Monday, July 21, 2008

காரப்பட்டு: (விவிமு) மகஇக அழித்தோழிப்பு வெறியாட்டமும்: இனையத்தில் பொய்பிரச்சாரமும். சாதிவெறி தலைமையும்! கிரிமினல் தொண்டர்களும்!

தலித் மக்களான உழைக்கும் வர்க்கத்தினர்கள் மீது இரக்கமின்றி நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அராஜகம்.! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு போலி மக்கள் புரட்சி!

1967 இல் இளம்பிள்ளவாத கோளாரின் காரணமாக சீர்குலைவாளர்களின் நக்சல்பாரி சிபிஐ எம் எல் இயக்கம் துவக்கப்பட்டது. அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம் தான் சரி என்பது அவர்களது கொள்கையாகும் . இந்த அணுகுமுறையே மிக செயற்கையானதாகும். அந்தப் பகுதியின் நிலைமை என்ன , பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே கிடையாது. கண்மூடிதனமான வழியில் தான் அழித்தொழிப்புக்கு ஆட்களைத் தயார் செய்தார்கள். அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது.

இந்தியாவின் ஓர்ஜினல் புரட்சியாளர்கள் இவர்கள்தான் என்று இந்த இயக்கத்திற்கு வந்த அப்பாவி தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாக புரட்சி வரும் , சமூகம் மாற்றம் பெறும்’ என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள் புரட்சிகரவாய்வீச்சில் உள்ள வேகம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள். அழித்தொழிப்பு யாரை எதிர்த்து என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத காரணத்தினால் உணர்ச்சிகராமக வேலைசெய்த பல தோழர்கள் வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

ஆனால் தொடர்ந்து கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கைகூலியாக செயல்பட்ட சிபிஐ எம் எல் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிரிந்து அழித்தொழிப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வழிபறி போன்ற கேவலமான சீர்குலைவு நடவடிக்கைகளை புரட்சி என்ற லேபில் ஒட்டி செயல்பட்டு வருகின்றனர்.

நந்திகிராம் அதற்கு ஒரு நாடறிந்த எடுத்துக்காட்டு. நக்சல்பாரிகளின் துரோகத்தை எங்கெல்லாம் மார்க்சிஸ்டுகள் எதிர்க்கிறார்களோ ! எங்கெல்லாம் மார்க்சிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளால் இவர்கள் அம்பலமாகிறார்களோ! அங்கெல்லாம் அரசியல் படுகொலைகளை நிகழ்த்த புரட்சிகர போலி நக்சல் கும்பல் தயங்குவதில்லை. மேற்குவங்கத்தில் மட்டும்மல்ல தமிழகத்தில் நல்ல எடுத்துகாட்டு காரப்பட்டு.

விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போன விவிமு (மகஇக) கட்சிக் காலிகள் அங்கே ஒரு அரசியல் படுகொலை நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் காரப்பட்டு இராசேந்திரன் (45) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ( இவர் முன்பு விவிமுல் இருந்து அவர்களின் பொரிக்கி தின்னும் நடவடிக்கையில் பங்கு கிடைக்காமல் தேமுதிகவிற்கு மாறிவிட்டார். எங்கே அவர் வெளியே சென்று தங்களது கட்டப்பஞ்சாயத்து காளித்தனங்களை வெளியே சொல்லிவிடுவாரோ என பயந்து அவர் மீது அழித்தொழிப்பு நடவடிக்தைக எடுக்க திட்டமிட்டனர்.)

இந்தப் அழித்தொழிப்பு தற்செயலாக நிகழ்ந்து விடவில்லை. மொத்தத் தாக்குதலையும் மகஇக(விவிமு) கட்சியின் விழுப்புரம் மாவட்டத் அமைப்பாளர் ராமசாமி என்ற நபரே திட்டமிட்டு கொடுத்துள்ளார். இவர் யோக்கியதை என்ன தெரியுமா ஜெயலலிதாவிற்கு புரட்சிதலைவி என்ற பட்டம் கொடுப்பதும். முசோலினி தனது கட்சியின் பெயரை சோசலிச கட்சி என்று வைத்து கொண்டதும் எப்படி கேவலத்திற்கு உரியதோ அப்படி தலித் மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டழவிழ்த்துவிடும் இந்த ராமசாமி தனது பெயரை ராமசாமி அம்பேத்கார் என்று வைத்துகொண்டுள்ளார். (மகஇக பொறுக்கிகள் இந்த கட்டுரைக்கு வழக்கம் போல பொய்யான மறுப்பு தெரிவித்தால் ராமசாமியின் முழுகதையும் அடுத்த கட்டுரையில் வெளியிப்படும்)

1978 ஆம் ஆண்டு முதல் போலி நக்சல் கும்பலின் பிடியில் அந்த காரப்பட்டு கிராமம் இருந்து வருகிறது. இங்கு மட்டும் இவர்கள் செயல்பட அடிப்படைகாரணம். இது ஆதிசாதிக்க சாதியின் அமைப்பாக இருப்பதுதான், கடந்த உள்ளாட்சி தேர்தலில்தான் முதல் முறையாக அந்த கிராமமக்கள் வாக்களித்து உள்ளனர். இதுநாள்வரையிலும் விவிமுவினரின் அராஜக மிரட்டலால் தேர்தல் புறக்கணிப்பில் மக்கள் தள்ளப்பட்டுவந்துள்ளனர்.

இந்த சூலில் 1986ம் ஆண்டு இவர்களின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்த இளைஞர்கள், உழைப்பாளி மக்கள் சிபிஎம் கட்சியை அந்த ஊரில் துவக்குகின்றனர். உண்மையான புரட்சிகர செங்கொடி இயக்கம் அங்கு வேர்விட துவங்கியதும். இந்த போலி கம்யூனிஸ்ட்டுகளுக்கு பிரச்சனை ஆரம்பமாகிறது.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் சிபிஎம் வெற்றி பெறும் என்று தெரிந்தவுடன் விவிமுவினர் எந்த அளவு கேவளமாக சென்றார்கள் தெரியுமா?

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது முதல்முறையாக அவர்கள் ஓட்டுபொறிக்கி வேலையை மிகப் சிறப்பாக செய்து, சாராயம் ,மற்றும் பணத்தை வாரியிரைத்து அஇஅதிமுக வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தாயசத்தில் வெற்றி பெற வைத்தனர். ஏன் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்தனர் தெரியுமா ? தாங்கள் நேர்ரடியாக ஓட்டு போரிக்கினால் கைஅழுக்காவும் என்பதால் இந்த ஏற்பாடு. இதுதான் இவர்களின் வீரம்.

இந்த தேர்தலின் பிறகு சிபிஎம் கட்சியை சார்ந்தவர்களின் மீது 6 முறை தாக்குதல் தொடுக்கபட்டுள்ளது. குறிப்பாக தேர்தலில் விவிமு அஇஅதிமுக தேர்தல் கூட்டணியை அம்பலபடுத்தி தேர்தல் பணி செய்த சிபிஎம் தோழர் ராமுவின் குடும்பம் அழித்தொழிப்புக்கு உள்ளாக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜுன்மாதம் 14ந்தேதி சிபிஎம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இவர்களின் தேர்தல் பித்தலாட்டங்கள் கட்டபஞ்சாயத்து போன்ற செயல்கள் அம்பலபடுத்தப்ட்டது.

அதன்பிறகு 15ந்தேதி மகஇக(விவிமு) மக்கள் கமிட்டி கூட்டம் அறைக்கூட்டமாக நடத்தப்பட்டு அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களையும் குறிப்பாக மகஇக(விவிமு) இருந்து வெளியேறிய தற்போதைய சிபிஎம் ஆதரவாளர் ராசுகன்னுவையும், தேமுதிகாவில் சேர்ந்துவிட்ட ராஜேந்திரனையும் தீர்த்துகட்டுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

இந்த கூட்டத்தின் தகவலை அறிந்து, சிபிஎம் தோழர்களுக்கு ஆபத்து என்பதை விளக்கி 16 ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . (விவிமு) மிது 17ந்தேதியும் 18ந்தேதியும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தங்கள் கட்சியிலிருந்து தே.மு.தி.க சென்ற இராசேந்திரனும், சிபிஎம்-ல் இருக்கும் ராசுகண்னுவும், சிபிஎம் தோழர்களும் விவிமு அதிகாரத்தை ம்க்கள் மத்தியில் மங்கச் செய்ததால் இவர்கள் மீது வன்மம் கொண்டு அலைந்தனர்.

சிபிஎம் தோழர்களை கொலை செய்வது, பழியை ராஜேந்திரன் மிது போடுவது என்ற நோக்கத்துடன் அப்பாவி ராஜேந்திரனை 19ம் தேதி இரவு சந்தித்து மறுநாள் மாலையில் அழித்தொழிப்பு பணி உள்ளது. நீ வரவேண்டும் இல்லையெனில் கொலை செய்யப்டுவாய் என்று மிரட்டி அவர் கடப்பாரையை கொடுத்துச் செல்கின்றனர். இந்த தகவலை உயிர் பயத்துடன் ராஜேந்திரன் தனக்கு நெறுக்கமான சிலரிடம் சொல்கிறார். இவர் சொன்னது விவிமு தலைமை காதுக்கு செல்கிறது. அப்போதுதான் ராஜேந்திரன் உயிரோடு இருந்தால் தனக்கு எதிராக சாட்சியாக மாறிவிடுவார் என்று அவறையும் கொலை செய்ய திட்டமிட்டடனர்.

இந்த சுழலில் 20ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராமு இருவரும் சுடுகாட்டு பக்கம் சென்றுகொண்டு இருந்த போது ஏழுமலை தலைமையில் 4 பேர் கொண்ட விவிமு கொலை கார கூட்டம் இவர்களை கொலைசெய்யும் நோக்குடன் தாக்குகின்றனர் சிபிஎம் தோழர்கள் இரண்டு பேராக இருந்தாலும் விவிமு கூலிகளை வீரத்தோடு எதிர்த்து தாக்குகின்றனர். அடிதாங்க முடியாமல் ஏழுமலை மற்றும் அவனது கையால் கூட்டம் இன்னும் சிலரை அழைத்து வர ஓடுகின்றனர். அந்த நேரம் முன்நாள் மிரட்டப்பட்ட ராஜேந்திரன் இராஜேந்திரன் கட்டப்பாரையுடன் அங்கு ஓடிவருகிறார் சிலர் அவரை தடுதது பார்த்தனர் அவர் கேட்க்காமல் வேகமாக வரும்போது தடுக்கி விழும்போது கடப்பாரை அவர் வயிற்றில் குத்திவிடுகிறது.

இந்த நேரம் சிபிஎம் தோழர்களால் அடித்து விரட்டப்பட்ட ஏழுமலை தலைமையிலான விவிமு மகஇக கூட்டம் கொலை வெறியுடன், ஆயுதங்களுடன் அங்கு வருகின்றனர். அங்கு சிபிஎம் தோழர்கள் இல்லை இருந்தது அடிப்பட்டு கிடந்த ராஜேந்திரன் மட்டுமே? கொலை வெறியல் வந்த ஏழுமலை நேற்று "இரவு போட்டு கொடுத்த" ராஜேந்திரனை போட்டால் பழி சிபிஎம் மீது விழும் என்று கணக்கிட்டு அவரை சாமாரியாக வெட்டுகின்றனர் முதலில் வெட்டு விழுந்த பின்னர்தான் புரிகிறது. யாறுக்கு ஆதராவா வந்தோமோ அவர்களே வெட்டும்போது ""அஞ்சு பொம்பளப் புள்ளங்கடா, வேணாண்டா,என்ன வெட்டாதீங்கடா'' உங்களுக்காதான் வந்தன் என்று கதறியிருக்கிறார். தலையில் அரிவாள் இறங்கியவுடன் அந்தக் கதறலும் நின்றுவிட்டது

இதை தடுக்கவந்த பொதுமக்களையும் சிபிஎம் தோழர்களையும் கடுமையாக தாக்கியதில் 3 ஆண் தோழர்கள் 2 பெண் தோழர்களை கடுமையாக தாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். சம்பவ இடத்தில் துடித்துக்கொண்டு இருந்த ராஜேந்திரன் விட்டு விட்டு ஓடிய மகஇக (விவிமு) யோக்கிதையை பாருங்கள். பிறகு சிபிஎம் தோழர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து ராஜேந்திரளையும் பலத்த காயம் அடைந்த 5 தோழர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தாலும், அபாயகரமான நிலையில் சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இராசேந்திரன் வழியில் திண்டிவனத்திலேயே இறந்துவிட்டார்.

இதன் பிறகும் அவர்களின் புரட்சிகர புரட்சி வேலைமுடியாதால் விவிமு விழுப்புரம் மாவட்டஅமைப்பாளர் ராமசாமி தலையில் திரண்ட போலி நக்சல் கொலைகார கும்பல் திட்டமிட்டு தோழர்களை கொலை செய்யும் நோக்கோடு மேட்டுத் தெருவில் இருந்த சிபிஎம் ஆதரவாளர்களின் வீடுகளில் புகுந்து அங்கிருந்த முதியவர்களையும் பெண்களையும் தாக்கியிருக்கின்றனர்.

வீடுகளை அடித்து நொறுக்கியதுடன், 120 பவுன் நகைகள், 30வீடுகளில் இருந்த டிவி உள்ளிட்ட பொருள்களை கொள்ளை அடித்தும் .அவர்களின் உடைமைகளான 2 பவர் டிரில்லர்களையும், 3 மோட்டார் பம்புகளையும் 1 மினி லோடுகேரியர் வன்டியையும் அடித்து நொக்கியும் தீ வைத்து கொலுத்தியும் இ சுமார் ரூ. 200000 லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட இராசேந்திரன் அவர் துவக்கம் முதலே விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்து செயல்பட்டார். வி.வி.மு.வினரின் போலி கொள்கையினை முன்னரே தெரிந்து இருந்தாலும் கொள்ளையடிப்பதில் பங்கு கிடைக்காத காரணத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வி.வி.மு.விலிருந்து விலகினார். சிறிது காலம் கழித்து தே.மு.தி.க.வில் இணைந்தார். அவரை அழித்தோழிப்பு உள்ளாக்க திட்டமிட்ட நிலையில் சிபிஎம்யை தீர்த்துகட்டும் பிரச்சினையை சாக்காக வைத்து வி.வி.மு. வினர் அவரை திட்டமிட்டு தீர்த்து கட்டிவிட்டனர்.

இது ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை . ஜுன் 21ஆம் தேதி வி.வி.முகள் ராமசாமி தலையில் காரப்பட்டில் நடத்திய மக்கள் கமிட்டி கூட்டத்தில் சிபிஎம்க்கு எதிராகப் பொய்களையும் அவதூறுகளையும் நஞ்சாகக் கக்கியதுடன் "சிபிஎம். வை ஒழித்துக் கட்டுவோம்!' என்று பிரகடனமும் செய்திருக்கிறார்கள்."சிபிஎம். யை சேர்ந்தவர்கள் யாருடைய வீடு இருக்க கூடாது அவர்களின் உடமைகள் ஏதுவும் இருக்ககூடாது. அவர்களின் விவசாய பயிர்களை அழித்துவிடுவது.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் , ஆகியவற்றை பொது நிதியாக்குவது. அவர்களின் நிலங்கள், விடுகள் உடமைகள் வி.வி.முகளின் சொத்துகளாக்குவது .சிபிஎம் கட்சி சேர்ந்தவர்களோ , ஆதரவாளர்களோ இந்த கிராமத்தில் வாழவேண்டுமானால் அவர்கள் கட்சி விட்டு வரவேண்டும் . எழுத்தபூர்வமாக எழுதி தரவேண்டும் இல்லை என்றால் எல்லாறையும் அழித்தோழிப்புக்கு உள்ளாக்குவது என் பாசிச வெறியோடு செயல்பட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லைபோலீசுக்கும் வி.வி.முகளுக்கும் இடையே நிலவும் தொழில்முறைக் கூட்டினை திருவெண்ணெய் நல்லூர் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகள் தெளிவாக நிரூபித்தன.

