Thursday, March 26, 2009

பொறுக்கி தின்ன வாய்சவடாலும் எதிர்புரட்சிக்கு மகஇகவும்

நாங்க மாவோவைச் சொன்னாலும்
மகஇக எஸ்.ஓ.சி பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.

அரை காலனித்துவ
அரை முதலாளித்துவப்
அரை நிலபிரப்புத்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
மகஇக கலைக்குழு பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !

தோழர் . மக்கள் இன்னும் தயாராய் இல்லை

அது வரைக்கும் ?

ஓட்டு போடாதிங்க!

அப்புறம் பாருங்க.. நேரா புரட்சிதான் !

கேட்டவரை அதிரச்சியடைய

டோட்டலாய் விளக்கினார் தோழர்

யாருமே கட்சியில் இல்லாட்டாலும் - சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
தன் கொள்கையை மட்டும் இழக்காது.

மக்கள் விரோதிகள் எவரும் இனி
(மமதா மாவோஸ்ட் கூட்டுபோல)
மகஇக விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !

யாருமே எங்கள ஏதுக்களனாலும் தமிழ்நாட்டுல
இருக்கிற நாலுபேரும் தடுத்தாலும்
சாருமஜீம் தாரு சபதம் முடிக்காமல் மகஇக அடங்காது.

அப்புறம் எப்போது புரட்சி?

அது இருக்கட்டும் தோழரே சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:

அன்று சாருமஜீம் தாருயை அடையாளம்
கண்டோம் அவரிடம் வந்த
அத்தனைபேரையும் கொன்றோம்.

கம்யுனிஸ்ட் கட்சி உள்ளே இருந்தே
இடது சீரகுலைவை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.

அப்புறமா மேற்கு வங்க நக்சல்பாரி கிராமத்தில்
ஆட்சியைப் பிடிச்சோம்.

அடுத்தது புரட்சி ?

பின்னே ஆயுதம் வன்முறை இல்லாமல்
சோசலிசம் படைக்க முடியாது என்பதை
சாரும் மஜீம்தாரு தலைமையில் அழித்தொழிப்பு என்று சொல்லி
அப்பாவி மக்கள ஏமாத்தி கொண்ணு போட்டோம் !

கல்லாவை வென்றெடுக்க
தனி தனியாக 82 கடை விரிச்யோம்

அமெரிக்காவிடம் நல்ல பேர எடுக்கு
புதுசு புதுச இயக்கம் வைச்சோம்
மகஇக என்.ஜீ.ஓ ஆரம்பிச்சோம் !

காசு சேரத்து கம்யுட்டர வாங்கி
இனையத்தில் சிபிஎம் ஆதிக்கம் ஒழிச்சோம்


சரி புரட்சி எப்போது ?

அட ! மமதாவை வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !

பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
52 சிபிஎம் தோழர்களை கொண்று போட்டோம்.

பிஜேபினு பேதம் பார்க்காமல்
அத்வானி அரவனைத்துகிட்டோம்.

வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி தொழிலாளி வாழ்வை ஒழிச்சோம்
அத்வானிக்கு கொடுத்த உறுதி மொழிப்படி
குஜராத்துக்கு கம்பெனியை மாத்தினோம் !

இதுவா புரட்சி !

இது மட்டுமா ! பாரப்பண ஆதிக்கத்தை ஒழிக்க
பாரப்பண தலைமையை ஏதுக்கிட்டோம்.
இட ஒதுக்கீடு தலித்துகளுக்கும்
பிற்பட்டவர்களுக்கும் கொடுக்க
கூடாதுன்னு புரட்சிக்காக
அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.

புலிகளை பாசிஸ்ட்டுகள் என்று சொன்னோம்
யாரும் கவணிக்கதால்
புலிகளை ஆதரிச்சி காசு பணமும்
போராட்டத்தின் தலைமையும் பெற்றோம் !


ஈழத்தமிழருக்காய் உயிரகளை எரித்து கசிந்து
பிண வாடை எடுத்த சுடுகாட்டில் அஞ்சாமல்
முன்நின்று வசுலித்த எங்கள் போரத்தந்திரம் சும்மாவா ?

இதிலென்ன புரட்சி ?

அன்ட பிசரண்ட அகிலம் அதிர - எங்கள்
ஆயுத கிடங்கில் புதிய கலாச்சாரத்தில்
புதிய ஜனநாயகத்தில் நாக்குழறி
முத்துக்குமார போன்ற அப்பாவி
இளைஞர்கள் 11 பேரின் படுகொலையில்
எச்சு ஊறி புலிகள் பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !

அடைந்தால் தனி நாடு அடையாவிட்டால்
சுடுகாடு என்று கோசம் போட்ட
தலைவர்களால் முடியாததை
இலங்கை பிரச்சனை
முன்வைத்து தமிழ்நாட்டை தனியாக
பிரிக்கபோகிறோம் ஓட்டுப பொருக்காத
கட்சியா ஆட்சி செய்ய போகிறோம்

நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?

போதும் எப்போதுதான் புரட்சி ?

வந்தது கோபம் தோழருக்கு :

அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி புரட்சின்னா. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?
எங்க கட்சி பேரே எங்களுக்கு
தெரியாது கட்சி திட்டமே கிடையாது
ஆனா ஓன்னு ஓட்டுபோடாதே புரட்சி செய்

காலனியம் பேசுவோம்!
ஏகாதிபத்தியம் எதிர்ப்போம்னு
சொல்லுவோம்!
இருந்தாலும் எங்க புரட்சி
குண்டு சட்டிக்குள்ளத்தான்!
அதாங்க எங்க எல்லையெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்
எங்களது அகில இந்திய தலைமையெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்!

அப்புறம் என்ன இருக்கவே இருக்குது
வாய்ச்சவடால் அகில இந்திய புரட்சிய
நடத்திட வேண்டியதுதான்.

பங்காரு அடிகளாரின் சிவப்பு படைக்கு
போட்டியா நாங்க இப்ப
கும்பமேளா நடத்தத் துவங்கிட்டோம்
முதலாளித்துவ பயங்கரவாத
மாநாடு நடத்துவோம்
வரக்கூட்டத்தை அப்படியே
லபக்கென்று பிடித்துக்கொண்டு
இலங்கைக்காக ஒரு ஆர்ப்பாட்டம்
நடத்துவோம்!

அய்யோ இந்தப் புரட்சிக்குத்தான்
இந்தக் கத்தா?

No comments: