Monday, August 24, 2009

சீரழிந்த நக்சலிசம்

எஸ்.ஏ.பெருமாள்

மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப்பாதுகாப்புப்படை, மாநில ஆயுத போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே மேற்குவங்கத்தில் லால்கார் மலைப்பகுதியில் மார்க்சிஸ்ட்டுகளை மாவோயிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகள்

சுட்டுக் கொலை செய்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் இந்த பயங்கரவாதக் குழுக்களுக்குள் ஆயுதப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட உறவுகளும் தொடர்புகளும் உண்டு. துப்பாக்கி, வெடிகுண்டுகளோடு படுகொலைகளை நிகழ்த்தி வரும் பயங்கரவாதிகளை இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசும், அவர்களது செய்தி ஊடகங்களும் வெறும் தீவிரவாதிகள் என்றே பிரச்சாரம் செய்கின்றன. பயங்கரவாதம் இங்கு மட்டும் தீவிரவாதமாகவே கருதப்படுகிறது.

1968ம் ஆண்டில் நக்சல் பாரியில் ஆயுதமேந்திய புரட்சியை சாருமஜாம்தார், கனுசன்யால், ஜங்கால் சந்தாஸ் தலைமையில் நடத்தி தனிக்கட்சி தொடங்கினார்கள். நக்சல் பாரிப்புரட்சி நாடெங்கும் பரவுகிறது என்றனர். பின்பு பிரதேச அளவில் பல குழுக்களாய் பிளவுபட்டுப் போனார்கள். ஒன்றையொன்று மறுக்கின்ற குறுங்குழுக்களாய் சிதறிப் போயினர்.

பின்னர் இதில் பலரும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கைவிட்டதாகக் கூறினர். ஒரு பகுதியினர் தேர்தல் பாதைக்கும் வந்தனர். ஆயுதப் புரட்சிக்கு இது தருணமல்ல என்ற முடிவிலிருந்தே ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதற்கு நேபாள மாவோயிஸ்ட்டுகளை சிறந்த உதாரணமாய் கூறலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிய மார்க்சிய நிலைபாடு புரட்சியின் மூலம்தான் என்பது அனைத்து மார்க்சியர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஆயுதப் புரட்சியினால் மட்டும் என்பதல்ல. புரட்சி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் ஆளும் வர்க்கமும் அதன் அரசு இயந்திரமும் மட்டுமே தீர்மானிக்கின்றன. இந்த வடிவம் காலத்திற்குக் காலம், தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்பது கூட சட்டரீதியான நடைமுறைகளின் மூலம் மக்களைத் திரட்டுவதற்கான முயற்சிதான். சமூக மாற்றத்துக்கான புரட்சியை எந்த ஒரு குறிப்பிட்ட வடிவத்தோடும் வரம்பு கட்டிவிட முடியாது. இதற்கு நக்சலைட்டுகளின் அனுபவமே போதுமானது.

பொதுவாக மாவோயிஸ்ட்டுகள் மலைப்பிரதேசங்களையே தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ளனர். அரசுகளின் நிழல்படாமல் எந்த வளர்ச்சியுமின்றி பழங்குடி மக்கள் நிராதரவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்ற எந்த அடிப்படைத் தேவைகளும் கிடைக்காத பழங்குடி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளோடு ஊடுருவிவிடுகிறார்கள். அரசுகளின் மீதான கோபத்தில் ஒரு பகுதியும், பயத்தினால் ஒரு பகுதியுமாய் பழங்குடிகள் இவர்களிடம் சரணடைகின்றனர். போலீஸ் தாக்குதல்கள் வரும்போது மாவோயிஸ்ட்டுகள் பழங்குடிகளை மனிதக் கேடயங்களாய் பயன்படுத்துகின்றனர்.

ரயில்கள், பாலங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் உற்பத்தி மையங்கள், பெரும் தொழிற்சாலைகளுக்குக் குண்டு வைக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள், அவர்களது அத்தியாவசியத் தேவைகள், போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் மீது திட்டமிட்டு குண்டுவீசுகின்றனர். பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை சீர்குலைத்தால் தொடர்ந்து அப்பகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே நீடிக்கும். தங்கள் பிடியிலுள்ள பழங்குடிப் பகுதிகளையும் இதன்மூலம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்துக் கொள்கிறார்கள். பழங்குடி மக்களின் நலன்களுக்காகவே ஆயுதமேந்துகிறோம் என்று அவர்களை நம்ப வைக்கிறார்கள். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஊழல் மலிந்த காவல்துறையைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். போதை மருந்துக்கான பயிர் சாகுபடி மலைப்பகுதிகளில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது. பணத்தை வைத்து நவீன ஆயுதங்களை அவர்களால் வாங்கிக் குவிக்க முடிகிறது.

