகத்தில் முதலாளி, தொழிலாளி வர்க்கப்பிரிவு முதல்நிலை வர்க்கப்பிரிவு அல்ல, சாதிய வர்ணப்பிரிவு தான் முதல் நிலை பிரிவு, அதுவும் கூட முதலாளி தொழிலாளி என்ற சரியான கோடு இழுத்து பிரிக்கப்பட்டதல்ல இந்த சாதிய வர்ணப்பிரிவுகள், சாதிய வர்ணப்பிரிவு என்பது படிநிலை , அடுக்குமுறை சமூகநிலை, எனக்கு கீழே நீ, உனக்கு கீழே இவன், இவனுக்கு கீழே அவன் இப்படியாக பிரிக்கப்பட்டுள்ள இந்த படிநிலை சமூகத்தில் நமக்கு கீழ் இருப்பவனை மேலே வராமல் பார்த்துக்கொண்டிருப்பதிலே மோதிக்கொண்டிருப்பதிலே எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டே மற்றவர்களின் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த படிநிலை அடுக்குமுறை சமூகத்தில் மூன்றாம் இடத்தில் இருப்பவனும் முதலிடத்தில் இருப்பவனும் ஒன்றா? ஒன்று தான் என்கிறது மார்க்சிய லெனினிய பார்வை, மிக மிக மோசமான ஒன்றையும், மோசமான ஒன்றையும் சமம் என்று கூறுவது மிக மிக மோசமானதற்கு சாதகமாகவே அமையும், படிநிலை அடுக்கின் மேலே இருப்பவனும் மூன்றாம் நிலையில் இருப்பவனும் ஒன்றா? மேலே இருப்பவன் செய்யும் செயலின் பிண்ணனியும் மூன்றாம் இருப்பவனின் செயலில் பிண்ணனியும் ஒன்றா? எதற்காக இத்தனை தூரம் தலையை சுற்றி மூக்கை தொடுகிறேன் என்றால் நேரடியாக அவர்கள் கூறும் விடயத்தை எதிர்த்தால் மிக எளிதாக என்னை தீண்டாமையின் சாதிக்கொடுமையின் ஆதரவாளனாகவும் முத்திரை குத்த இயலும், நேரடியாக இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை மிக எளிதாக சமாளிக்க இயலும், ஆனால் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் என்ற போர்வையில் அதே இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை சமாளிப்பது


மிக கடினமான ஒன்று அவர்களின் வேடத்தை களைப்பதற்கு கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும், அப்படி என்ன சொல்கிறார்கள் என்றால் தீண்டாமையை சாதி மேலாதிக்கம் செய்யும் சாதிக்கு இடஒதுக்கீடு கொடுக்க கூடாது, அட நியாயமாத்தானே சொல்லியிருக்காங்க என்று உடனே தோன்றினாலும் இந்திய அடுக்கு முறை படிநிலை சமூகத்தில் இப்படியான ஒரு காரணியின் மூலம் இடஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டுமெனில் தலித்களுக்கு கூட இடஒதுக்கீடு அளிக்கப்படாது, பள்ளர்கள், பறையர்கள் வேறு பாடு உயர்வு தாழ்வு, அருந்ததியர்களின் மீதான உயர்சாதி தலித்களின் தீண்டாமை அதே அருந்ததிய சாதியினர் அவர்களுக்கு துணி துவைத்து போடும் மற்றொரு சாதியினர் மீது நடத்தும் வன்கொடுமை என தலித்களுக்கே கூட இடஒதுக்கீடு கிடைக்காது. யாருக்குமே இடஒதுக்கீடு தர தகுதியில்லாத நிலைவந்தால் யாருக்கு இலாபம், யோசித்து பாருங்கள் யாருக்கு இலாபம்? உயர்த்தப்பட்ட சாதியினருக்குதானே? பார்ப்பனர்களுக்கு தானே? மகஇக சொல்வது போல செய்தால் யாருக்குமே இடஒதுக்கீடு கிடைக்காது.