இன்ஸ்பெக்டரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் "பணப் பட்டுவாடா' முடிந்து விட்டதை நிரூபித்தன. கொலை வழக்குச் செலவுக்கு கொள்ளையடித்த பணம்! இது வி.வி.முகளின் கிரிமினல் மூளை கண்டிருக்கும் வளர்ச்சிக்குப் புதியதொரு சான்று!

பாதிக்கப்பட்டு சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளான சிபிஎம் தோழர்களும் ஆதர்வாளர்களும் ஜுலை மாதம் 11ந்தேதி வரை யாறும் வீடு திரும்பாத நிலையில. மீண்டும் அழித்தொழிப்பு வேலைகளை குறிப்பாக தலித் பகுதி தோழர்கள் மீது நடத்தப்படுகிறது.

12ந்தேதி தோழர் ராஜகன்னு வீடும் அவரது அண்ணன் வீடு கொளுத்தப்படுகிறது.

இது குறித்து 15ந்தேதி கலக்டரிடம் புகார் அளிக்கப்ட்டது . அன்று இரவே சிபிஎம் தோழரின் அப்பாவான சுப்பரமணி என்பவரின் வீடு கொளுத்தப்பட்டது.

17ந்தேதி சிவப்பிரகாசம் என்ற சிபிஎம் ஆதரவாளர் வீடு கொளுத்தப்படுகிறது. ஆகமொத்தம் நான்கு விடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. இதுவரை எந்த நடவடிக்கையும் காவல் துறை எடுக்கவில்லை

"பெண்ணைக் கற்பழித்து விட்டால் பிறகு தாலி கட்டி விடலாம்' என்று தமிழ் சினிமா ஹிரோ போல அவர்கள் சிந்திக்கிறார்கள். கைகூலிகள், கற்பனைவாதிகளை உறுப்பினர்களாகவும், கிரிமினல்களைத் தலைவர்களாகவும் கொண்டுள்ள ஒரு கட்சி வேறு எப்படிச் சிந்திக்கும்? நந்திக்கிராமில் வெளிப்பட்டது வெறும் வன்முறையல்ல அதுதான் "போலி நக்சல் மூளையின்' சிந்தனை முறை என்பதற்கு காரப்பட்டு இன்னுமொரு சான்று.மேற்கு வங்கத்தில் பிஜேபி, மம்தா ஆகிய அனைத்து பிற்போக்கு சக்திகளுடன் உள்ள காதல் விழுப்புரம் காரப்ட்டுவரை தொடர்கிறது.

தமக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அங்கே போலீசுக்கோ கோர்ட்டுக்கோ போக கூடாது. பணப் பரிவர்த்தனையும் நிலப்பரிவர்த்தனையும் கூட விவிமு வின் கட்டப்பஞ்சாயத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றுவருகிறது. அந்த அளவுக்கு மக்களிடையே மறைமுக கட்சி நாங்கள் எங்களிடம் நவின துப்பாக்கிகள் உள்ளன. நாடுமுழுவதும் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது. மீறி யாராவது நடந்தால் கடுமையான அழித்தொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதை சொல்லியே கள்ளச்சாராய விற்பனை அங்கே அவர்களின் அனுமதியோடும் நடத்தப்பட்டு வருகிறது.

இவற்றையெல்லாம் ஆயுத பலம் கொண்டும் அதிகார பலம் கொண்டும் மக்களின் மீது விவசாயிகள் விடுதலை முன்னணி திணித்து வந்திருக்கிறது. கிராமத்தில் உள்ள பிற கட்சியினரின் ஆதரவோடும் ஆகப்பெரும்பான்மையான மோசடி கும்பலின் ஆதரவோடும்தான் இவை அங்கே அமல்படுத் தப்படுகின்றன. எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அவர்களின் மோசடி தனத்தை போலி தனத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தது. தம்மை பாதுகாத்துகொள்வதற்கு கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. செங்கொடிக்கு எதிராகச் மேற்கு வங்கத்தில் செய்தது போல் செங்கொடியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்பதை அந்தக் கிரிமினல்கள் புரிந்திருந்தார்கள். விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இந்தக் கிரிமினல் கும்பல் ஒரு கட்சியாகத் திரளுவதை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை. இதை புரிந்து கொண்டுதான் அவர்களின் கட்சி பெயரை பயண்படுத்தாமல் விவிமு, மகஇக, புஜஇக. இப்படி பல பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

ஆனால் மக்களுடைய உரிமைக்காக விடுதலைக்காக போராடும் கட்சியாகவும் வெளிப்படையாக மக்களிடம் கட்சியின் கொள்கையும் செயல்திட்டத்தையும் சொல்லி செயல்பட்டதன் விளைவாக அவர்களின் போலி முகமூடி கிழிக்கப்பட்டு வருகறது. சிபிஎம் கட்சிக்கு முன்று கிளைகள் உள்ளன.இந்த வளர்ச்சியும் அவர்களின் விழ்ச்சியையும் பொறுத்துக் கொள்ளாமல் இதுபோன்ற அரசியல் படுகொலையை செய்து வருகிறார்கள்.

ஊர்ப் பொதுச்சொத்தைத் திருடித் தின்பது, கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது, நகரத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, தட்டிக் கேட்டால் குடித்து விட்டுத் தகராறு செய்வது, பிரச்சினை முற்றினால் சென்னைக்கு ஓடிவிடுவது, மீண்டும் வந்து வம்பு வளர்ப்பது.. இவைதான் காரப்பட்டில் விவிமு உறுப்பினர்கள் ஆற்றிய மக்கள் கமிட்டி கட்சிப்பணிகள். இத்தகைய கட்சிப்பணிகளின் மூலம் களவாணிகளை மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்தது. இவை ஒவ்வொன்றிலும் மார்க்சிஸ்டுகள் தலைமையிலான மக்களின் எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

தங்களது "மக்கள் விரோத சேவையை' மார்க்சிஸ்டுகள் தலையீடின்றி தொடர வேண்டுமெனில், ஊராட்சித் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று கணக்குப் போட்டுத் தேர்தலிலும் முதன் முறையாக அவர்களின் ஓட்டுபொறிக்கி வேலையை கொள்கை ரீதியாக நின்று அஇஅதிமுகதை ஆதரித்து ஒரு ஓட்டில் வெற்றி பெற்றனர்.

தாழ்த்தப்பட்டோருக்கான தொகுப்புவீடு கட்டும் திட்டம் வந்தது. சாதிவெறி சிந்தனையோடு யாறும் இந்த போலி அரை நிலபிரபுத்துவ அரசு திட்டத்தை பெறக்கூடாது .அப்படி பெற்று கட்டி விட்டால் தலித் பகுதியில் கல்வீடு வந்தால் இதுவரை காப்பாற்றி வரும் சாதி தீமிர் கெட்டுவிடும் என்று மக்கள் நலத்திட்டத்தை தடுத்தனர் அய்யோ இது புரட்சிக்கு எதிரானது ' என்று கூச்சல் போட்டுப் பார்த்தார்கள் விவிமு வினர் எடுபடவில்லை. இப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார்கள். அதன் விளைவுதான் இந்தக் அரசியல் கொலைவெறி!

சிந்தித்துப் பாருங்கள்! நிலப்பட்டாவுக்கும், ரேசன் கார்டுக்கும், தொகுப்பு வீட்டுக்கும் மக்கள் போராடிக் கொண்டு இருக்கும்போது. கிடைக்காமல் இருப்பதற்கு அரசின் மீது மக்களுக்கு ஆத்திரம்வரளாம். அரசு கொடுக்கிறதே சிபிஎம் அதை பெறுவதற்கு போரட்டங்களை நடத்தி வாங்கி கொடுக்கிறதே என்று விவிமுவினர்களுக்குஏன் ஆத்திரம் வரவேண்டும்? எந்தக் வழக்கும் ஒரு ஊரிலிருந்து வரவில்லை என்றால் அந்த ஊரில் அதற்கு"அப்பட்டமான அடக்கு முறைதான் காரணம் எண்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனென்றால் மக்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும், மக்களுக்கும் போலீசுக்கும் இடையில் தரகுவேலை பார்ப்பதுதான் அவர்கள் ஆற்றிவரும் புரட்சிகரப்பணி. மக்களிடம் இலஞ்சம் வசூலித்து அதிகாரவர்க்கத்துக்குப் பங்கு பிரித்துக் கொடுத்து விட்டு, அதில் கொஞ்சம் புறங்கையை நக்கிக் கொள்ளும் வேலையை திமுக, அதிமுக வின் வட்டம் மாவட்டங்கள் மட்டும் செய்யவில்லை. அதே வேலையைத்தான் போலி விவிமுவினர்களும் செய்கிறார்கள். நக்கும் அளவிலும், போட்டிருக்கும் துண்டின் நிறத்திலும் மட்டும்தான் வேறுபாடு!

இல்லாத கடவுளிடம் வரம் வாங்க செல்லும் மக்களிடம் உங்கள் துக்கம் நீங்கும் நீங்கள் விரும்பிவாழ்வு கிடைக்கும். நீங்கள் இறந்தவுடன் சொர்க்கத்தில். என்று காதில் பூ சொருகி அனுப்புமும் கோயில் புரோக்கர்கள் என்ன சேவையைச் செய்கிறார்களோ அதே "சேவை'யைத்தான் விவிமுவினர் மக்களுக்குச் செய்கிறார்கள்..

மக்கள் போராட்டங்களையும் தாங்கள் பொறுக்கித் தின்பதற்கான கருவியாக மாற்றிக் கொண்டவர்கள் போலி விவிமுவினர். உள்ளூர் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான பிரச்சினைகள் வரும்போது, பத்தே பத்து சுவரொட்டியும் துண்டுப்பிரசுரமும் அச்சடித்து யாறும் இல்லாத நேரத்தில் ஒட்டிவிட்டு ஓடிமறைந்து கொண்டு புரட்சியை பற்றி பேசுகிறார்கள்.

வேறு என்ன விதத்தில் கட்சிப் பணி ஆற்ற முடியும் என்பதை உண்மையிலேயே அவர்கள் அறியமாட்டார்கள். அரசியல் போராட்டம், வர்க்கப் போராட்டம் என்பது பற்றியெல்லாம் கார்த்திக் கட்சிக்காரனுக்கு எவ்வளவு தெரியுமோ, அந்த அவ்வளவுதான் இந்த போலி நக்சல் கட்சிக்காரர்களுக்கும் தெரியும். அதனால்தான் காரப்பட்டின் கிரிமினல்கள் தங்களை வழிநடத்த வல்லது விவிமுவினர் கட்சியே என்பதைக் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

சாதிவெறியர்கள், சமூக விரோதிகள், அப்பாவி இளைஞர்கள். இவர்களெல்லாம் அங்கே "தோழர்கள்'. "நான் முதலில் சாதி வெறியன் அப்புறம்தான் கம்யூனிஸ்டு' என்று பிரகடனம் செய்யும் மாவட்ட செயலாளர். சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போடும் புரட்சிகர புரட்சி அதற்கு தலைமை தாங்கும் அவர்களின் பார்ப்பனத் தலைமை.


அடி முதல் நுனி வரை அழுகிப்போன இந்தக் கட்சி மக்கள் போர்குழுவால் அமெரிக்க ஏஜேன்ட் என்று குற்றம் சாட்டப்பட்ட இந்த அமைப்புகள் அடியாள் வேலை பார்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

"அழித்தோழிப்பு பாதையா, தேர்தல் பாதையா ?' என்பதுதான் நமக்கும் மார்க்சிஸ்டு களுக்கும் உள்ள வேறுபாடு என்று அவர்கள் கூறுகிறார்கள். இல்லை "ஆளும் வர்க்க அடிவருடித்தனமா அழித்தோழிப்பு புரட்சியா?' என்பதில்தான் வேறுபாடு. "அழித்தோழிப்புயை யாருக்கெதிராகப் பயன்படுத்துகிறார்கள்?' உழைக்ககும் பட்டாளி மக்களை அழித்தோழிப்புக்கு உள்ளாக்குவதுதான் அவர்கள் இதுவரை செய்த சாதனை .

சமீபத்தில் ராஜஸ்தானில் 80க்கும் மேற்பட்பட்டடோர் பிஜேபி கட்சியால் சுட்டுதள்ளப்பட்டனர் இதுகுறித்து வாய்திறக்காத இந்த போலி குண்டர்கள். நந்திகிராமிலும் சிங்கூரிலும் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மார்க்சிஸ்டுகள் 50பேர் சுட்டு கொன்ற மம்தா, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பக்கம் பக்கமாக ஏழுதி வந்த யோக்கியதையை என்ன சொல்வது .

மக்களுக்காக மதுரையில் லீலாவதி கொலை, சாத்தூரில் கள்ளச்சாராய முதலைகளுக்கு எதிராகப் போராடிய தோழர் கொலை திருப்பூரில் சாதிவெறியர்களை எதிர்த்த தோழரின் படுகொலை, தோழர்கள் கடலூரில் குமார் , ஆனந்தன் என மக்களுக்காக எதிரிகளின் அரிவாளுக்குக் சமரசம் செய்யாமல் உயிர் தியாகம் செய்த கட்சி சிபிஎம்.

ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்ப்பதற்கு நடுராத்திரி போஸ்ட்ர் ஒட்டும் போராட்டம், அரையில் நாளுபேர் அமர்ந்து கொண்டு நடந்தும் கருத்தரங்க போராட்டம், இனையத்தில் ஒப்பாரிப் போராட்டம்! மார்க்சிஸ்டுகளை எதிர்ப்பதற்கு மட்டும் ஆயுதப்போராட்டம்! இதுதான் விவிமு கட்சி! ஆம். இவர்கள் சிவப்புப் போர்வை போர்த்திய பாசிஸ்டுகள். அவர்களுக்காகபேச வந்த இராசேந்திரனை, "அஞ்சு பொம்பளப் புள்ளங்கடா, என்னக் கொல்லாதீங்கடா'' உங்களுக்காகதாண்டா வந்தேன் என்று நிராயுதபாணியாக நின்று மன்றாடிய அந்த ஏழை விவசாயியை, ஈவு இரக்கமின்றி வெட்டியது விவிமுக்களின் அரிவாள். கும்பிட்ட கைகளை வெட்டித் தள்ளிய குஜராத் இந்து வெறியர்களின் அரிவாளுக்கும் இந்த அரிவாளுக்கும் என்ன வேறுபாடு? அந்தக் கிரிமினல்களுக்கும் இந்தக் கிரிமினல்களுக்கும் என்ன வேறுபாடு? அது காவி இது போலி சிவப்பு என்பது மட்டும்தான்.

இந்தியப்புரட்சியின் முன்னேற்றத்தில் இது போன்ற சீர்குலைவாளர்களை எதிர்த்து போராடியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்துள்ளது. அப்போராட்டத்தில் பல இன்னுயிர்களையும் இழந்துள்ளது. இடது சீர்குலைவு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை இடைவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும்.

அரசியல் படு கொலைகளின் மூலம் மார்க்சிஸ்டுகளை நசுக்கி விடலாம் எனப் பாசிஸ்டுகளைப் போலவே கனவு காண்கிறார்கள் விவிமுவினர் கனவு கானும் இந்த மூடர்களின் கனவு விரைவில் கலையும். கலைப்போம்!