Saturday, August 21, 2010

திரிணாமுல்-மாவோயிஸ்ட் கள்ள உறவு

திரிணாமுல் காங்கிரஸ் - மாவோ யிஸ்ட் கூட்டணியால் லால்கரில் சென்ற ஆகஸ்ட் 9 அன்று நடத்தப்பட்ட பேரணி மூலம், இரு கட்சிகளுக்கும் இடையே யுள்ள கள்ள உறவு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. உண்மை யில் இவ்விரு கட்சிகளும் மேற்கு வங் கத்தின் பல பகுதிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு கூட்டுச் சதிகாரர்கள் ஆவார்கள். இக்கூட்டணி யினரின் கொலைபாதகத் தாக்குதல்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் 255 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுரண் டப்படும் வர்க்கத்திலேயே மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளும் மற்றும் பழங்குடியினரும் ஆவார்கள். இவர்களின் நலன்களைக் காப்பதற்காகத்தான் போராட்டங்களில் ஈடுபடுவதாக மாவோ யிஸ்ட்டுகள் கூறிக் கொண்டிருக்கிறார் கள். இவ்வாறு கூறப்படுவதை சில ‘அறிவுஜீவிகளும்’ ‘சமூக ஆர்வலர் களும்’ இன்னமும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியே மாவோயிஸ்ட் டுகளுடன் இப்படி வெளிப்படையாக அரசியல் கூட்டு வைத்திருப்பது மெய்ப் பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்மோகன் சிங் அரசாங்கம் அதனை மூடி மறைத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளில் பரிதா பகரமான முறையில் தோல்வியடைந்து விட்டது. லால்கர் கூட்டம் தொடர்பாக “உண்மை விவரங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டபின்” நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் அது குறித்துத் தெரிவிப்பதாகக் கூறி அரசு தற்சமயம் பின்வாங்கிக் கொண்டுவிட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே, ஆகஸ்ட் 11 அன்று, மாநிலங்களவையில், ரயில் விபத் துக்களில் மாவோயிஸ்ட்டுகள் சம்பந்தப் பட்டிருப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட, நட்சத்திரக்குறியிட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில், மத்திய உள்துறை இணை அமைச்சர், ‘‘ இதுவரை மேற் கொள்ளப்பட்ட புலனாய்வுகளிலிருந்து, மாவோயிஸ்ட்டுகளின் முன்னணி அமைப்பான பிஎஸ்பிஜேசி/பிசிபிஏ (ஞளுக்ஷதுஊ/ஞஊஞஹ) ரயில்வே தண்டவாளங்க ளைத் தகர்த்ததிலும், அவற்றின் மூலம் விபத்துக்களை ஏற்படுத்தியதிலும் சம் பந்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது’’ என்று கூறியுள்ளார். அரசின் நிலைப் பாட்டில் இருநாட்களுக்குள் என்னே முரண்பாடு!

ரயில்வேயில் பயணம் செய்யும் மக் களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளித்திடுவேன் என்றும் ரயில்வேயின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற் கொள்வேன் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள மத்திய ரயில்வே அமைச் சரே, மாவோயிஸ்ட்டுகளுடன் வெளிப் படையாகவே உடந்தையாக இருந்து செயல்பட்டு வருகிறார். மாவோயிஸ்ட் வன்முறைகளுக்கு எதிராக அரசு மேற் கொண்டு வரும் பாதுகாவலர்களின் நட வடிக்கைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வெளிப் படையாகவே கோரி வருகிறார். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒருபடி மேலேயே சென்று, மாவோயிஸ்ட் தலை வர் ஆசாத் அரசின் பாதுகாப்புப் படையி னர் கூறுவதுபோல் அவர்களுடன் நடை பெற்ற என்கவுன்ட்டரில் கொல்லப்பட வில்லை என்றும் மாறாக அவர் “கொலை செய்யப்பட்டார்” என்றும் கூறக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் - மாவோ யிஸ்ட் இடையேயான பிணைப்பு என்பது மிகவும் தெளிவாகவே மாறியிருக்கிறது. ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி களின்படி, மாவோயிஸ்ட் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கிஷன்ஜி என்னும் கோடேஸ்வர் ராவ் மீண்டும் ஒருமுறை ஆசாத் பிரச்சனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூற்றை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். “போலி என்கவுன்ட்டரில் எங்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் மத்தியக் குழுவின் சார்பில் செய்தித் தொடர்பாளராகவும் விளங்கிய சாரக்குரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ஆந்திரப் பிரதேச காவல்துறை யின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். மம்தா பானர்ஜி உண்மையைப் பேசியுள் ளார். இதற்குமேல் இப்பிரச்சனை மீது நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படக் காரணம் ஏதுமில்லை.’’ இவ்வாறு நாடா ளுமன்ற ஜனநாயகத்தை வெளிப்படை யாக நிராகரித்துள்ள, இந்திய அரசுக்கு எதிராக ‘மக்கள் யுத்தத்திற்கு’ அறை கூவல் விடுத்துள்ள மாவோயிஸ்ட் தலைவர் கூறியிருக்கிறார்.

தங்கள் அமைச்சரவையின் ஒரு முக் கிய அங்கமாகத் திகழும் ஒருவரது செயல் பாடுகளுக்கு வக்காலத்து வாங்க இய லாது, ஐ.மு.கூட்டணி-2 அரசானது தனது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மூல மாக மாநிலங்களவையில், “மாவோயிஸ் டுகளை எவரொருவரும் ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு ஆதரிக்கும் எவரையும் அரசு நிச்சயமாக ஊக்குவிக்காது” என்று கூற வைத்திருக்கிறது. ஆயினும், ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமானது, இந்தியா வின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள மாவோயிஸ்டு களை வெளிப்படையாக ஆதரித்து வரும் திரிணாமுல் காங்கிரசை நேரடியாகக் கண்டிக்க முடியாமல், அதனை சகித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மிகவும் கேவலமான அரசியல் சந்தர்ப்பவாத நிலையை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது.

மாவோயிஸ்ட் வன்முறை இந்தியா வின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பிரதமர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். ஆயினும் அவரது அமைச்சரவையின் சகா ஒருவரே, வெளிப்படையாக மாவோ யிஸ்ட்டுகளின் வன்முறைகளுக்கு உடந் தையாக இருந்து வருகிறார் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குலைத்திடும் அவர் களுடைய நடவடிக்கைகளை நியாயப் படுத்தி வருகிறார். இத்தகைய ஐ.மு. கூட்டணி-2 அரசின் முன்னுக்குப்பின் முரணான நிலை குறித்து பலமுறை குறிப்பிட்டிருக் கிறோம்.

லால்கரில் நடைபெற்ற கூட்டத்திற் கான காரணங்கள் என்ன? இக்கூட்டத் திற்காகப் பெரும் பகுதி மக்கள் லால்க ருக்கு வெளியே இருந்து வாகனங்களின் மூலம் திரட்டப்பட்டவர்கள். அப்பகுதி மக் களில் பெரும்பகுதியினர் இக்கூட்டத் தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த னர் என்ற உண்மையானது, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி மக்களிடமிருந்து அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டு வரு வது அதிகரித்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அப்பகுதி மக்களை அச் சுறுத்திப் பணியவைப்பதற்காகவே இக் கூட்டம் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டது என்பது இப்போது துல்லியமாகத் தெரிய வந்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற் காக, மிகமிகத் தரம் தாழ்ந்த நிலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் சென்று கொண்டி ருக்கிறது. அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண் டும் என்பது குறித்தோ அல்லது நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்தோ எல்லாம் அது கவலைப்படவில்லை. திரி ணாமுல் காங்கிரசின் இத்தகைய கேடு கெட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமோ அல்லது பிரத மரோ கண்டுகொள்ளாமல் இருந்தார்களா னால், பின் நாடே இதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும். கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவா தம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அனு மதிக்கப்படுவதன் மூலம், நாட்டின் ஒற் றுமையையும், ஒருமைப்பாட்டையும், உள் நாட்டுப் பாதுகாப்பையும் காவு கொடுத் திட அனுமதித்திட முடியாது. அறுபதுக ளின் பிற்பகுதியிலும், எழுபதுகளின் முற் பகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சலைட்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்டங் களை அரசியல்ரீதியாக எதிர்த்து முறி யடித்து முன்னேறியது போல, இப்போது அதன் புதிய அவதாரமாக வந்துள்ள மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளை யும் எதிர்த்திடும்.

குறுகிய தேர்தல் ஆதாயங்கள் மற்றும் கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாத நிலைகளைவிட நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தமிழில்: ச.வீரமணி

தீக்கதிர்