தமிழ்தேசியம், இந்திய தேசியம் நிலைப்பாடுகள்

மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் தேசியத்தை ஆதரிக்கின்றன, அதாவது இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன, தமிழ் தேசியம் என்பதோ, மொழி வாரியான தேசியங்களோ, இனவாரியான தேசியங்களோ அவர்களை பொறுத்தவரை கெட்ட வார்த்தைகள் ரொம்ப கெட்ட வார்த்தைகள். புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் கம்யூனிச பாதையிலிருந்து பிரிந்து தமிழ் தேசியத்திற்காக போராட ஆரம்பித்ததே அவர்கள் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி மொழி இன வாரியான தேசியத்தை ஆதரிக்காதது, தேசியம் என்பது அந்தந்த இனக்குழுக்கள் உரிமைகள் கிடைக்கவில்லை என்றோ அல்லது எதற்காகவோ பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து செல்வது அவர்களின் உரிமை, பிரிந்து செல்லக்கூடாது என்பது சர்வாதிகார அடக்குமுறை என்றார் அவர், அடக்குமுறைக்கு எதிரானதாகவும் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் என்பவர்களும் தேசியம் என்ற அடக்குமுறைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் இந்திய தேசியம் யாருக்கு ஆதரவான தேசியம்? பெரியார்தாசன் மகஇக கூட்டத்திலே பேசியதை அவர்களே கவனித்திருக்கின்றார்களா? வெவ்வேறு இனம் மொழி கலாச்சாரத்தில் இருக்கும் இந்திய தேசியத்தை ஒன்றாக இணைப்பது பார்ப்பனர்களின் பூணுல் என்றார். மேலும் தமிழ் தேசியத்தை கருத்தளவில் ஆதரிக்காதவர்களை தமிழ் தேசியத்தை கருத்தளவில் கூட எதிர்ப்பவர்களை நாங்கள் ஆதரிக்க தயாராக இல்லை.

தமிழீழ நிலைப்பாடு

இது பற்றிய மிகப்பெரிய கள்ள மௌனமே சாதிக்கின்றது மகஇக, இவர்கள் தமிழீழத்தை ஆதரிக்கிறார்களா? தமிழீழம் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கிறார்களா?(அவர்களுடைய தேசிய அரசியல்படி பார்த்தால் தமிழீழம் பிரிவதை எதிர்ப்பார்கள் என்றே கணிக்க தோன்றுகின்றது) அப்படி எதிர்க்கிறார்கள் என்றால் தமிழர்கள் மீதான இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதம் பற்றிய நிலைப்பாடு என்ன? அப்படி சிங்கள இனவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றால் தமிழீழம் தனியாக பிரிவதை தவிர வேறு என்ன தீர்வை தமிழர்களுக்காக வைத்திருக்கிறார்கள்? (சிங்கள பாட்டாளிகளும் தமிழ் பாட்டாளிகளும் இணைந்து தமிழ்-சிங்கள் முதலாளிகளுக்கு எதிராக போராட வேண்டுமென்று கோரிக்கை எதுவும் வைத்து காமெடி கீமெடி செய்துவிடப்போகிறார்கள் - இதை சொன்ன வலைப்பதிவாளருக்கு நன்றி) தமிழீழ விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பவர்களை எப்படி நம்புவது?

தமிழ் மொழி, தமிழ் இனம்

மகஇக தமிழ்மொழி, தமிழினம், மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமை, வேற்று மொழியாதிக்கம் பற்றியெல்லாம் பேசியதாக தெரியவில்லை, அல்லது ஈனக்குரலில் பேசியிருக்கும், ஆனால் தமிழிசை விழா மட்டும் ஆண்டு தோறும் எடுக்கப்படும், தமிழ்மொழி , தமிழினம் இல்லாமல் எங்கிருந்து தமிழிசை மட்டும் வந்தது? மொழி வேண்டாம், இனம் வேண்டாம் அந்த மொழியின் இசை மட்டும் வேண்டும், இதன் பிண்னனி மிக ஆபத்தானது மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமைகள், தமிழின உணர்வு (தமிழ் மொழியையும் தமிழினத்தையும் பிரித்து பார்க்க முடியாது)கள் தமிழிசையை விட பார்ப்பனியத்துக்கு மிக ஆபத்தானது. தமிழ்மொழி இன உணர்வோடு தமிழிசையையும் செயல்படுத்துவதே சரியானதாக இருக்கும், அதை விடுத்து தமிழ்மொழி இனத்தை புறக்கணித்து விட்டு தமிழிசையை மட்டும் முன்னெடுப்பது பெரும் சந்தேகத்துக்குறியதே.

கனிமொழி இசை விழா நடத்தியதை இவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இவர்கள் நடத்தினால் அது பெருமை.அடுத்தவர் நடத்த கூடாதா?(அந்த விமர்சனத்தை பற்றி அவர்கள் கூறியது என்னவென்றால் அந்த இசைவிழா பழமையை போற்றி நிகழ்காலத்தை மறக்க வைக்கிறது என்பதாக இருந்தது)

திராவிட ஆரிய கருத்தாக்கம்

திராவிடம் ஆரியம் என்ற பேச்சையே ஆரம்பிக்க கூடாது தோழர்களிடம், உடனே சொல்வார்கள் அதெல்லாம் இப்போ எங்கே? அப்படியாகவே இருந்திருந்தா கூட பல ஆயிரம் ஆண்டுகால இனக்கலப்பில் அதெல்லாம் இல்லையே போயிந்தே, இட்ஸ் கான் என்பார்கள், அப்புறம் ஏனய்யா உயர்த்தப்பட்ட சாதிக்கும் இடையில் உள்ள சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே தோல் நிறத்திலேயே வேறு பாடு இருக்கிறதே, ஒரே மாதிரியான காற்று, நீர், வெப்பநிலை ஆனால் வர்ணம் மட்டும் மாறுபட்டு இருக்கிறதே என்றால் மொத்தமாக வாயை பூட்டு போட்டு மூடிக்கொள்வார்கள் இவர்கள் திராவிடம் என்ற வார்த்தையை கேட்டாலே அலறுவதற்கு கண்டிப்பாக திராவிட கட்சிகளே காரணம், திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணிப்பதன் மூலம் திராவிட கட்சிகளை திராவிட அரசியலை ஏற்காதது, திராவிட கட்சிகளை அட கட்சிகள் கூட வேண்டாம் திராவிட அரசியலை மக்கள் ஏற்காமல் இருக்க செய்வதன் மூலம் மறைமுகமாக பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மற்றெதையும் விட திராவிடம் என்ற வார்த்தையே பார்ப்பனீயத்துக்கு எதிரான பெரும் கலகச்சொல், திராவிடம் பார்ப்பனியத்திற்கு ஏற்படுத்தும் கிலியை வேறெதுவும் ஏற்படுத்தாது, ஏற்படுத்தியதில்லை.

பார்ப்பனியத்தை எதிர்க்கும் கட்சிகளின் மீதான கடும் விமர்சனங்கள் 

மிக மிக மோசமான ஒன்றையும் மோசமான ஒன்றையும் சமமென்று ஒப்புமைபடுத்துவது மிக மிக மோசமானதற்கு ஆதரவாகவே அமையும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் மற்ற கட்சிகள் இயக்கங்களின் சில முரண்பாடுகளை வைத்து அக்கட்சிகளின் மீதும் தலைவர்களின் சில தவறுகளை வைத்து அவர்களின் எல்லா நோக்கங்களையும் முயற்சிகளையும் வரைமுறையற்று ஆதாரமற்று தாக்குவதும் விமர்சிப்பதும் அவர்கள் எதிர்க்கும் பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் என்பது தெரியாதா மகஇக வின் தலைமைக்கு? ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் நீர்த்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு கொள்கை பிடிப்பானவர்கள் மேலும் அதில் உள்ளே செல்லாமல் தடுப்பதன் மூலம் அந்த கட்சிகளை முழுமையாக நீர்க்க செய்தால் அது பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் அதனால் கொள்கைபிடிப்பானவர்கள், தீவிரமாக இயங்கக்கூடியவர்களை அந்த கட்சிகளினுள் செல்வதை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே இதை சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது, ஏனென் இப்படியான சந்தேகமெனில் வீரியம் மிக்கவர்கள் கொள்கை பிடிப்புள்ளவர்கள் இருந்தும் 1990லிருந்து இப்போதுவரை 17 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன்? தீவிரமான செயல்திறன் மிக்கவர்களை வெகுசன இயக்கங்களில் இணைந்து பங்களிப்பு செய்யாமல் இருப்பதை தடுத்து இந்த இயக்கத்தில் அமுக்கி இந்த இயக்கமும் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காகவே

பார்ப்பனியத்தை எதிர்க்கும் மாற்று கட்சிகளின் மீதான இந்த வரைமுறையற்ற கடும் தாக்குதல் என்று சந்தேகபடலாமே? கொள்கை விமர்சனங்கள் என்பதை தாண்டி மேலே சேறடிக்கும் சவுக்கடிகளை விமர்சனங்கள் என்ற வரையறையிலா எடுக்க முடியும்?

மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமை

இந்த மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமைகளை கண்டாலே எமக்கு ஒவ்வாது, புலவர் கலியபெருமாள் மற்றும் பல போராளிகள் களத்திலே இறங்கி போராடிக்கொண்டிருந்தபோது கம்யூனிஸ்ட்(மா.லெ.) மற்றும் இணை துணை கம்யூனிச குழுக்களில் கோலோச்சிய இந்த மாதிரியான மிடில் கிளாஸ் அறிவு ஜீவி குழுக்கள் தான் இவர்களை தாறுமாறாக விமர்சித்துக்கொண்டும், யார் இயக்கத்தில் இருக்க வேண்டும் இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அதிகாரம் செய்து கொண்டுமிருந்தார்கள், இவர்களை பற்றி எஸ்.வி.இராஜதுரை தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார், அப்படியான ஒரு மிடில் கிளாஸ் அறிவு ஜீவி தலைமை தான் இன்று மகஇக வில் அமர்ந்து கொண்டுள்ளார்கள்.மக்கள் போர் படை (PWG) கணபதி போன்றவர்கள் மகஇக தலைமையை இந்திய ஏஜென்சிகளின் கையாட்கள் என்றே விமர்சித்துள்ளதாகவும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருப்பதாகவும் படித்திருக்கிறேன், அது தொடர்பான கட்டுரைகள் எங்கேயாவது கிடைக்கிறதா என்று நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.

பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமை பார்ப்பனரல்லாதோராக இருந்தால் அவர்கள் 100 % சந்தேகத்திற்கிடமின்றி இருந்தாலே போதுமானது, ஆனால் 
பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமையே பிறப்பால் பார்ப்பனராக இருந்தால் அந்த தலைமை 200 % சந்தேகத்திற்கிடமின்றி இருக்க வேண்டும் ஆனால் மேற் குறிப்பிட்ட சந்தேகங்களினால் மகஇக தலைமை 50% கூட சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கவில்லை என்பது சர்வ நிச்சயம். மேலும் ம க இ கவின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், எதை நோக்கி செல்கிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாக இல்லை. இதுவே இன்னமும் அதிகமாக சந்தேகப்பட வைக்கின்றது.

மகஇக தோழர்களுக்கு

தோழர்கள் கோபப்பட்டு எனக்கு ஐ.எஸ்.டி போனெல்லாம் போட்டு காசு செலவு செய்ய வேண்டாம், அப்படியும் போன் செய்யவேண்டுமென்று ஆசைப்பட்டால் வரவனை செந்திலிடம் என் கை பேசி எண் இருக்கின்றது வாங்கிக்கொள்ளுங்கள்.


Friday, January 2, 2009

ம.க.இ.க-வின் சந்தேகத்துகுரிய தலைமை

இருக்கும் மார்க்சியர்களில் கொஞ்சம் தீவிரமாக உண்மையான மக்கள் பணியில் இருப்பவர்கள் ம.க.இ.க தோழர்கள் என்பதில் நமக்கு மாற்று கருத்துகிடையாது. அதே வேளை உலகத்தில் யாரையுமே ஒப்புக்கொள்ளமாட்டோம் ,நாங்கதான் பெரிய புடுங்கி என்றும் பிற இயக்கத்தலைவர்களையும்,இயக்கங்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுவதுதான் புதிய ஜனநாயகபூர்வமான (அ )!!! புரட்சிகர வழிமுறை என்று கொண்டிருப்பது இலேசான புன்னகையைமட்டுமே வரவழைக்கிறது. இத்தனையாண்டுகாலத்தில் 2000க்கு பிறகே பார்ப்பனியம் என்கிற பதத்தை பிரயோகிக்க துவங்கியதும் கட்சியின் தலைமைப்பொறுப்பில் பார்ப்பனர் இருப்பதும் ஊரரியாத ரகசியங்களா என்ன?

இருந்தும் தோழர்களே, உங்களின் பன்னாட்டு நிறுவன எதிர்ப்பிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் "சந்தேகம்" கொள்ளாத தோழர்கள் பெரியாரிய இயக்கங்களிலும் உண்டு. "மாமா" ஆசிரியர் வீரமணியா இல்லை தோழர். மருதையனா என்பது தேவையில்லாத விவாதம்.

http://kuttapusky.blogspot.com/2007/06/blog-post_25.html