வர்க்கப்புரட்சியின் மூலம் வர்க்கங்களை ஒழிப்பது எனும் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடு, எதிரி வர்க்க உறுப்பினர்களை ஒழிப்பது எனும் தனிநபர் பயங்கரவாதமாய் சீரழிந்து போனது. இப்போது தனது வர்க்க உறுப்பினர்களையே கொல்வது, மார்க்சிஸ்ட்டுகளை கொலை செய்வது என்ற பயங்கரவாதமாய் வளர்ச்சியடைந்துள்ளது. இதைக் கூட மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாகவே சந்திக்க விரும்புகிறது என்று பகிரங்கமாய் கூறியுள்ளது. சந்திக்கும் என்பது உறுதி.

Monday, August 17, 2009

வார்த்தை பொருக்கிகளான இன்டர்நெட் புரட்சியாளர்களும் அவரதம் எழுத்து நடையும் (பகுதி ஒன்று)

அன்பு நிறைந்த இணயதளவாசக நண்பர்களே! இணைய தளத்தை ஆரோக்கியமான அரசியல் விவாதங்களுக்கு பயன் படுத்தும் முறை கொஞ்கம் கொஞ்சா£க சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் தங்களை அக்மார்க் புரட்சியாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே முத்திரை குத்திக்கொள்ளும் சில அனானிகளும், த.நா.மா.லெ.க மற்றும் ம.க.இ.க வகையராக்களுகம் அவர்களை யாராவது விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்பவர்களை தரம் தாழ்ந்து கேவலமான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி ஒன்று அவர்களை அடுத்த முறை விவாதம் நடத்த விடாமல் செய்வது அதையும் மீறி நின்றால் அடுத்தது அந்த பக்கம் தலை வைத்து படுக்காமல் ஓடிவிடுவது இந்த இரண்டு நிலையையே எடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு இன்று தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் வர்க்க எதிரி மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான்.

நந்திகிராமை முடிந்த அளவு அவதூறு செய்ய பயன் படுத்தினார்கள் அதை எதிர்த்து சந்திப்பு, விடுதலை போன்ற வளைத்தளங்களில் பதிலடி கிடைத்தவுடன் அடுத்து காரப்பட்டு விவகாரத்தை கையில் எடுத்து "பொய் பொய்யை தவிர வேறில்லை" என்ற அடிப்படையில் எழுதினார்கள். அதற்கும் சரியான பதிலடி கொடுத்த பின்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். தற்போது லால்கர் பிரச்சனை. மாவோயிஸ்டுகள் அத்வானி மற்றும் மம்தாவுடன் கொஞ்சி குலாவுவதை இவர்களால் கண்டிக்க முடியாது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாட நடந்த போராட்டத்தில் அவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தியதாய் பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் உலாவ விடுகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி போராட்டம் நடந்தப்பட்டது. அதில் ஆறுமுகசாமி உள்ளிட்டு ப.ம.க, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ தோழர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதற்கு பின் அங்கு நடந்த பல போராட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் கலந்துக்கொண்டன. ஆனால் வெட்டி பரபரப்பும் வார்த்தை ஜாலங்களையும் முதலீடாக மற்றி, காவல் துறையுடன் மோதுவது போல சீன் போடும் இவர்கள் தற்போது நடராஜர் ஆலயத்தை விடுவிக்க ஆகப்பெறும் வேலையை தாங்கள் மட்டுமே செய்ததாக மார்தட்டுகின்றனர்.

ஒரு போராட்டட்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்களை அங்கீகாரம் செய்யத்தெரியாத அல்லது அவர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. தங்களது கட்சியின் பெயரை வெளியே சொல்ல அசிங்கப்பட்டுக் கொண்டு அதாவது த.நா.மா.லெ.க என்ற பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு பல்வேறு பெயர்களில் உலாவந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது கட்சி திட்டம் எப்படி காலாவதியானது என்று வரி வரியாக சந்திப்பு கிழித்து காயப்போட்ட பிறகு அதற்கும் பதில் சொல்ல தயாரில்லை. ஆனால் இணையதளத்தில் வேலை செய்யும் பல அப்பாவி இளைஞர்களை தங்களது போலி புரட்சிகர வசனங்களால் மூளை சலவை செய்து, வளைதளத்தில் எழுதியே புரட்சியை உண்டாக்கலாம் என்று முயற்சி செய்கின்றனர்.

கருத்துக்களை தூர எரிந்துவிட்டு வார்த்தைகளை தேடித்தேடி பொறுக்கி அவர்கள் எழுதுவது அவர்களுக்கே உரிய கலை. (தலைப்பு இப்போது புரிந்திருக்கும்) உதாரணமாக: "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்று மாமேதை லெனின் சொன்னதை பயன்படுத்தி மற்ற கட்சிகளை வீராவேசத்துடன் திட்டுவார்கள். ஆனால் "தேவையேற்படும் போது அதையும் கம்யுனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்" என்று அவரின் அடுத்த வரியை மறைத்து அல்லது மறந்து விடுவர். (இப்படி இவர்களது "கட்டிங் பீஸ்" பல உள்ளது தேவையெனில் எழுதுவோம்) ஒரு சம்பவம் குறித்து அவர்களின் பொய் எப்படி பட்ட அடிபடையற்றது என்பது பல முறை நிருபிக்கப்பட்டுள்ளது, வேண்டு மென்றால் இதற்கு பிண்ணூட்டம் அவர்கள் அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அவர்கள எத்துனை அய்யோக்கியதனமான பொய்யர்கள் என்று மீண்டும் ஒரு முறை நிருபனம் செய்யலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை சேர்ப்பதற்கென்றே அவர்கள் ஒரு பிரிவை வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவை சார்ந்த வர்க, வெகுஜன இயக்கங்கள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டங்களில் துண்டு பிரசுரத்துடன் நுழைவது வேண்டுமென்றே கலகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேப்போல் தனிநபர்களை தாக்காமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. அவர்கள் எழுத்து நடையின் லட்சனம் அதுதான். கேட்டால் பெரிய லட்சிய கொம்பர்கள் போல கதையளப்பார்கள். எத்தனை பேர் அவர்களுக்கு பிண்ணூட்டம் அனுப்பினாலும் அத்தனை பிண்ணூட்டங்களையும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு நபர்கள் அனுப்புவதாக கற்பனை செய்துக்கொண்டு தனிநபர் தாக்குதலில் இறங்குவார்கள். அவர்களின் நரகல் எழுத்து நடையை படிப்பவர்கள் உடன் கண்டு பிடித்து விடலாம். அவர்கள் அனானி போலவும், புனைப்பெயரிலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அதை எதிர்த்து எழுதுபவர்கள் அவர்களது முகவரி மற்றும் ஜாதகத்தை வெளியிட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். என்னே ஒரு ஜனநாயக மான்பு. இப்போது இந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் எத்துனை நரகல் நடை பதில் வரும் என்று பாருங்கள். ஒன்னு அப்படி வரும் இல்லை எனில் இதை படித்ததாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பொய்கள் ஆதாரத்துடன் அடுத்தடுத்து நிருபிக்கப் படும் என்று மேலே உள்ளது அல்லவா.

இன்னும் கூட பல அப்பாவி நண்பர்கள் அவர்களை புரட்சியாளர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். த.நா.மா.லெ.க வினர் புரட்சிகரமான வார்த்தைகளை பொறுக்குவார்களே அல்லாது எதையும் அவர்களால் களத்தில் நின்று செய்யமுடியாது. இலங்ககை பிரச்சினையில் அவர்கள் ஒருப்பக்கம் தமிழ் என்று கதைப்பார்கள், மறுபக்கம் புலிகளின் ஆதரவு முகம் காட்டுவார்கள், முத்துக்குமரனை வீரனாக சித்தரிப்பார்கள், மற்றொறுபுறம் அந்த அப்பாவி இளைஞனை கேவலப்படுத்துவார்கள், இலங்கை பிரச்சினையில் அவர்கள் நிலை என்ன என்று கண்டு பிடிப்பத்ற்குள் உங்கள் தலைமுடி பாதியாகிவிடும். இவர்கள் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுவார்கள் இணையதள வாசகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கூட்டத்தை அடையாள படுத்தவே இந்த பதிவு இங்கு செய்யப்படுகிறது.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு