Monday, December 13, 2010

பன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்

‘நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம்’ ‘தேர்தல் பாதை திருடர் பாதை’ ‘துப்பாக் கிக்குழலிலிருந்து புரட்சி வெடிக்கிறது’ ‘தெலுங்கானா போராட்டத்தின்போதே ஆயுதப் புரட்சிக்கு மக்கள் தயார்’ ‘நாடாளு மன்ற கம்யூனிஸ்ட்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிட்டனர்’ ‘நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற சகதிக்குள் சிக்கிக்கொண்டன’ என்றும் இதுபோன்று பலவுமாய் மாவோயிஸ்ட்டுகள் என்றழைக்கப்படுவோர் தங்கள் கட் சித்திட்டத்திலும் நாடாளுமன்றத்தை பயன்படுத்தும் கட்சிகளை திட்டவும் எழுதி வைத்துள்ளனர்.

நாடாளுமன்றமும் முதலாளித்துவமும்

முதலாளித்துவ உற்பத்தி முறையின் பல்வேறு மேற்கட்டுமானங்களில் நாடாளு மன்ற முறையும் ஒன்று. எனவே, முதலாளித் துவம் விரும்புகிறதோ இல்லையோ, முத லாளித்துவம் நீடிக்கும்வரை இந்த நாடாளு மன்றமுறை நீடிக்கும். அதற்குப் பின்னாலும் வெவ்வேறு நாடுகளின் சூழலுக்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் குணாம்சத்தில் வேறு பட்ட நாடாளுமன்ற முறை இருக்கவே செய் யும். எப்போதெல்லாம் முற்போக்கு சக்திகள் நாடாளுமன்றத்தை பயன்படுத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட முனைகின்ற னவோ, அப்போதெல்லாம் அதை முடக்கவும் அழிக்கவும் ஆளும் வர்க்கமோ அல்லது ஆளும் கட்சியோ முயன்றே வந்திருக்கிறது.“நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கோ, ஜனநாயகத்திற்கோ, உழைக்கும் மக்களிடமி ருந்தோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தும் கட்சிகளிடமிருந்தோ ஆபத்து வரவில்லை. சுரண்டும் வர்க்கங்களிடமிருந்துதான் ஆபத்து வருகிறது.” (மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 5.23)

உழைக்கும் மக்கள் தங்கள் நலனை நாடா ளுமன்ற முறை மூலம் நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தால், சுரண்டும் வர்க்கங்கள் அவசர நிலை காலத்தில் செய்தது போல அதை முடக்குவார்கள் பாஜக முயற்சித்தது போல ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்டு வந்து அதை செயலற்றதாக்க நினைப்பார்கள் 2008 ஜூலை 22-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந் தபோது செய்தது போல பணத்தைக்கொட்டி விலை பேசுவார்கள் சட்டமன்றங்களை நூறு முறைக்கு மேல் கலைத்து சிறுமைப்படுத்துவார்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கேலிக்கூத்தாக்குவார்கள்; அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சனைகளில் நடந்து கொண்டது போல அதன் கருத்தை ஓரம் கட்டுவார்கள். ஆனால், நாடாளுமன்ற முறையை விட உயர்ந்த வடிவத்திற்கு மக்கள் போராடு வார்களோ என்ற அச்சத்தின் காரணமாய் அவ்வப்போது நாடாளுமன்றத்தின் புனிதம் குறித்து பக்கம் பக்கமாய் பேசுவார்கள். எனவே நாடாளுமன்ற ஜனநாயகமுறையை முதலா ளித்துவம் சகித்துக்கொள்கிறது. ஏனெனில் நாடாளுமன்றம் தனது மேற்கட்டுமானம். அதை அழிக்க முதலாளித்துவம் தன்னை அழித்துக்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றமும் மார்க்சிஸ்ட்டுகளும்

“இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடி வமாக இருந்தாலும் மக்களின் முன்னேற் றத்திற்கான ஒரு அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்வ தற்கும் அரசு விவகாரங்களில் ஓரளவு தலை யிடுவதற்கும் ஜனநாயக மற்றும் சமூக வளர்ச் சிக்கான போராட்டங்களை நடத்துவதற்கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.”
(மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 5.22)

எனவே மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை யில் தலையிடுவதற்கும், போராடுவதற்கும் உள்ள சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நிர்ணயித்திருக்கிறது. இந்த அமைப்பிற்குள்ளேயே அரசாங்கங் களை அமைக்க வாய்ப்பிருந்தால் அதையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே திட்டம் வைத்திருக்கிறது. “திட்டவட்டமான சூழலை பொறுத்து மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளை” கட்சி பயன் படுத்திக்கொள்ளும். அவை எப்படிப்பட்ட அரசாங்கம் “இப்போதுள்ள வரையறைக்குள்ளேயே மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய திட்டத்தை நிறைவேற்றுகிற, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து நிறைவேற்று கிற அரசாங்கங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளும்”.

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கிடைத்த அத்தகைய வாய்ப்பு களை மார்க்சிஸ்ட் கட்சி பயன்படுத்திக் கொண்டது. நிலச்சீர்திருத்தத்தை அமல்ப டுத்தியது, அதிகாரப்பரவலை சாத்தியமாக்கி யது, பொதுவிநியோக முறையைப் பலப் படுத்தியது, கந்துவட்டி ஒழிப்புச் சட்டங் களை இயற்றி அமல்படுத்தி இருக்கிறது. தனியாரிடம் கடன்வாங்கி கடன் வலையில் சிக்கிக்கொண்டோரை மீட்டது, குத்தகைச் சட்டங்களை அமல்படுத்தி விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டியது, குறைந்த பட்சக் கூலிச்சட்டத்தை அமல்படுத்தியது, உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்படாதிருப் பது, இவையெல்லாம் வேறு எந்த மாநிலங் களிலும் இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி தலை மையிலான அரசின் சாதனைகள். இப்போது கூட கேரளாவில் தொழிற்சங்க அங்கீகாரத் திற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது இத்தகைய வகையிலானதே. ஒரு நிறு வனத்தில் - சிறப்பு பொருளாதார மண்டலத் தில் இருப்பவை உள்பட ஒரு சங்கம் இருந் தால் அதை அங்கீகரிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற் பட்ட சங்கங்கள் இருந்தால் ரகசிய வாக் கெடுப்பு மூலம் அங்கீகாரம் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மேற்கு வங்க அரசும் இத்தகைய சட்டத்தை இயற்றி யுள்ளது. மூன்று மாநிலங்களிலும் ஆட்சியி லிருந்த அனுபவங்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சரியே என்பதை நிரூபித்திருக்கிறது. இத்தகைய அரசாங்கங்களில் பங்கு கொள்வ தால் சில நிவாரணங்களை மக்களுக்கு வழங்க முடிந்திருக்கிறது. அதன்மூலம் “மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியைக் கட்டும் பணிக்கு உதவும்” என்கிற நோக்கத்திலிருந்து தான் இந்த அரசாங்கங்களில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கெடுக்கிறது.

முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குட்பட்டு பல போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறோம். பொதுத் துறை பாதுகாப்பு, தகவலறியும் உரிமைச் சட் டம், கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட் டம், அயல்துறை கொள்கையில் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகிற முற்போக்கு அம்சங்கள், மதச்சார்பின்மை கோட்பாட்டை காப் பாற்றிக்கொண்டிருப்பது, இந்திய அரசின் ஏகாதிபத்திய சார்பை கட்டுக்குள் வைத்திருப் பது, இரண்டாவது லேபர் கமிஷன் பரிந்துரைகளை கிடப்பில் போட வைத்திருப்பது, என்று அடுக்க முடியும். சுருக்கமாகச் சொல் வதெனில், கடந்த நாடாளுமன்றத்தில் இடது சாரிகளைச் சார்ந்திருந்த அரசாங்கத்தின் நட வடிக்கைக்கும் இடதுசாரிகளின் ஆதரவு வேண்டியிராத இந்த அரசாங்கத்தின் நட வடிக்கைக்குமான வேறுபாடே இதை உணர்த்தும். “இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் போதே இப்போதுள்ள பெருமுத லாளிகள் தலைமையிலான முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசை நீக்க வேண்டியதன் தேவையை மக்களுக்கு கற்பித்து வருவதன் மூலம் வெகுஜன இயக்கத்தை வலுப்படுத் தும்”. நாடாளுமன்றத்தில் பங்குகொள்வது பற் றிய மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இதுவே.

கட்சித்திட்டம் மேலும் கூறுகிறது “நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும்… அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர பாடு படும். எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர முன்வரமாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறது. எனவே, நாடாளுமன்ற முறை புனிதமென்றோ, சாசுவத மென்றோ, சர்வரோக நிவாரணி என்றோ மார்க் சிஸ்ட் கட்சி கருதவில்லை. அதைப் பயன் படுத்திடவும் அம்பலப்படுத்திடவும் மக்க ளைத் தயார்ப்படுத்தவுமே நாடாளுமன்றத்தில் பங்குகொள்கிறது. லெனின் கூறுகிறார் “முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும் இதர பிற் போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற் றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை அவற் றில் நீங்கள் வேலை செய்தே ஆக வேண்டும். அவ்வாறு வேலைசெய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்” (தேர்வு நூல் தொகுதி 10-பக்கம் 247)

நாடாளுமன்றமும் மாவோயிஸ்ட்டுகளும்

நாடாளுமன்றத்தை மக்கள் போராட்டங் களுக்காகப் பயன்படுத்துவதும் அதை அம் பலப்படுத்துவதும் நோக்கமாகக்கொண்டு போனவர்கள் அந்தச் சகதியில் மூழ்கிவிட்ட தாகக் மாவோயிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டுப் போன தாகவும் தரகு முதலாளித்துவ அரசு அதை பாதுகாப்பதாகவும் முடிவுக்கு வருகிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகள் இந்திய அரசின் வர்க் கத்தன்மை பற்றி குறிப்பிடுகிற போது இது தரகு முதலாளித்துவ அதிகார வர்க்க முதலா ளித்துவ- பெருநிலப்பிரபுத்துவ அரசு என்று வரையறுக்கிறார்கள். தரகு முதலாளிகள் யார்? தன் நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட் களை ஏற்றுமதி செய்து உற்பத்தி பொருட் களை இறக்குமதி செய்து லாபமீட்டும் ஏஜெண் டுகளாக செயல்படுபவர்கள். அவர்களுக்கு நாடாளுமன்ற முறை தேவையும் இல்லை. அதை பாதுகாக்கவும் மாட்டார்கள். எனவே தான் இந்திய அரசின் வர்க்கத்தன்மையை குறித்த தவறான நிர்ணயிப்பு நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பயன்படுத்துவது குறித்த புரிதலிலும் தவறான முடிவெடுக்க அவர்களை நிர்ப்பந்திக்கிறது. இப்படி ஒவ் வொரு அம்சத்திலும் அவர்கள் தவறு செய் கிறார்கள்.

நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டுப் போனதாய் சொல்கிறார்கள். இந்த அல்லது அந்தக்கட்சியை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது வேறு. நாடாளுமன்றத்தையே புறக் கணிக்கிறார்கள் என்பது வேறு. மாவோயிஸ்ட் டுகள் நாடாளுமன்றத்தேர்தலை புறக்கணிக்க அறைகூவல் விட்டனர். அவர்கள் வலுவாக உள்ள பகுதிகளிலேயே மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாவோயிஸ்ட்டுக ளின் அறைகூவலைத்தானே புறக்கணித்த னர். மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை உச் சத்திலிருந்த இந்தக்காலத்தில்தான் ஜார் கண்ட் மாநில தேர்தல் நடைபெற்றது. மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. எனவே, நாடாளுமன்ற முறை அம்பலப்பட்டு விட்ட தாக மாவோயிஸ்ட்டுகள் சொல்வது அவர் களின் விருப்பமே தவிர, யதார்த்தமல்ல.

நாடாளுமன்றம் குறித்து லெனின்

சீனாவில் புரட்சிக்கு முன்னர் நாடாளுமன்ற முறை இருந்ததில்லை. ஆனால் ரஷ்யாவில் நாடாளுமன்றமுறை இருந்தது. “இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறுஎன்ற நூலில் நாடாளுமன்றத்தில் பங்கேற் பது குறித்தும் அதற்கெதிரான நிலைபாட்டை விமர்சித்தும் நிறைய எழுதியிருக்கிறார் தோழர் லெனின். “மிகவும் பிற்போக்கான நாடாளு மன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும் பங்கெடுத்துக்கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷ்விக்குகள் மிக உக்கிரமாகப் போராடி நிலைநிறுத்தியிராவிடில், 1908-14ல் அவர்களால் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுதியான மையப்பகுதியை சிதையாது பாது காத்துக்கொள்ளக்கூட முடியாமற்போயிருக்கும் என்று மிகத்தெளிவாய் தெரிகிறது” (லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 10 - பக்கம் - 208)

“போல்ஷ்விக்குகளான நாங்கள் படு மோசமான எதிர்ப்புரட்சி நாடாளுமன்றங் களில் பங்கெடுத்துக்கொண்டோம். இவ்வாறு பங்குகொண்டதானது... பிற்பாடு சோசலிசப் புரட்சிக்கு (அக்டோபர் 1917) பாதையைச் செப்பனிடுவதற்குப் புரட்சிகரப்பாட்டாளி வர்க்கக் கட்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததுடன்கூட அத்தியாவசியமாகவும் இருந்ததென்பதை அனுபவம் தெளிவுபடுத்தியிருக்கிறது” (மேற் சொன்ன நூல் பக்கம் 251)

“சோவியத் புரட்சிக்கு சிறிது காலமே முன்னதாய் 1917 செப்டம்பரில் போல்ஷ்விக்குகள் முதலாளித்துவ நாடாளுமன்றத்துக்கு (அரசியல் நிர்ணய சபைக்கு) தமது வேட்பாளர்களை நிறுத்தினர். 1917 நவம்பரில் சோவியத் புரட்சிக்கு மறுதினம் இந்த அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில் பங்குகொண்டனர். 1918 ஜனவரி 5ல் இந்த அரசியல் நிர்ணய சபையைக் கலைத்தனர் என்பது போல்ஷ் விக்குகளுக்குத் தடங்கலாகி விடவில்லை. மாறாக அவர்களுக்கு உதவியே செய்தது”. (மேற்கண்ட நூல் பக்கம் - 298)

ரஷ்யாவில் சோசலிச புரட்சி நடைபெறு வதற்கு சில நாட்களுக்கு முன்பும் சோசலிச புரட்சி நடந்து முடிந்த தருவாயிலும் நாடாளு மன்றத்தில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்ற அனுபவத்தை லெனின் இங்கு குறிப்பிடு கிறார். ஆனால், சோசலிச புரட்சிக்கு முந் தைய புதிய ஜனநாயகத்திற்காக போராடுகிற போது அதில் பங்கேற்பதை மாவோயிஸ்ட்டு கள் ஏற்க மறுக்கின்றனர். பாட்டாளி வர்க் கப்புரட்சியை நடத்தி வெற்றி கண்ட நாட்டின் அனுபவத்தை மாவோயிஸ்ட்டுகள் கணக் கில் கொள்ள மறுக்கின்றனர். ஏனெனில் பன்றிகளின் தொழுவம் என்கிற மனப்படி மத்தை மீற அவர்களால் முடியவில்லை. தோழர் லெனின் ‘இடதுசாரி’ கம்யூனிஸ்ட் டுகளைப் பற்றிக் கூறுவது போல அவர்கள் தங்கள் நிழலை விட்டு ஓடிவிட எத்தனிக் கிறார்கள். முட்டாள்களின் சொர்க்கத்தைக் கனவு காண்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகளின் இத்தகைய பிரச்சாரங்களை முற்றிலும் பிழையான, மார்க்சியத்திற்கும் இயக்கவியலுக்கும் எதிரான கருத்துக்களை, முனைப்புடன் போராடி முறியடிக்க வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலையற்றதும் வறட்டுத்தனமானதும், மனச்சோர்விற்கு ஆட்படுவதுமான குட்டி முதலாளித்துவ நிலையை கம்யூனிஸ்ட் இயக்கம் கண்டு வந்திருக்கிறது. “முதலாளித்துவத்தில் கொடுமைகளால் குட்டி முதலாளித் துவப்பகுதியோர் “வெறிபிடித்த மூர்க்க நிலைக்குத் தள்ளிவிடப்படுவதானது அரா ஜகவாதத்தைப் போலவே முதலாளித்துவ நாடுகள் யாவற்றிற்கும் இயல்பாகவே உரித் தான ஒரு சமூக நிகழ்ச்சிப்போக்காகும்” (லெனின்) வலது திரிபு வாதத்தைப் போல இடது அதிதீவிரவாதமும் புரட்சிகர இயக்கத் திற்கு எதிரானது. அதற்கெதிரான போராட்டத் தை உறுதியுடனும் தொடர்ச்சியாகவும் வலு வுடனும் நடத்தாமல் புரட்சி இயக்கம் முன் னேற முடியாது.

-க. கனகராஜ்

Friday, December 10, 2010

"வினவுக்கு எதிர் வினா ?"



(மம்தா மாவோயிடுகள் சதியாலோசனை (இன்டியான் வான்கோர்ட்)

இந்திய நாட்டின் ஒரிசினல் புரட்சியாளர்கள் யார் என்பதை இன்டர் நெட்டில் தொடர்ந்து அறிவித்து வருகிறது "வினவு" என்ற வலைத்தளம். இந்த வினவு தங்களைத் தாங்களே ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்ற "அக்மார்க் புரட்சியாளர்கள்" என்று முத்திரைக்குத்திக் கொள்பவர்களின் வலைத்தளமாகவும் செயல்படுகிறது.

இந்த வினவு புதிய ஜனநாயகம் இதழிலிருந்து ஒரு கட்டுரையை பிரசுரம் செய்துள்ளது. ஆக்கபூர்வமான எந்த மாற்றையும் எப்போதுமே சொல்லாத, எல்லோரையும் கண்டபடி திட்டினால் பிரபலமாகலாம் என்ற துக்ளக் பாணி அரசியல் செய்துவருகிறது வினவு, பேருந்து கட்டணம் உயர்ந்தால் பேருந்தில் புலம்பிக்கொண்டே செல்லும் பயணி போல இணையத்தில் புரட்சி வரும் என காத்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்களின் கூடாரமாய் காட்சியளிக்கிறது.

எல்லோரும் அய்யோக்கியன், நான் மட்டும் நல்லவன் என்று புலம்புவதையும்
அரசியல் கட்சிகள் எல்லாம் ஓட்டு பொறுக்கிகள் என்று வார்த்தைகளை பொறுக்கி கதையடிப்பதையும் செய்து வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக "கோயபல்ஸ்" பாணியில் பொய்களை திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளது அந்த வலைத்தளம். இதற்கு நல்ல உதாரணம் மேற்கண்ட கட்டுரை "ஹர்மத் வாஹினி சி.பி.எம் இன் குண்டர் படை" இந்த கட்டுரையில் எத்துனை பொய்கள் என பார்க்கலாம்...

//”எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது."//

இதுதான் கட்டுரையின் துவக்கம். அதாவது தங்களிடம் குண்டர் படை இருப்பதாக சி.பி.எம் கட்சியே ஒப்புக்கொண்ட அர்த்தம் தொனிக்கும் வார்த்தை விளையாட்டு இது. மாவோயிஸ்டுகள் கொலை செய்ய வந்தால் சி.பி.எம் கட்சியினர் சாகனுமே அல்லாது எதிர்த்து நிற்கக் கூடாது என்ற விருப்பத்தின் வெளிப்பாடு இது. சி.பி.எம் ஊழியர்களை பாதுகாக்க அதில் இருக்கும் இளைஞர்கள் அணி திரண்டால் தவறு. பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பி, பீதியை உண்டாக்கி, ஆயுதங்களுடன் மக்களிடம் கொள்ளையடித்த மாவோயிஸ்டுகள் இப்போது விரட்டப்படுகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத புலம்பல் இது. இதில் அபத்தமான ஒரு பொய் இருக்கிறது. "ஹர்மத் வாஹினி" என்பது சி.பி.எம் கட்சி சார்பானது அல்ல..... அது மாவோயிஸ்ட் மற்றும் மம்தாயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட, அவர்களால் வீடுகளை இழந்த, உடமைகளை பறி கொடுத்த மக்களின் கூட்டமைப்பு என்பது கூட தெரியாமல் கட்டுரை எழுதுகின்றனர். அடுத்த பாரா கீழே வருகிறது....

// "கடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில்
பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது."//

சி.பி.எம் ஊழல் கட்சி என்று முதலாளித்துவப் பத்திரிக்கைகள் கூட சொல்லத் துணியாத ஒரு பொய்யை கட்டமைத்து அதற்கு பழங்குடியின மக்களின் பேரெழுச்சி என முலாம் பூசி இருக்கின்றனர். ஆனால் நடந்ததை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்பதுதான் அது. மம்தாயிஸ்டுககளான மாவோயிஸ்டுகளின் நோக்கம் அதுதான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நெருங்கும் ஒரு மக்கள் ஆட்சியை வீழ்ந்த அரசியல் ரீதியாக முடியாது என்ற காரணத்தினால் கொலைபாதக வழியை பின்பற்றுகின்றனர். இது கூட அவர்களது சொந்த புத்தி கிடையாது. 1977 ஆம் ஆண்டு சித்தார்த் சங்கர் ரே என்ற காங்கிரஸ் தலைவர் பயன்படுத்தியதுதான். அதன் விளைவை கங்கிரஸ்காரர்கள் இன்னும் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இனிமேல்...

இந்தியாவில் அதிகமான மக்களுக்கு நிலங்களை பங்கிட்டு கொடுத்த மேற்குவங்க அரசு தொழில்துறையில் தோல்வி அடைந்து விட்டதாக மம்தாவும் காங்கிரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். தொழிற்துறையில் அந்த அரசு செய்த சாதனைகளை மறைத்துவிட்டனர்.

மேலும் தொழிற்சாலைகளை துவக்க நிலங்கள் தேவைப்பட்டது. அதற்குதான் சிங்கூர், நந்திகிராம், லால்கர் ஆகிய பகுதிகளில் மக்கள் ஒப்புதலுடன் நிலங்கள் எடுக்கப்பட்டது. ஆனால் மம்தா - மாவோயிஸ்ட் - முதலாளித்துவ ஊடகங்கள் கூட்டணி அமைத்து தொழிற்சாலை அமைக்க அரசாங்கமே நிலங்களை பிடுங்க வருவதாக பொய் பிரச்சாரத்தை செய்தன. நம்பிய அப்பாவி மக்களை ரட்சிக்க வருவதாக ரவுடிகளையும், கொலைகாரர்களையும் திரட்டி, அவர்கள் கையில் செங்கொடியையும் ஆயுதத்தையும் கொடுத்து மம்தா கலவரத்தை தூண்டினார். அங்கிருந்த ஓரிரண்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்த கலவரத்திற்கு வர்க்க சாயம் பூசினார்கள். மாவோவின் தத்துவங்களை வலைத்து திரித்து தத்துவ விளக்கம் கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின்

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் படுகொலை செய்யாப்பட்டனர். கிட்டதட்ட மூன்று மாதங்கள் மம்தாவின் கட்டளையை ஏற்று மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை, மாநில அரசு மாவோயிஸ்டுகளை பேச அழைத்துக்கொண்டு இருந்ததால் ஆயுதம் ஏந்தவில்லை. இதன் விளைவு சி.பி.எம் கட்சியின் 350 ஊழியர்கள் கொள்ளப்பட்டனர். "போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி" என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்கள் மீது பழி போட்டு மாம்தாயிஸ்டுகள் ஆடிய கொலைதாண்டவத்திற்கு பதிலடி கிடைக்க துவங்கியதும் அது அரசு பயங்கரவாதம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

லால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் இப்போது போக்கிடம் இல்லாமல் அலைவதை மம்தாவால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களின் ஆயுத பலத்தை வைத்து சில இடங்களை வெற்றி பெற்றார். அவர்கள் இல்லாமல் இனி வெற்றி என்பது சாத்தியமில்லை.

"சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது"

என்று இக்கட்டுரை முலமாக மம்தாவுக்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கின்றது வினவு வலைதளம். உண்மையை உணர்ந்த பழங்குடி மக்கள் பேரெழுச்சியால் கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் சி.பி.எம். தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து, மம்தா மற்றும் மாவோயிஸ்ட் கட்சியின் குண்டர்படைத் தலைவர்கள் கொலுத்திய அலுவலகங்கள் அவை தற்போது மாவோயிஸ்டுகளால் ஊருக்குள் நுழைய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் வெற்றி ஊர்வலங்களை நடத்தி லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்தனர். இதை கூட வினவு திரித்து எழுதி அற்பசந்தோஷமடைகிறது.

மாவோயிஸ்டுகளுக்கும் ( பாவம் மாவோ ) வினவுக்கும் மிகவும் பிடித்த மம்தவை தொடர்ந்து புகழ்ந்தால் என்னவாகும்? அக்மார்க் புரட்சிகர வினவு மீது அதை படிக்கும் அப்பாவி வாசகர்களுக்கு சந்தேகம் வருமல்லவா? எனவே தங்களது புகழ்பெற்ற வாசகத்தை பயன் படுத்தி சில வரிகள் " சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது" இப்போது மம்தாவையும் விமர்சனம் செய்துவிட்டார்களாம்!? ஆஹா என்ன அருமை? மம்தாயிஸ்டுகள் மக்களிடம் அடிவாங்க முடியாமல் விட்டுவிட்டு ஓடிப்போன கிராமங்களுக்குப் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் வெடிகுண்டுகளுடன் நுழையும் மாவோயிடுகள் பிடிக்கப்பட்டு மக்களால் நையபுடைக்கப்படுவதை வெறு வழி இல்லாமல் உள்ளூர் பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.

கடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் மாவோயிஸ்டு குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் சி.பி.எம். கட்சியை சார்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தினர். தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வன்முறையாளர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என எழுதியும் வருகின்றனர். ஆனால் மேற்குவங்க அரசு மாவோயிஸ்டுகளை பழிவாங்க துடிக்காமல், திசைத்தவரிய அவர்கள் வாழ்க்கையை பாதுகாக்க திட்டமிடுகிறது. உண்மை இவ்வாறு இருக்க தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு செய்வதற்கு தொடர்ந்து வினவு போன்ற வலைதளங்களும், பு.ஜ போன்ற பத்திரிக்கைகளும் முதலாளித்துவ பத்திரிக்கைகளையும் தாண்டி பணியாற்றுகின்றன.

அதுவும் மேற்குவங்க உளவுத்துறையின் அறிக்கையை, ப.சிதம்பரத்தின் கடிதத்தை யெல்லாம் மேற்கோள் காட்டி எழுதுகின்றனர். எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும் மாவோயிஸ்டுகள் என்கிற மம்தாயிஸ்டுகள் கையில் பயங்கர ஆயுதம் இருந்தால் அது புரட்சியின் எழுச்சி மார்க்சிஸ்டுகள் கையில் தடி இருந்தால் அது சமூக பாசிசமாம்! எப்படி இருக்கிறது இவர்கள் கதை. ஆயுதம் அல்ல பிரச்சனை அதை பயன் படுத்தும் தத்துவம்தான் முக்கியம்.

இதுவரை மேற்குவங்கத்தில் நிலபிரபுகளான காங்கிரஸ் மற்றும் மம்தா கட்சியை சார்ந்த நிலபிரபுக்கள் எத்தனையோ அநீதிகளை மக்களுக்கு இழைத்துள்ளனர். அவர்களை அழித்தொழிக்க முடியாத அல்லது விரும்பாத, அவர்களை நோக்கி சுட்டு விரலைக்கூட நீட்டாதவர்கள் அங்குள்ள மாவோயிஸ்டுகள். ஆனால் உழைப்பாளி மக்கள் கையில் நிலங்களை கொடுத்து நிலபிரபுகளின் கொட்டத்தை அடக்கிய மார்க்சிஸ்டுகளை அழித்தொழிப்பது எந்த வர்க்க நலனை காக்க என்பதை தமிழக அக்மார்க் புரட்சியாளர்கள் விலக்குவார்களா?

அவர்களின் கையில் இருக்கும் ஆயுதம் வரட்டு தத்துவத்தின் பிடியில் இருப்பதால் உழைப்பாளி மக்களை கொல்கிறது, கொள்ளையடிக்கிறது. இந்த உண்மை தெரிந்தும் மார்க்சிஸ்டுகள் மீது குற்றம் சுமத்தி தண்டனை வழங்கும் நீதிபதிகளாக நமது தமிழக ஐ.எஸ்.ஐ புரட்சியாளர்கள் மாறிவருவது வருத்தத்திற்கு உரியது.

தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வந்த கோயபல்ஸ் என்ன ஆனான் என்பதை உலகம் அறியும் ஆனால் வினவு??