Monday, January 5, 2009

மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி !

விஜயகாந்த்,ரஜினிகாந்த் போன்ற புரட்சியாளர்கள் முதல்வர்களாக வர வேண்டும் கொடி பிடித்து அலையிற நாட்டில் போலி ஜனநாயகம்,போலி அரசியல்வாதிகளின் கை பிடிக்குள் இருக்கிற நாட்டில்,கம்யூனிச சிந்தனைவாதிகளும் போலி கம்யூனிஸ்ட்டுகளாக அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது

கர்நாடக கம்யூனிஸ்ட்,கேரள, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் அந்த அந்த மாநில உணர்வோடுதான் இருந்தால்தான்  வோட்டு பொறுக்க முடியும் . எடுத்துக்காட்டாக ஒரு தமிழன்.தமிழன் என்ற உணர்வோடு இருந்தால் கேரளாவில் ஒரு சின்ன பெட்டிக்கடை கூட வைத்து பிழைக்க முடியாது. பிழைக்க போன இடத்தில் மலையாளிகளின் உணர்வோடு ஒத்துப் போனால் தான்,அந்த தமிழனால் உயிர் பிழைக்க முடியும்

. இந்த நிலைபாட்டை புரிந்து கொண்டால் தான் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகளை புரிந்து கொள்ள முடியும். இதனால் தான் கேரளா கம்யூனிஷ நாடாக இருந்தாலும்,தண்ணீர் தர மறுக்கிறது.இந்த நடைமுறை உண்மையை உணர்ந்தால் தான் இந்த மண்ணுக்கேத்த புரட்சியை முன்னெடுத்து செல்ல முடியும்.

மொழி,சாதி ,மதம் ,நாடு போன்ற பிரிவினை செய்யாத ஒரு புதிய இந்தியாவை அமைப்பது வெறும் கம்யூனிஷ்டுகள் மட்டுமே செய்ய வேண்டும் என்று குறை கூறி திரிபுவாதம் பேசாமல் அனைவரும் பங்கேற்க,பங்கேற்கபடி  செய்ய வேண்டும்.

 அதை விட்டு விட்டு கம்யூனிஸ்டுகளை குறை கூறுவதால் மட்டும் மகஇக-வே நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் ஆகிவிட முடியாது.

இந்தியாவில் ஊழல் பெருச்சாளிகளின் நிழலின் தான் பொதுவுடைமை ,பெரியார் இயக்கங்கள் வளர வேண்டிய சூழலுக்கு தள்ள பட்டு கிடக்கின்றன.

அந்த கட்சியை  சேர்ந்த தோழர்கள் தங்களின் சொந்த பணத்தை,நேரத்தை,உழைப்பை ஏன் சில சமயங்களில் இரத்தத்தைக் கூட கொடுத்து, தன் குடும்ப நலனை விட,நாட்டு நலனே முக்கியம் என்று பணம், பணம் என்று பணத்துக்கு பின்னால் ஓடும் சராசரி மனிதப் பிணங்களுக்கு மத்தியில் தியாக தீபங்களாக,உண்மையான மனிதர்களாக நடமாடி வருகிறார்கள்.

இவர்களுக்கு நீங்கள் மரியாதை கூட தர வேண்டாம்.அவமானப்

படுத்தாதீர்கள்! இவர்களின் தியாகங்களை கொச்சை படுத்தாதீர்கள்!

  பெரியார் படைத் தளபதி கி.வீரமணி பெரியார் சிந்தனைகளை விற்று காசக்கிறார் என்று ஊளைவிடுகிறீர்கள்.பெரியார் சிந்தனைகளை விற்று காசாக்குவது கடினம்.மக்களை சிந்திக்கிற தூண்டுகிற உண்மைகள் அவைகள். அந்த கடினமான பணியை பெரியாரின் இறப்புக்கும் பிறகும் கூட செய்து பெரியார் இயக்கத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டிய பெருமை,கம்பீரம் தமிழர் தலைவர் கி.வீரமணிக்கு உண்டு.இந்த நல்ல விஷயத்தை முடிந்தால் பாராட்டக் கற்றுகொள்ளுங்கள்.

உங்கள் அணுகுமுறையில்,பேச்சில்,உங்கள் எழுத்தில் அழுகல் வாடை அல்லவா வீசுகிறது?கடவுளை கட்டி அழுகிற முட்டாள் மூடநம்பிக்கைவாதிகளை, முதலாளிகளை காப்பாற்றுகிற பணமுதலைகளின் அசல் குரலாகத்தான் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

ஏ.....! ஓநாய் கூட்டமே!உன் குரலை நீயே உற்றுக் கேள்.அந்த உண்மை உனக்கே புரியும்.!

பொய் முகத்தோடு,பொய் இமெயில் முகவரியோடு,எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு அழுகிப் போன எழுத்துக்களை அள்ளி வீசும் கோழைகளே !நீங்களோ உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்? நீங்களா புரட்சியின் புதல்வர்கள்? அட! மானம் கெட்டவர்களே!

அரசு டாஸ்மாக் சாராயம் விற்ற காசில் ரேஷன் கடையில் சர்க்கரை பொங்கல்,ஒரு ரூபாய் அரிசி என்று இலவசமாக வழங்கும் போலி அரசியல்வாதிகளை தான் நீங்கள் அதிகமாக விமர்சிக்க வேண்டும்? அவர்கள் தானே ஆட்சியில் இருக்கிறார்கள்? 

மிஞ்சிப்போனால் தமிழ் நாட்டுக்குள் வெறும் பத்து இடங்களுக்கும் குறைவாக தேர்தலில் வெற்றி பெறும் (உங்கள் பாணியில் சொன்னால்) போலி கம்யூனிஸ்டுகளின் மீத உங்கள் எழுத்து அசிங்களை அள்ளி வீசுவது? அதிமுக,திமுக,தேமுக,மதிமுக போன்ற நாடு "முன்னேற" உழைக்கும் உண்மையான அரசியல்வாதிகளை,உண்மையான கம்யூனிஸ்ட்டுகளான நீங்கள் விமர்ச்சனம் செய்யுங்கள்! அந்த விமர்சனத்தை பார்த்து புல்லரித்துப் போகும் மக்கள் உங்களுக்கே ஒட்டு போட்டு புளகாங்கிதம் அடைவார்கள்!

எங்களுக்கு யாரும் ஓட்டெல்லாம் போட மாட்டர்கள் என்ற அவநம்பிக்கை உங்களுக்கு தோன்றினால்...

உங்கள் செயல்,நடவடிக்கைகள்,குழுக்களை கலைத்து விட்டு மக்களோடு மக்களாக வாழ முயற்சி செய்யுங்கள்!

பெரியார்,பொதுவுடைமை இயக்கங்களை குறை சொல்லுவது மட்டும்ந்தான் உங்கள் புரச்ச்ச்ச்ச்.....சி அரசியல் என்றால் தயவு செய்து எல்லோரும் நல்ல மன நோய் மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்!

அதுதான் உங்களுக்கும்,மக்களுக்கும்,நாட்டுக்கும் நல்லது!


ஆதிசிவம், சென்னை. www.beyouths.co.cc

Saturday, January 3, 2009

மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமை மகஇக சில கேள்விகள்?

பார்ப்பனீயத்திற்கு எதிராகவும், மக்களுக்கான அரசியல் என்றும் செயல்பட்டு வரும் மகஇக (மக்கள் கலை இலக்கிய கழகம்) அமைப்பின் தலைமையின் மேலும் அந்த அமைப்பின் சில செயல்பாடுகளின் மீதும் சில கேள்விகள் உள்ளன.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான மகஇகவின் நிலைப்பாடு

இடஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் மகஇகவின் நிலைப்பாடு இடஒதுக்கீடு விடயத்தில் மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் சி.பி.எம். (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மா)மின் குரலிலேயே பேசினால் கூட பரவாயில்லை அதையும் விட மோசமான பார்ப்பனீய ஆதரவு குரலில் பேசுகின்றன(பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுவது போன்ற தோற்றமளிக்கும் ஆனால் செயல்முறையில் பார்ப்பனீயத்துக்கு ஆதரவான குரல் தான் அது) இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படிக்கும் வரை இடஒதுக்கீடு பற்றிய இவர்களின் கருத்துகளை இந்திய சமூக சூழலில் மண்டியுள்ள சாதிய சமூக தாக்கங்களை பார்க்காமல் வெறுமனே எதையும் வர்க்க வேறுபாட்டோடு மட்டுமே பார்க்கும் கம்யூனிஸ்ட்களின் பார்வையே என்று நினைத்திருந்தேன், ஆனால் இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படித்த போது தான் இவர்கள் கம்யூனிஸ் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவை விட ஆபத்தான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது, அதையும் விட ஆபத்தானது இவர்களின் நிலைப்பாட்டை எதிர்க்க போகும் போது அதை எதிர்ப்பவர்களை மிக எளிதாக தீண்டாமையை ஆதரிப்பவர்களாக காண்பிக்க இயலும் என்பதே இதில் மிகவும் ஆபத்தானது.

இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் மறுப்பு எழுத இயலும் (இடஒதுக்கீடு பற்றி சில புத்தகங்கள், சில நேரடி அனுபவங்கள், சில கட்டுரைகள் எழுதிய என்னாலேயே முடியும் போது) இடஒதுக்கீட்டு ஆதரவு அறிவு ஜீவிகள் அவர்களின் வாதங்களை நொடிப்பொழுதில் தூளாக்க முடியும்.இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டின் நியாயங்களை Reverse Descrimination, Revenge என்பதுவே என்பது போன்ற கருத்தியலை முன் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவு ஜீவிகள், ஊடகங்கள் வாதத்தை வலுப்படுத்தும் விதமாகவே இவர்களின் தர்க்கம் அமைகின்றது.

முதலாளி தொழிலாளி என்று இரட்டை வர்க்கங்களை மட்டுமே உலகில் உள்ளன என்பவர்கள் போலும் இவர்கள், இந்திய சமூகத்தில் முதலாளி, தொழிலாளி வர்க்கப்பிரிவு முதல்நிலை வர்க்கப்பிரிவு அல்ல, சாதிய வர்ணப்பிரிவு தான் முதல் நிலை பிரிவு, அதுவும் கூட முதலாளி தொழிலாளி என்ற சரியான கோடு இழுத்து பிரிக்கப்பட்டதல்ல இந்த சாதிய வர்ணப்பிரிவுகள், சாதிய வர்ணப்பிரிவு என்பது படிநிலை , அடுக்குமுறை சமூகநிலை, எனக்கு கீழே நீ, உனக்கு கீழே இவன், இவனுக்கு கீழே அவன் இப்படியாக பிரிக்கப்பட்டுள்ள இந்த படிநிலை சமூகத்தில் நமக்கு கீழ் இருப்பவனை மேலே வராமல் பார்த்துக்கொண்டிருப்பதிலே மோதிக்கொண்டிருப்பதிலே எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டே மற்றவர்களின் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த படிநிலை அடுக்குமுறை சமூகத்தில் மூன்றாம் இடத்தில் இருப்பவனும் முதலிடத்தில் இருப்பவனும் ஒன்றா? ஒன்று தான் என்கிறது மார்க்சிய லெனினிய பார்வை, மிக மிக மோசமான ஒன்றையும், மோசமான ஒன்றையும் சமம் என்று கூறுவது மிக மிக மோசமானதற்கு சாதகமாகவே அமையும், படிநிலை அடுக்கின் மேலே இருப்பவனும் மூன்றாம் நிலையில் இருப்பவனும் ஒன்றா? மேலே இருப்பவன் செய்யும் செயலின் பிண்ணனியும் மூன்றாம் இருப்பவனின் செயலில் பிண்ணனியும் ஒன்றா? எதற்காக இத்தனை தூரம் தலையை சுற்றி மூக்கை தொடுகிறேன் என்றால் நேரடியாக அவர்கள் கூறும் விடயத்தை எதிர்த்தால் மிக எளிதாக என்னை தீண்டாமையின் சாதிக்கொடுமையின் ஆதரவாளனாகவும் முத்திரை குத்த இயலும், நேரடியாக இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை மிக எளிதாக சமாளிக்க இயலும், ஆனால் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் என்ற போர்வையில் அதே இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை சமாளிப்பது


மிக கடினமான ஒன்று அவர்களின் வேடத்தை களைப்பதற்கு கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும், அப்படி என்ன சொல்கிறார்கள் என்றால் தீண்டாமையை சாதி மேலாதிக்கம் செய்யும் சாதிக்கு இடஒதுக்கீடு கொடுக்க கூடாது, அட நியாயமாத்தானே சொல்லியிருக்காங்க என்று உடனே தோன்றினாலும் இந்திய அடுக்கு முறை படிநிலை சமூகத்தில் இப்படியான ஒரு காரணியின் மூலம் இடஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டுமெனில் தலித்களுக்கு கூட இடஒதுக்கீடு அளிக்கப்படாது, பள்ளர்கள், பறையர்கள் வேறு பாடு உயர்வு தாழ்வு, அருந்ததியர்களின் மீதான உயர்சாதி தலித்களின் தீண்டாமை அதே அருந்ததிய சாதியினர் அவர்களுக்கு துணி துவைத்து போடும் மற்றொரு சாதியினர் மீது நடத்தும் வன்கொடுமை என தலித்களுக்கே கூட இடஒதுக்கீடு கிடைக்காது. யாருக்குமே இடஒதுக்கீடு தர தகுதியில்லாத நிலைவந்தால் யாருக்கு இலாபம், யோசித்து பாருங்கள் யாருக்கு இலாபம்? உயர்த்தப்பட்ட சாதியினருக்குதானே? பார்ப்பனர்களுக்கு தானே? மகஇக சொல்வது போல செய்தால் யாருக்குமே இடஒதுக்கீடு கிடைக்காது.

தமிழ்தேசியம், இந்திய தேசியம் நிலைப்பாடுகள்

மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் தேசியத்தை ஆதரிக்கின்றன, அதாவது இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன, தமிழ் தேசியம் என்பதோ, மொழி வாரியான தேசியங்களோ, இனவாரியான தேசியங்களோ அவர்களை பொறுத்தவரை கெட்ட வார்த்தைகள் ரொம்ப கெட்ட வார்த்தைகள். புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் கம்யூனிச பாதையிலிருந்து பிரிந்து தமிழ் தேசியத்திற்காக போராட ஆரம்பித்ததே அவர்கள் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி மொழி இன வாரியான தேசியத்தை ஆதரிக்காதது, தேசியம் என்பது அந்தந்த இனக்குழுக்கள் உரிமைகள் கிடைக்கவில்லை என்றோ அல்லது எதற்காகவோ பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து செல்வது அவர்களின் உரிமை, பிரிந்து செல்லக்கூடாது என்பது சர்வாதிகார அடக்குமுறை என்றார் அவர், அடக்குமுறைக்கு எதிரானதாகவும் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் என்பவர்களும் தேசியம் என்ற அடக்குமுறைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் இந்திய தேசியம் யாருக்கு ஆதரவான தேசியம்? பெரியார்தாசன் மகஇக கூட்டத்திலே பேசியதை அவர்களே கவனித்திருக்கின்றார்களா? வெவ்வேறு இனம் மொழி கலாச்சாரத்தில் இருக்கும் இந்திய தேசியத்தை ஒன்றாக இணைப்பது பார்ப்பனர்களின் பூணுல் என்றார். மேலும் தமிழ் தேசியத்தை கருத்தளவில் ஆதரிக்காதவர்களை தமிழ் தேசியத்தை கருத்தளவில் கூட எதிர்ப்பவர்களை நாங்கள் ஆதரிக்க தயாராக இல்லை.

தமிழீழ நிலைப்பாடு

இது பற்றிய மிகப்பெரிய கள்ள மௌனமே சாதிக்கின்றது மகஇக, இவர்கள் தமிழீழத்தை ஆதரிக்கிறார்களா? தமிழீழம் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கிறார்களா?(அவர்களுடைய தேசிய அரசியல்படி பார்த்தால் தமிழீழம் பிரிவதை எதிர்ப்பார்கள் என்றே கணிக்க தோன்றுகின்றது) அப்படி எதிர்க்கிறார்கள் என்றால் தமிழர்கள் மீதான இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதம் பற்றிய நிலைப்பாடு என்ன? அப்படி சிங்கள இனவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றால் தமிழீழம் தனியாக பிரிவதை தவிர வேறு என்ன தீர்வை தமிழர்களுக்காக வைத்திருக்கிறார்கள்? (சிங்கள பாட்டாளிகளும் தமிழ் பாட்டாளிகளும் இணைந்து தமிழ்-சிங்கள் முதலாளிகளுக்கு எதிராக போராட வேண்டுமென்று கோரிக்கை எதுவும் வைத்து காமெடி கீமெடி செய்துவிடப்போகிறார்கள் - இதை சொன்ன வலைப்பதிவாளருக்கு நன்றி) தமிழீழ விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பவர்களை எப்படி நம்புவது?

தமிழ் மொழி, தமிழ் இனம்

மகஇக தமிழ்மொழி, தமிழினம், மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமை, வேற்று மொழியாதிக்கம் பற்றியெல்லாம் பேசியதாக தெரியவில்லை, அல்லது ஈனக்குரலில் பேசியிருக்கும், ஆனால் தமிழிசை விழா மட்டும் ஆண்டு தோறும் எடுக்கப்படும், தமிழ்மொழி , தமிழினம் இல்லாமல் எங்கிருந்து தமிழிசை மட்டும் வந்தது? மொழி வேண்டாம், இனம் வேண்டாம் அந்த மொழியின் இசை மட்டும் வேண்டும், இதன் பிண்னனி மிக ஆபத்தானது மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமைகள், தமிழின உணர்வு (தமிழ் மொழியையும் தமிழினத்தையும் பிரித்து பார்க்க முடியாது)கள் தமிழிசையை விட பார்ப்பனியத்துக்கு மிக ஆபத்தானது. தமிழ்மொழி இன உணர்வோடு தமிழிசையையும் செயல்படுத்துவதே சரியானதாக இருக்கும், அதை விடுத்து தமிழ்மொழி இனத்தை புறக்கணித்து விட்டு தமிழிசையை மட்டும் முன்னெடுப்பது பெரும் சந்தேகத்துக்குறியதே.

கனிமொழி இசை விழா நடத்தியதை இவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இவர்கள் நடத்தினால் அது பெருமை.அடுத்தவர் நடத்த கூடாதா?(அந்த விமர்சனத்தை பற்றி அவர்கள் கூறியது என்னவென்றால் அந்த இசைவிழா பழமையை போற்றி நிகழ்காலத்தை மறக்க வைக்கிறது என்பதாக இருந்தது)

திராவிட ஆரிய கருத்தாக்கம்

திராவிடம் ஆரியம் என்ற பேச்சையே ஆரம்பிக்க கூடாது தோழர்களிடம், உடனே சொல்வார்கள் அதெல்லாம் இப்போ எங்கே? அப்படியாகவே இருந்திருந்தா கூட பல ஆயிரம் ஆண்டுகால இனக்கலப்பில் அதெல்லாம் இல்லையே போயிந்தே, இட்ஸ் கான் என்பார்கள், அப்புறம் ஏனய்யா உயர்த்தப்பட்ட சாதிக்கும் இடையில் உள்ள சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே தோல் நிறத்திலேயே வேறு பாடு இருக்கிறதே, ஒரே மாதிரியான காற்று, நீர், வெப்பநிலை ஆனால் வர்ணம் மட்டும் மாறுபட்டு இருக்கிறதே என்றால் மொத்தமாக வாயை பூட்டு போட்டு மூடிக்கொள்வார்கள் இவர்கள் திராவிடம் என்ற வார்த்தையை கேட்டாலே அலறுவதற்கு கண்டிப்பாக திராவிட கட்சிகளே காரணம், திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணிப்பதன் மூலம் திராவிட கட்சிகளை திராவிட அரசியலை ஏற்காதது, திராவிட கட்சிகளை அட கட்சிகள் கூட வேண்டாம் திராவிட அரசியலை மக்கள் ஏற்காமல் இருக்க செய்வதன் மூலம் மறைமுகமாக பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மற்றெதையும் விட திராவிடம் என்ற வார்த்தையே பார்ப்பனீயத்துக்கு எதிரான பெரும் கலகச்சொல், திராவிடம் பார்ப்பனியத்திற்கு ஏற்படுத்தும் கிலியை வேறெதுவும் ஏற்படுத்தாது, ஏற்படுத்தியதில்லை.

பார்ப்பனியத்தை எதிர்க்கும் கட்சிகளின் மீதான கடும் விமர்சனங்கள் 

மிக மிக மோசமான ஒன்றையும் மோசமான ஒன்றையும் சமமென்று ஒப்புமைபடுத்துவது மிக மிக மோசமானதற்கு ஆதரவாகவே அமையும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் மற்ற கட்சிகள் இயக்கங்களின் சில முரண்பாடுகளை வைத்து அக்கட்சிகளின் மீதும் தலைவர்களின் சில தவறுகளை வைத்து அவர்களின் எல்லா நோக்கங்களையும் முயற்சிகளையும் வரைமுறையற்று ஆதாரமற்று தாக்குவதும் விமர்சிப்பதும் அவர்கள் எதிர்க்கும் பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் என்பது தெரியாதா மகஇக வின் தலைமைக்கு? ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் நீர்த்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு கொள்கை பிடிப்பானவர்கள் மேலும் அதில் உள்ளே செல்லாமல் தடுப்பதன் மூலம் அந்த கட்சிகளை முழுமையாக நீர்க்க செய்தால் அது பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் அதனால் கொள்கைபிடிப்பானவர்கள், தீவிரமாக இயங்கக்கூடியவர்களை அந்த கட்சிகளினுள் செல்வதை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே இதை சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது, ஏனென் இப்படியான சந்தேகமெனில் வீரியம் மிக்கவர்கள் கொள்கை பிடிப்புள்ளவர்கள் இருந்தும் 1990லிருந்து இப்போதுவரை 17 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன்? தீவிரமான செயல்திறன் மிக்கவர்களை வெகுசன இயக்கங்களில் இணைந்து பங்களிப்பு செய்யாமல் இருப்பதை தடுத்து இந்த இயக்கத்தில் அமுக்கி இந்த இயக்கமும் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காகவே

பார்ப்பனியத்தை எதிர்க்கும் மாற்று கட்சிகளின் மீதான இந்த வரைமுறையற்ற கடும் தாக்குதல் என்று சந்தேகபடலாமே? கொள்கை விமர்சனங்கள் என்பதை தாண்டி மேலே சேறடிக்கும் சவுக்கடிகளை விமர்சனங்கள் என்ற வரையறையிலா எடுக்க முடியும்?

மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமை

இந்த மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமைகளை கண்டாலே எமக்கு ஒவ்வாது, புலவர் கலியபெருமாள் மற்றும் பல போராளிகள் களத்திலே இறங்கி போராடிக்கொண்டிருந்தபோது கம்யூனிஸ்ட்(மா.லெ.) மற்றும் இணை துணை கம்யூனிச குழுக்களில் கோலோச்சிய இந்த மாதிரியான மிடில் கிளாஸ் அறிவு ஜீவி குழுக்கள் தான் இவர்களை தாறுமாறாக விமர்சித்துக்கொண்டும், யார் இயக்கத்தில் இருக்க வேண்டும் இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அதிகாரம் செய்து கொண்டுமிருந்தார்கள், இவர்களை பற்றி எஸ்.வி.இராஜதுரை தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார், அப்படியான ஒரு மிடில் கிளாஸ் அறிவு ஜீவி தலைமை தான் இன்று மகஇக வில் அமர்ந்து கொண்டுள்ளார்கள்.மக்கள் போர் படை (PWG) கணபதி போன்றவர்கள் மகஇக தலைமையை இந்திய ஏஜென்சிகளின் கையாட்கள் என்றே விமர்சித்துள்ளதாகவும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருப்பதாகவும் படித்திருக்கிறேன், அது தொடர்பான கட்டுரைகள் எங்கேயாவது கிடைக்கிறதா என்று நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.

பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமை பார்ப்பனரல்லாதோராக இருந்தால் அவர்கள் 100 % சந்தேகத்திற்கிடமின்றி இருந்தாலே போதுமானது, ஆனால் 
பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமையே பிறப்பால் பார்ப்பனராக இருந்தால் அந்த தலைமை 200 % சந்தேகத்திற்கிடமின்றி இருக்க வேண்டும் ஆனால் மேற் குறிப்பிட்ட சந்தேகங்களினால் மகஇக தலைமை 50% கூட சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கவில்லை என்பது சர்வ நிச்சயம். மேலும் ம க இ கவின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், எதை நோக்கி செல்கிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாக இல்லை. இதுவே இன்னமும் அதிகமாக சந்தேகப்பட வைக்கின்றது.

மகஇக தோழர்களுக்கு

தோழர்கள் கோபப்பட்டு எனக்கு ஐ.எஸ்.டி போனெல்லாம் போட்டு காசு செலவு செய்ய வேண்டாம், அப்படியும் போன் செய்யவேண்டுமென்று ஆசைப்பட்டால் வரவனை செந்திலிடம் என் கை பேசி எண் இருக்கின்றது வாங்கிக்கொள்ளுங்கள்.


Friday, January 2, 2009

ம.க.இ.க-வின் சந்தேகத்துகுரிய தலைமை

இருக்கும் மார்க்சியர்களில் கொஞ்சம் தீவிரமாக உண்மையான மக்கள் பணியில் இருப்பவர்கள் ம.க.இ.க தோழர்கள் என்பதில் நமக்கு மாற்று கருத்துகிடையாது. அதே வேளை உலகத்தில் யாரையுமே ஒப்புக்கொள்ளமாட்டோம் ,நாங்கதான் பெரிய புடுங்கி என்றும் பிற இயக்கத்தலைவர்களையும்,இயக்கங்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுவதுதான் புதிய ஜனநாயகபூர்வமான (அ )!!! புரட்சிகர வழிமுறை என்று கொண்டிருப்பது இலேசான புன்னகையைமட்டுமே வரவழைக்கிறது. இத்தனையாண்டுகாலத்தில் 2000க்கு பிறகே பார்ப்பனியம் என்கிற பதத்தை பிரயோகிக்க துவங்கியதும் கட்சியின் தலைமைப்பொறுப்பில் பார்ப்பனர் இருப்பதும் ஊரரியாத ரகசியங்களா என்ன?

இருந்தும் தோழர்களே, உங்களின் பன்னாட்டு நிறுவன எதிர்ப்பிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் "சந்தேகம்" கொள்ளாத தோழர்கள் பெரியாரிய இயக்கங்களிலும் உண்டு. "மாமா" ஆசிரியர் வீரமணியா இல்லை தோழர். மருதையனா என்பது தேவையில்லாத விவாதம்.

http://kuttapusky.blogspot.com/2007/06/blog-post_25.html

Tuesday, December 30, 2008

வினவு - வினை செய்! மாமா வேலை செய்வோருக்கு எதிராய்!

.... - மக்கள் கலை இலக்கிய கழகம் கடந்த 30 ஆண்டுகளாக ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு தோல்வி கண்ட நிலையில், தற்போது கணிணித் திரையின் மூலம் மாய வலையை வீசி வருகிறது. அதாவது தற்போது இணையத்தின் மூலமே புரட்சியை நடத்தி விடலாம் என்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டது. மேலும் ....-வின் உண்மை முகம் என்ன என்று நமது வாசகர்களுக்கு தெரியாதல்லவா? அதனால் அது தன் அமெரிக்க மறைமுக எசமான் இட்ட கட்டளைகளை தற்போது நன்கு நிறைவேற்றி வருகிறது. இது குறித்த விமர்சனங்களுக்கு செல்வதற்கு முன் அதன் உண்மை முகத்தை கிழித்து அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அதாவது .... என்கிற அமைப்பு ஏதோ பெரிய புரட்சிகர அமைப்பு போல பண்ணையார் அரசியல் செய்து வருகிறது. அதாவது பண்ணையார் வைத்ததே சட்டம். அதனை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. என்கிற நிலப்பிரபுத்துவ - ஏகாதிபத்திய மனோபாவம் வெளிப்படுத்துவதை இணையவாசிகள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.

சரி, ஒரு புரட்சிகர அமைப்பிற்கு அடிப்படை ஒரு புரட்சிகர கட்சி! தன்னை ஒரு புரட்சிகர அமைப்பு என்று கூறிக் கொள்ளும் .... என்கிற ஒரு கலை அமைப்பு பிரதானப்படுத்தக்கூடிய அரசியல் அமைப்பு எது என்று யாராவது கேட்டால், இது உளவுத்துறை கேட்கும் கேள்வி! என்று ஒரே வரியில் முடித்துக் கொள்வார்கள்.

உண்மையில் இந்த அமைப்பின் பின் இயங்கும் அரசியல் சக்தி - .... மறைமுகத் தலைமை CPI-ML [SOC] என்பதே. இன்றைய நவீன ஜனநயாக உலகில் - தங்களை நக்சலைட்டுகள் என்று பகிரங்கமாக கூறிக் கொள்ளும் .... அதன் கட்சிப் பெயரை மட்டும் வெளியில் சொல்லவே சொல்லாதாம். உண்மை இங்குதான் இருக்கிறது. தன்னுடைய கட்சி இது என்று கூறிவிட்டால் அப்புறம் வரக்கூடிய இடிகளை யார் தாங்குவது என்கிற அவநம்பிக்கையான அரசியல்தான் காரணம்.

சரி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் மார்க்சும், எங்கெல்சும் 1847 இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

அதாவது கம்யூனிஸ்ட்டுகள் தங்களது நோக்கம் இதுதான் என்று உலகறிய பறைசாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த ஏகாதிபத்திய தரகர்கள் இந்தியாவில் உள்ள போலீஸ் மற்றும் உளவுத்துறை கண்களில் எல்லாம் மண்ணைத் தூவி விட்டு அரசியல் நடத்துகிறார்களாம்! இதைவிட கோமாளித்தனமானது எதாவது இருக்க முடியுமா?

சரி, ஒரு புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்தின் அடிப்படை அம்சைமே ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு.

அதாவது அந்த அமைப்பின் கிளைகள் முறையாக கூட வேண்டும். குறிப்பாக கட்சி மேலிருந்து கட்டப்படுவது. அந்த அமைப்புக்கான மாநாடுகள் திட்டமிட்ட கால அளவில் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூடி விவாதித்து ஆவணங்களை இறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைகளை மேற்கண்ட அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்..சி. குழு எப்படி மேற்கொள்கிறது! பரலோகத்திலா? அல்லது இணையத்தின் மூலமே ஏதாவது சாட்டிங் கான்பிரன்ஸ் மூலம் நடத்துகிறீர்களா? என்ற கேள்வி எழுவது இயல்பானதே!

நேபாளத்தில் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள நேபாள மாவோயிஸ்ட்டுகள் கூட தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினார்கள். அத்துடன் தற்போது ஜனநாயக முறையிலான தேர்தலிலும் பங்கெடுத்துக் கொண்டு ஆட்சியாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்?

அது மட்டுமா? இந்தியாவில் உள்ள பல நக்சல் அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகள் தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துகிறார்கள். (இதில் எனக்கு வித்தியாசம் உண்டு அது பற்றி இங்கே விவாதிக்கவில்லை.)

ஆனால், தங்களை பெரிய புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதும், தாங்களே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என்று உளறுவதும், நக்சலைட்டுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் .... - எஸ்..சி. கும்பல் தங்கள் கட்சியின் பெயரைக் கூட சொல்வதற்கு ஏன் தொடை நடுங்குகிறது என்றுத் தெரியவில்லை? கேட்டால் உங்களுக்கு போலீஸ் அடக்குமுறை பற்றி தெரியாது என்று வேறு அங்கலாய்ப்பார்கள்! சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவன் தனது உயிரை என்றைக்கும் ஒரு பொருட்டமாக மதித்தது கிடையாது! ஆனால் நீங்கள் பேசுவது நக்சலிசம் - சொகுசான நக்சலிசம். திண்ணை வேதாந்தம்.

மேலும், தற்போது ....வில் செயல்படும் யாருக்கும் சொந்தப் பெயர் கிடையாது! போலிகள்தான். அனானிகள்தான். அது மட்டுமா இணையத்தில் கூட அனானியாக பெயர் வைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு புரட்சிகர மாமா வேலை பார்ப்பதுதான் இவர்கள் வேலை.

அது மட்டுமல்ல; ஒரே ஒரு .... ஆட்களாவது தாங்கள் குடி இருக்கும் இடத்தில் செயல்படுகிறார்களா? என்றால் இருக்கவே இருக்காது. அப்புறம் சாயம் வெளுத்து விடுமே! அதனால்தான் சி.பி.எம். செயல்படற இடமா பார்த்து பிரச்சாரம் செய்வது - பிரச்சனை செய்வது என்பது இவர்களின் தொடர் கதையாகிப் போயுள்ளது. வீண் வம்புக்கு இழுப்பது இவர்கள்தான் எல்லா இடத்திலும். சி.பி.எம். கூட்டம் போட்டால் அங்கே இவர்களது புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அதாவது சீர்குலைவு அரசியலின் உச்சகட்ட சீரழிவே .... - எஸ்..சி. கும்பலின் சீரழிந்த அரசியல்.
இவர்களது வர்க்க எதிரி யார் என்று கேட்டால் இன்று வரைக்கும் தெரியாது? ஏனென்றால் இவர்களிடம் கட்சித் திட்டமே கிடையாதே! அதனால்தான் தற்போது இவர்கள் "இந்தியா மறுகாலனியாவதை எதிர்க்கிறார்களாம்". அது சரி உங்கள் அமைப்போ எஸ்..சி. மாநில அமைப்பு கமிட்டி. அப்படியென்றால் உங்களது அகில இந்திய தலைமை எது? இதுவரை தெரியாது? அது மட்டுமா? இவர்களது அரசியல் அபத்தம் "தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு" என்று அரசியல் முழக்கம் வைத்த ஓடுகாலிகள்தான் இந்த ....-வினர் என்பதை நாம் மறக்க கூடாது.
இந்திய புரட்சி பற்றி பேசும் இந்த புரட்கிர ஓநாய் கூட்டம் தமிழில் பேசாத மக்களை எந்த நாட்டிற்கு கடத்தக் கோருகிறது என்று கேட்டால் பல்ளிளிப்பார்கள். இதுதான் கேள்வி! உங்கள் இயக்கம் புரட்சிகர இயக்கமா? அல்லது பிழைப்புவாத இயக்கமா? உங்கள் புரட்சி தமிழகத்தில் மட்டுமா? அல்லது நாடு தழுவியதா? என்றெல்லாம் நாம் கேட்கக் கூடாது. இதுவெல்லாம் உளவுத்துறை கேட்கும் கேள்வி என்று பசசப்புவார்கள்.
அடுத்து, இவர்களது முதன்மையான எதிரி யார் தெரியுமா? சி.பி.எம்.தான். அதாவது பா... மற்றும் காங்கிரசை எதிர்ப்பதெல்லாம் சும்மா பெயருக்கு புரட்சி என்று காட்டிக் கொள்ளத்தான். அதாவது இந்தியாவில் தனிப்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியாக சி.பி.எம். வளர்வதை இந்திய முதலாளிகள் மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகளும் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் புரட்சியைப் பேசிக் கொண்டே சி.பி.எம்.யை எதிர்க்க வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தோடு செயலாற்றுகிறார்கள். இதுதான் .... - எஸ்..சி. கும்பலின் உண்மையான அரசியல்.
அது மட்டுமா? ஊருக்குதான் உபதேசம் என்பது இவர்கள் பழிமொழி இவர்களது அமைப்பு நடத்தும் புதிய காற்று புத்தக நிலையத்திற்கு செல்லுங்கள். அங்கே சோம வள்ளியப்பனின் பங்கு மார்க்கெட் புத்தகம் கொடிகட்டி செம ஜோராக விற்பதை பார்க்கலாம். அதாவது இவர்களது தொண்டர்களுக்கு புரட்சியை சொல்லிக் கொடுக்கிறார்களாம். அதாவது பங்கு மார்க்கெட்டில் எப்படி சூதாடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் இந்த அமைப்பில் சேர்ந்து செயலாற்றிய பல தொண்டர்கள் 3 ஆண்டுகளுக்கு கூட இந்த அமைப்பpல் நீடிப்பதில்லை என்பது உண்மையானது. அந்த அளவிற்கு இவர்களது அரசியல் சாக்கடை வீசும். தற்போது இவர்களது உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்று சொன்னால் அதைவிட இரண்டு மடங்கு தொண்டர்கள் இவர்கள் அரசியல் சாக்கடையைப் பார்த்து ஓடி விட்டார்கள். மேலும் தற்போது இவர்கள் வினவு - வினை செய் என்று இணையத்தில் தூண்டில் வீசுகிறார்கள். உன்னுடைய உண்மையான முகம் என்ன என்று வினவுங்கள் நன்பர்களே. இன்னே வினை செய்யுங்கள். இந்த ஏகாதிபத்திய தாசர்களுக்கு எதிராக.

இவர்களது நிஜ முகத்தை அறிந்து கொள்ள இதையும் படிக்கவும்.

அழுகி வரும் .... மறைமுகத் தலைமை!
பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!
அடிமைக்கு மகாராஜா பட்டம் சூட்டும் ....!
தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ....!
.... தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்...

கூரையேறி கோழி பிடிக்காதவர்கள்!

கற்பனாவாதத்தை புரட்சியாக கொண்டதே ....!



சந்திப்பு

http://santhipu.blogspot.com/

மகஇக சொம்பைகளும் அவர்களின் போலி வார்த்தை புரட்சியும்?


மகஇக உள்ளவர்கள் யார்?

புத்தகத்ததை படித்துவிட்டு களம்பற்றி தெரியாமல் புரட்சி செய்ய வந்தவர்கள்.
சிபிஎம் கட்சியில் இருந்து முறைகேடுகளில் ஈடுப்பட்டதால் நீக்கபட்டவர்கள்.
மார்க்சிய லெலினிய கோட்பாடுகளை மக்கள் மத்தியில் பரவாமல் தடுக்கும் நோக்கோடு முதலாளித்து சிந்தாந்தவாதிகளின் சிந்தனைபோக்கில் ஊரி திளைப்பவர்கள்.
வேலைவெட்டி இல்லாத உழைத்து உண்ண தெரியாத மற்ற கட்சியில் இருந்து வந்தவர்கள்.
மார்க்சியம் குறித்து மக்கள் மத்தியல் பீதியை உண்டாக்கி அதன் மூலம் முதலாளித்துவ சத்திகளுக்கு சேவகம் செய்பவர்கள்.
போதிய வழிகாட்டல் இல்லாத ஒன்று இரண்டு தோழர்கள்.

1967 இல் இளம்பிள்ளவாத கோளாரின் காரணமாக சீர்குலைவாளர்களின் நக்சல்பாரி சிபிஐ எம் எல் இயக்கம் துவக்கப்பட்டது. அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம் தான் சரி என்பது அவர்களது கொள்கையாகும் . இந்த அணுகுமுறையே மிக செயற்கையானதாகும். அந்தப் பகுதியின் நிலைமை என்ன பகுதி மக்களின் உடனடித் தேவை என்னஇ இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே கிடையாது. கண்மூடிதனமான வழியில் தான் அழித்தொழிப்புக்கு ஆட்களைத் தயார் செய்தார்கள். அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது.

இந்தியாவின் ஓர்ஜினல் புரட்சியாளர்கள் இவர்கள்தான் என்று இந்த இயக்கத்திற்கு வந்த அப்பாவி தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாக புரட்சி வரும் சமூகம் மாற்றம் பெறும்என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள் புரட்சிகரவாய்வீச்சில் உள்ள வேகம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள். அழித்தொழிப்பு யாரை எதிர்த்து என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத காரணத்தினால் உணர்ச்சிகராமக வேலைசெய்த பல தோழர்கள் வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

ஆனால் தொடர்ந்து கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கைகூலியாக செயல்பட்ட சிபிஐ எம் எல் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிரிந்து அழித்தொழிப்பு என்ற பெயரில் கொலைஇ கொள்ளைஇ வழிபறி போன்ற கேவலமான சீர்குலைவு நடவடிக்கைகளை புரட்சி என்ற லேபில் ஒட்டி செயல்பட்டு வருகின்றனர்.

Wednesday, October 29, 2008

விவிமு சொம்பைகளும் ! மகஇக ரவுடிகளும் !!

விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போன விவிமு (மகஇக) கட்சிக் காலிகள் அங்கே ஒரு அரசியல் படுகொலை நாடகத்தை ஜூன் மாதம் 20 ஆம் தேதி அரங்கேற்றிருந்தர்கள்.

இந்த நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி காலையில் தோழர் கருணாநிதி (40) கடுமையாக தாக்கப்பட்டார். அரிவாளும் இரும்புத் தடிகளும் ஏந்திய விவசாயிகள் விடுதலை முன்னணியின் எழுமலை, ஜெயபால், ராஜா, மண்ணாங்கட்டி, சுடர்ஒளி ஆகியோர் தலையில் சுமார் 10 பேர் கொண்ட கொலைக்கும்பல், நிராயுதபாணியான தோழர் கருணாநிதிச் சுற்றி வளைத்துக் கொண்டு வெட்டிக் கொலை வெறி தாக்குதலை நடத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அவரது வீட்டையும் கடுமையாக அடித்து நொருக்கி உள்ளனர் விவிமு சொம்பைகள். பலத்த காயம் அடைந்த கருணாநிதி விழுப்புரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார். இது குறித்த புகாரின் அடிப்படையில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் ஜெயபால்,ராஜா ஆகிய இரண்டு விவிமு சொம்பைகளை மட்டுமே கைதுசெய்துஉள்ளனர். மற்ற ரவுடி தப்பி ஓடிவிட்டனர்.

Monday, July 21, 2008

காரப்பட்டு: (விவிமு) மகஇக அழித்தோழிப்பு வெறியாட்டமும்: இனையத்தில் பொய்பிரச்சாரமும். சாதிவெறி தலைமையும்! கிரிமினல் தொண்டர்களும்!

தலித் மக்களான உழைக்கும் வர்க்கத்தினர்கள் மீது இரக்கமின்றி நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அராஜகம்.! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு போலி மக்கள் புரட்சி!

1967 இல் இளம்பிள்ளவாத கோளாரின் காரணமாக சீர்குலைவாளர்களின் நக்சல்பாரி சிபிஐ எம் எல் இயக்கம் துவக்கப்பட்டது. அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம் தான் சரி என்பது அவர்களது கொள்கையாகும் . இந்த அணுகுமுறையே மிக செயற்கையானதாகும். அந்தப் பகுதியின் நிலைமை என்ன , பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே கிடையாது. கண்மூடிதனமான வழியில் தான் அழித்தொழிப்புக்கு ஆட்களைத் தயார் செய்தார்கள். அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது.

இந்தியாவின் ஓர்ஜினல் புரட்சியாளர்கள் இவர்கள்தான் என்று இந்த இயக்கத்திற்கு வந்த அப்பாவி தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாக புரட்சி வரும் , சமூகம் மாற்றம் பெறும்’ என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள் புரட்சிகரவாய்வீச்சில் உள்ள வேகம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள். அழித்தொழிப்பு யாரை எதிர்த்து என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத காரணத்தினால் உணர்ச்சிகராமக வேலைசெய்த பல தோழர்கள் வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

ஆனால் தொடர்ந்து கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கைகூலியாக செயல்பட்ட சிபிஐ எம் எல் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிரிந்து அழித்தொழிப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வழிபறி போன்ற கேவலமான சீர்குலைவு நடவடிக்கைகளை புரட்சி என்ற லேபில் ஒட்டி செயல்பட்டு வருகின்றனர்.

நந்திகிராம் அதற்கு ஒரு நாடறிந்த எடுத்துக்காட்டு. நக்சல்பாரிகளின் துரோகத்தை எங்கெல்லாம் மார்க்சிஸ்டுகள் எதிர்க்கிறார்களோ ! எங்கெல்லாம் மார்க்சிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளால் இவர்கள் அம்பலமாகிறார்களோ! அங்கெல்லாம் அரசியல் படுகொலைகளை நிகழ்த்த புரட்சிகர போலி நக்சல் கும்பல் தயங்குவதில்லை. மேற்குவங்கத்தில் மட்டும்மல்ல தமிழகத்தில் நல்ல எடுத்துகாட்டு காரப்பட்டு.

விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போன விவிமு (மகஇக) கட்சிக் காலிகள் அங்கே ஒரு அரசியல் படுகொலை நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் காரப்பட்டு இராசேந்திரன் (45) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ( இவர் முன்பு விவிமுல் இருந்து அவர்களின் பொரிக்கி தின்னும் நடவடிக்கையில் பங்கு கிடைக்காமல் தேமுதிகவிற்கு மாறிவிட்டார். எங்கே அவர் வெளியே சென்று தங்களது கட்டப்பஞ்சாயத்து காளித்தனங்களை வெளியே சொல்லிவிடுவாரோ என பயந்து அவர் மீது அழித்தொழிப்பு நடவடிக்தைக எடுக்க திட்டமிட்டனர்.)

இந்தப் அழித்தொழிப்பு தற்செயலாக நிகழ்ந்து விடவில்லை. மொத்தத் தாக்குதலையும் மகஇக(விவிமு) கட்சியின் விழுப்புரம் மாவட்டத் அமைப்பாளர் ராமசாமி என்ற நபரே திட்டமிட்டு கொடுத்துள்ளார். இவர் யோக்கியதை என்ன தெரியுமா ஜெயலலிதாவிற்கு புரட்சிதலைவி என்ற பட்டம் கொடுப்பதும். முசோலினி தனது கட்சியின் பெயரை சோசலிச கட்சி என்று வைத்து கொண்டதும் எப்படி கேவலத்திற்கு உரியதோ அப்படி தலித் மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டழவிழ்த்துவிடும் இந்த ராமசாமி தனது பெயரை ராமசாமி அம்பேத்கார் என்று வைத்துகொண்டுள்ளார். (மகஇக பொறுக்கிகள் இந்த கட்டுரைக்கு வழக்கம் போல பொய்யான மறுப்பு தெரிவித்தால் ராமசாமியின் முழுகதையும் அடுத்த கட்டுரையில் வெளியிப்படும்)

1978 ஆம் ஆண்டு முதல் போலி நக்சல் கும்பலின் பிடியில் அந்த காரப்பட்டு கிராமம் இருந்து வருகிறது. இங்கு மட்டும் இவர்கள் செயல்பட அடிப்படைகாரணம். இது ஆதிசாதிக்க சாதியின் அமைப்பாக இருப்பதுதான், கடந்த உள்ளாட்சி தேர்தலில்தான் முதல் முறையாக அந்த கிராமமக்கள் வாக்களித்து உள்ளனர். இதுநாள்வரையிலும் விவிமுவினரின் அராஜக மிரட்டலால் தேர்தல் புறக்கணிப்பில் மக்கள் தள்ளப்பட்டுவந்துள்ளனர்.

இந்த சூலில் 1986ம் ஆண்டு இவர்களின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்த இளைஞர்கள், உழைப்பாளி மக்கள் சிபிஎம் கட்சியை அந்த ஊரில் துவக்குகின்றனர். உண்மையான புரட்சிகர செங்கொடி இயக்கம் அங்கு வேர்விட துவங்கியதும். இந்த போலி கம்யூனிஸ்ட்டுகளுக்கு பிரச்சனை ஆரம்பமாகிறது.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் சிபிஎம் வெற்றி பெறும் என்று தெரிந்தவுடன் விவிமுவினர் எந்த அளவு கேவளமாக சென்றார்கள் தெரியுமா?

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது முதல்முறையாக அவர்கள் ஓட்டுபொறிக்கி வேலையை மிகப் சிறப்பாக செய்து, சாராயம் ,மற்றும் பணத்தை வாரியிரைத்து அஇஅதிமுக வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தாயசத்தில் வெற்றி பெற வைத்தனர். ஏன் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்தனர் தெரியுமா ? தாங்கள் நேர்ரடியாக ஓட்டு போரிக்கினால் கைஅழுக்காவும் என்பதால் இந்த ஏற்பாடு. இதுதான் இவர்களின் வீரம்.

இந்த தேர்தலின் பிறகு சிபிஎம் கட்சியை சார்ந்தவர்களின் மீது 6 முறை தாக்குதல் தொடுக்கபட்டுள்ளது. குறிப்பாக தேர்தலில் விவிமு அஇஅதிமுக தேர்தல் கூட்டணியை அம்பலபடுத்தி தேர்தல் பணி செய்த சிபிஎம் தோழர் ராமுவின் குடும்பம் அழித்தொழிப்புக்கு உள்ளாக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜுன்மாதம் 14ந்தேதி சிபிஎம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இவர்களின் தேர்தல் பித்தலாட்டங்கள் கட்டபஞ்சாயத்து போன்ற செயல்கள் அம்பலபடுத்தப்ட்டது.

அதன்பிறகு 15ந்தேதி மகஇக(விவிமு) மக்கள் கமிட்டி கூட்டம் அறைக்கூட்டமாக நடத்தப்பட்டு அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களையும் குறிப்பாக மகஇக(விவிமு) இருந்து வெளியேறிய தற்போதைய சிபிஎம் ஆதரவாளர் ராசுகன்னுவையும், தேமுதிகாவில் சேர்ந்துவிட்ட ராஜேந்திரனையும் தீர்த்துகட்டுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

இந்த கூட்டத்தின் தகவலை அறிந்து, சிபிஎம் தோழர்களுக்கு ஆபத்து என்பதை விளக்கி 16 ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . (விவிமு) மிது 17ந்தேதியும் 18ந்தேதியும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தங்கள் கட்சியிலிருந்து தே.மு.தி.க சென்ற இராசேந்திரனும், சிபிஎம்-ல் இருக்கும் ராசுகண்னுவும், சிபிஎம் தோழர்களும் விவிமு அதிகாரத்தை ம்க்கள் மத்தியில் மங்கச் செய்ததால் இவர்கள் மீது வன்மம் கொண்டு அலைந்தனர்.

சிபிஎம் தோழர்களை கொலை செய்வது, பழியை ராஜேந்திரன் மிது போடுவது என்ற நோக்கத்துடன் அப்பாவி ராஜேந்திரனை 19ம் தேதி இரவு சந்தித்து மறுநாள் மாலையில் அழித்தொழிப்பு பணி உள்ளது. நீ வரவேண்டும் இல்லையெனில் கொலை செய்யப்டுவாய் என்று மிரட்டி அவர் கடப்பாரையை கொடுத்துச் செல்கின்றனர். இந்த தகவலை உயிர் பயத்துடன் ராஜேந்திரன் தனக்கு நெறுக்கமான சிலரிடம் சொல்கிறார். இவர் சொன்னது விவிமு தலைமை காதுக்கு செல்கிறது. அப்போதுதான் ராஜேந்திரன் உயிரோடு இருந்தால் தனக்கு எதிராக சாட்சியாக மாறிவிடுவார் என்று அவறையும் கொலை செய்ய திட்டமிட்டடனர்.

இந்த சுழலில் 20ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராமு இருவரும் சுடுகாட்டு பக்கம் சென்றுகொண்டு இருந்த போது ஏழுமலை தலைமையில் 4 பேர் கொண்ட விவிமு கொலை கார கூட்டம் இவர்களை கொலைசெய்யும் நோக்குடன் தாக்குகின்றனர் சிபிஎம் தோழர்கள் இரண்டு பேராக இருந்தாலும் விவிமு கூலிகளை வீரத்தோடு எதிர்த்து தாக்குகின்றனர். அடிதாங்க முடியாமல் ஏழுமலை மற்றும் அவனது கையால் கூட்டம் இன்னும் சிலரை அழைத்து வர ஓடுகின்றனர். அந்த நேரம் முன்நாள் மிரட்டப்பட்ட ராஜேந்திரன் இராஜேந்திரன் கட்டப்பாரையுடன் அங்கு ஓடிவருகிறார் சிலர் அவரை தடுதது பார்த்தனர் அவர் கேட்க்காமல் வேகமாக வரும்போது தடுக்கி விழும்போது கடப்பாரை அவர் வயிற்றில் குத்திவிடுகிறது.

இந்த நேரம் சிபிஎம் தோழர்களால் அடித்து விரட்டப்பட்ட ஏழுமலை தலைமையிலான விவிமு மகஇக கூட்டம் கொலை வெறியுடன், ஆயுதங்களுடன் அங்கு வருகின்றனர். அங்கு சிபிஎம் தோழர்கள் இல்லை இருந்தது அடிப்பட்டு கிடந்த ராஜேந்திரன் மட்டுமே? கொலை வெறியல் வந்த ஏழுமலை நேற்று "இரவு போட்டு கொடுத்த" ராஜேந்திரனை போட்டால் பழி சிபிஎம் மீது விழும் என்று கணக்கிட்டு அவரை சாமாரியாக வெட்டுகின்றனர் முதலில் வெட்டு விழுந்த பின்னர்தான் புரிகிறது. யாறுக்கு ஆதராவா வந்தோமோ அவர்களே வெட்டும்போது ""அஞ்சு பொம்பளப் புள்ளங்கடா, வேணாண்டா,என்ன வெட்டாதீங்கடா'' உங்களுக்காதான் வந்தன் என்று கதறியிருக்கிறார். தலையில் அரிவாள் இறங்கியவுடன் அந்தக் கதறலும் நின்றுவிட்டது

இதை தடுக்கவந்த பொதுமக்களையும் சிபிஎம் தோழர்களையும் கடுமையாக தாக்கியதில் 3 ஆண் தோழர்கள் 2 பெண் தோழர்களை கடுமையாக தாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். சம்பவ இடத்தில் துடித்துக்கொண்டு இருந்த ராஜேந்திரன் விட்டு விட்டு ஓடிய மகஇக (விவிமு) யோக்கிதையை பாருங்கள். பிறகு சிபிஎம் தோழர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து ராஜேந்திரளையும் பலத்த காயம் அடைந்த 5 தோழர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தாலும், அபாயகரமான நிலையில் சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இராசேந்திரன் வழியில் திண்டிவனத்திலேயே இறந்துவிட்டார்.

இதன் பிறகும் அவர்களின் புரட்சிகர புரட்சி வேலைமுடியாதால் விவிமு விழுப்புரம் மாவட்டஅமைப்பாளர் ராமசாமி தலையில் திரண்ட போலி நக்சல் கொலைகார கும்பல் திட்டமிட்டு தோழர்களை கொலை செய்யும் நோக்கோடு மேட்டுத் தெருவில் இருந்த சிபிஎம் ஆதரவாளர்களின் வீடுகளில் புகுந்து அங்கிருந்த முதியவர்களையும் பெண்களையும் தாக்கியிருக்கின்றனர்.

வீடுகளை அடித்து நொறுக்கியதுடன், 120 பவுன் நகைகள், 30வீடுகளில் இருந்த டிவி உள்ளிட்ட பொருள்களை கொள்ளை அடித்தும் .அவர்களின் உடைமைகளான 2 பவர் டிரில்லர்களையும், 3 மோட்டார் பம்புகளையும் 1 மினி லோடுகேரியர் வன்டியையும் அடித்து நொக்கியும் தீ வைத்து கொலுத்தியும் இ சுமார் ரூ. 200000 லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட இராசேந்திரன் அவர் துவக்கம் முதலே விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்து செயல்பட்டார். வி.வி.மு.வினரின் போலி கொள்கையினை முன்னரே தெரிந்து இருந்தாலும் கொள்ளையடிப்பதில் பங்கு கிடைக்காத காரணத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வி.வி.மு.விலிருந்து விலகினார். சிறிது காலம் கழித்து தே.மு.தி.க.வில் இணைந்தார். அவரை அழித்தோழிப்பு உள்ளாக்க திட்டமிட்ட நிலையில் சிபிஎம்யை தீர்த்துகட்டும் பிரச்சினையை சாக்காக வைத்து வி.வி.மு. வினர் அவரை திட்டமிட்டு தீர்த்து கட்டிவிட்டனர்.

இது ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை . ஜுன் 21ஆம் தேதி வி.வி.முகள் ராமசாமி தலையில் காரப்பட்டில் நடத்திய மக்கள் கமிட்டி கூட்டத்தில் சிபிஎம்க்கு எதிராகப் பொய்களையும் அவதூறுகளையும் நஞ்சாகக் கக்கியதுடன் "சிபிஎம். வை ஒழித்துக் கட்டுவோம்!' என்று பிரகடனமும் செய்திருக்கிறார்கள்."சிபிஎம். யை சேர்ந்தவர்கள் யாருடைய வீடு இருக்க கூடாது அவர்களின் உடமைகள் ஏதுவும் இருக்ககூடாது. அவர்களின் விவசாய பயிர்களை அழித்துவிடுவது.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் , ஆகியவற்றை பொது நிதியாக்குவது. அவர்களின் நிலங்கள், விடுகள் உடமைகள் வி.வி.முகளின் சொத்துகளாக்குவது .சிபிஎம் கட்சி சேர்ந்தவர்களோ , ஆதரவாளர்களோ இந்த கிராமத்தில் வாழவேண்டுமானால் அவர்கள் கட்சி விட்டு வரவேண்டும் . எழுத்தபூர்வமாக எழுதி தரவேண்டும் இல்லை என்றால் எல்லாறையும் அழித்தோழிப்புக்கு உள்ளாக்குவது என் பாசிச வெறியோடு செயல்பட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லைபோலீசுக்கும் வி.வி.முகளுக்கும் இடையே நிலவும் தொழில்முறைக் கூட்டினை திருவெண்ணெய் நல்லூர் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகள் தெளிவாக நிரூபித்தன.

இன்ஸ்பெக்டரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் "பணப் பட்டுவாடா' முடிந்து விட்டதை நிரூபித்தன. கொலை வழக்குச் செலவுக்கு கொள்ளையடித்த பணம்! இது வி.வி.முகளின் கிரிமினல் மூளை கண்டிருக்கும் வளர்ச்சிக்குப் புதியதொரு சான்று!

பாதிக்கப்பட்டு சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளான சிபிஎம் தோழர்களும் ஆதர்வாளர்களும் ஜுலை மாதம் 11ந்தேதி வரை யாறும் வீடு திரும்பாத நிலையில. மீண்டும் அழித்தொழிப்பு வேலைகளை குறிப்பாக தலித் பகுதி தோழர்கள் மீது நடத்தப்படுகிறது.

12ந்தேதி தோழர் ராஜகன்னு வீடும் அவரது அண்ணன் வீடு கொளுத்தப்படுகிறது.

இது குறித்து 15ந்தேதி கலக்டரிடம் புகார் அளிக்கப்ட்டது . அன்று இரவே சிபிஎம் தோழரின் அப்பாவான சுப்பரமணி என்பவரின் வீடு கொளுத்தப்பட்டது.

17ந்தேதி சிவப்பிரகாசம் என்ற சிபிஎம் ஆதரவாளர் வீடு கொளுத்தப்படுகிறது. ஆகமொத்தம் நான்கு விடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. இதுவரை எந்த நடவடிக்கையும் காவல் துறை எடுக்கவில்லை

"பெண்ணைக் கற்பழித்து விட்டால் பிறகு தாலி கட்டி விடலாம்' என்று தமிழ் சினிமா ஹிரோ போல அவர்கள் சிந்திக்கிறார்கள். கைகூலிகள், கற்பனைவாதிகளை உறுப்பினர்களாகவும், கிரிமினல்களைத் தலைவர்களாகவும் கொண்டுள்ள ஒரு கட்சி வேறு எப்படிச் சிந்திக்கும்? நந்திக்கிராமில் வெளிப்பட்டது வெறும் வன்முறையல்ல அதுதான் "போலி நக்சல் மூளையின்' சிந்தனை முறை என்பதற்கு காரப்பட்டு இன்னுமொரு சான்று.மேற்கு வங்கத்தில் பிஜேபி, மம்தா ஆகிய அனைத்து பிற்போக்கு சக்திகளுடன் உள்ள காதல் விழுப்புரம் காரப்ட்டுவரை தொடர்கிறது.

தமக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அங்கே போலீசுக்கோ கோர்ட்டுக்கோ போக கூடாது. பணப் பரிவர்த்தனையும் நிலப்பரிவர்த்தனையும் கூட விவிமு வின் கட்டப்பஞ்சாயத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றுவருகிறது. அந்த அளவுக்கு மக்களிடையே மறைமுக கட்சி நாங்கள் எங்களிடம் நவின துப்பாக்கிகள் உள்ளன. நாடுமுழுவதும் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது. மீறி யாராவது நடந்தால் கடுமையான அழித்தொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதை சொல்லியே கள்ளச்சாராய விற்பனை அங்கே அவர்களின் அனுமதியோடும் நடத்தப்பட்டு வருகிறது.

இவற்றையெல்லாம் ஆயுத பலம் கொண்டும் அதிகார பலம் கொண்டும் மக்களின் மீது விவசாயிகள் விடுதலை முன்னணி திணித்து வந்திருக்கிறது. கிராமத்தில் உள்ள பிற கட்சியினரின் ஆதரவோடும் ஆகப்பெரும்பான்மையான மோசடி கும்பலின் ஆதரவோடும்தான் இவை அங்கே அமல்படுத் தப்படுகின்றன. எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அவர்களின் மோசடி தனத்தை போலி தனத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தது. தம்மை பாதுகாத்துகொள்வதற்கு கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. செங்கொடிக்கு எதிராகச் மேற்கு வங்கத்தில் செய்தது போல் செங்கொடியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்பதை அந்தக் கிரிமினல்கள் புரிந்திருந்தார்கள். விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இந்தக் கிரிமினல் கும்பல் ஒரு கட்சியாகத் திரளுவதை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை. இதை புரிந்து கொண்டுதான் அவர்களின் கட்சி பெயரை பயண்படுத்தாமல் விவிமு, மகஇக, புஜஇக. இப்படி பல பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

ஆனால் மக்களுடைய உரிமைக்காக விடுதலைக்காக போராடும் கட்சியாகவும் வெளிப்படையாக மக்களிடம் கட்சியின் கொள்கையும் செயல்திட்டத்தையும் சொல்லி செயல்பட்டதன் விளைவாக அவர்களின் போலி முகமூடி கிழிக்கப்பட்டு வருகறது. சிபிஎம் கட்சிக்கு முன்று கிளைகள் உள்ளன.இந்த வளர்ச்சியும் அவர்களின் விழ்ச்சியையும் பொறுத்துக் கொள்ளாமல் இதுபோன்ற அரசியல் படுகொலையை செய்து வருகிறார்கள்.

ஊர்ப் பொதுச்சொத்தைத் திருடித் தின்பது, கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது, நகரத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, தட்டிக் கேட்டால் குடித்து விட்டுத் தகராறு செய்வது, பிரச்சினை முற்றினால் சென்னைக்கு ஓடிவிடுவது, மீண்டும் வந்து வம்பு வளர்ப்பது.. இவைதான் காரப்பட்டில் விவிமு உறுப்பினர்கள் ஆற்றிய மக்கள் கமிட்டி கட்சிப்பணிகள். இத்தகைய கட்சிப்பணிகளின் மூலம் களவாணிகளை மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்தது. இவை ஒவ்வொன்றிலும் மார்க்சிஸ்டுகள் தலைமையிலான மக்களின் எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

தங்களது "மக்கள் விரோத சேவையை' மார்க்சிஸ்டுகள் தலையீடின்றி தொடர வேண்டுமெனில், ஊராட்சித் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று கணக்குப் போட்டுத் தேர்தலிலும் முதன் முறையாக அவர்களின் ஓட்டுபொறிக்கி வேலையை கொள்கை ரீதியாக நின்று அஇஅதிமுகதை ஆதரித்து ஒரு ஓட்டில் வெற்றி பெற்றனர்.

தாழ்த்தப்பட்டோருக்கான தொகுப்புவீடு கட்டும் திட்டம் வந்தது. சாதிவெறி சிந்தனையோடு யாறும் இந்த போலி அரை நிலபிரபுத்துவ அரசு திட்டத்தை பெறக்கூடாது .அப்படி பெற்று கட்டி விட்டால் தலித் பகுதியில் கல்வீடு வந்தால் இதுவரை காப்பாற்றி வரும் சாதி தீமிர் கெட்டுவிடும் என்று மக்கள் நலத்திட்டத்தை தடுத்தனர் அய்யோ இது புரட்சிக்கு எதிரானது ' என்று கூச்சல் போட்டுப் பார்த்தார்கள் விவிமு வினர் எடுபடவில்லை. இப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார்கள். அதன் விளைவுதான் இந்தக் அரசியல் கொலைவெறி!

சிந்தித்துப் பாருங்கள்! நிலப்பட்டாவுக்கும், ரேசன் கார்டுக்கும், தொகுப்பு வீட்டுக்கும் மக்கள் போராடிக் கொண்டு இருக்கும்போது. கிடைக்காமல் இருப்பதற்கு அரசின் மீது மக்களுக்கு ஆத்திரம்வரளாம். அரசு கொடுக்கிறதே சிபிஎம் அதை பெறுவதற்கு போரட்டங்களை நடத்தி வாங்கி கொடுக்கிறதே என்று விவிமுவினர்களுக்குஏன் ஆத்திரம் வரவேண்டும்? எந்தக் வழக்கும் ஒரு ஊரிலிருந்து வரவில்லை என்றால் அந்த ஊரில் அதற்கு"அப்பட்டமான அடக்கு முறைதான் காரணம் எண்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனென்றால் மக்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும், மக்களுக்கும் போலீசுக்கும் இடையில் தரகுவேலை பார்ப்பதுதான் அவர்கள் ஆற்றிவரும் புரட்சிகரப்பணி. மக்களிடம் இலஞ்சம் வசூலித்து அதிகாரவர்க்கத்துக்குப் பங்கு பிரித்துக் கொடுத்து விட்டு, அதில் கொஞ்சம் புறங்கையை நக்கிக் கொள்ளும் வேலையை திமுக, அதிமுக வின் வட்டம் மாவட்டங்கள் மட்டும் செய்யவில்லை. அதே வேலையைத்தான் போலி விவிமுவினர்களும் செய்கிறார்கள். நக்கும் அளவிலும், போட்டிருக்கும் துண்டின் நிறத்திலும் மட்டும்தான் வேறுபாடு!

இல்லாத கடவுளிடம் வரம் வாங்க செல்லும் மக்களிடம் உங்கள் துக்கம் நீங்கும் நீங்கள் விரும்பிவாழ்வு கிடைக்கும். நீங்கள் இறந்தவுடன் சொர்க்கத்தில். என்று காதில் பூ சொருகி அனுப்புமும் கோயில் புரோக்கர்கள் என்ன சேவையைச் செய்கிறார்களோ அதே "சேவை'யைத்தான் விவிமுவினர் மக்களுக்குச் செய்கிறார்கள்..

மக்கள் போராட்டங்களையும் தாங்கள் பொறுக்கித் தின்பதற்கான கருவியாக மாற்றிக் கொண்டவர்கள் போலி விவிமுவினர். உள்ளூர் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான பிரச்சினைகள் வரும்போது, பத்தே பத்து சுவரொட்டியும் துண்டுப்பிரசுரமும் அச்சடித்து யாறும் இல்லாத நேரத்தில் ஒட்டிவிட்டு ஓடிமறைந்து கொண்டு புரட்சியை பற்றி பேசுகிறார்கள்.

வேறு என்ன விதத்தில் கட்சிப் பணி ஆற்ற முடியும் என்பதை உண்மையிலேயே அவர்கள் அறியமாட்டார்கள். அரசியல் போராட்டம், வர்க்கப் போராட்டம் என்பது பற்றியெல்லாம் கார்த்திக் கட்சிக்காரனுக்கு எவ்வளவு தெரியுமோ, அந்த அவ்வளவுதான் இந்த போலி நக்சல் கட்சிக்காரர்களுக்கும் தெரியும். அதனால்தான் காரப்பட்டின் கிரிமினல்கள் தங்களை வழிநடத்த வல்லது விவிமுவினர் கட்சியே என்பதைக் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

சாதிவெறியர்கள், சமூக விரோதிகள், அப்பாவி இளைஞர்கள். இவர்களெல்லாம் அங்கே "தோழர்கள்'. "நான் முதலில் சாதி வெறியன் அப்புறம்தான் கம்யூனிஸ்டு' என்று பிரகடனம் செய்யும் மாவட்ட செயலாளர். சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போடும் புரட்சிகர புரட்சி அதற்கு தலைமை தாங்கும் அவர்களின் பார்ப்பனத் தலைமை.


அடி முதல் நுனி வரை அழுகிப்போன இந்தக் கட்சி மக்கள் போர்குழுவால் அமெரிக்க ஏஜேன்ட் என்று குற்றம் சாட்டப்பட்ட இந்த அமைப்புகள் அடியாள் வேலை பார்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

"அழித்தோழிப்பு பாதையா, தேர்தல் பாதையா ?' என்பதுதான் நமக்கும் மார்க்சிஸ்டு களுக்கும் உள்ள வேறுபாடு என்று அவர்கள் கூறுகிறார்கள். இல்லை "ஆளும் வர்க்க அடிவருடித்தனமா அழித்தோழிப்பு புரட்சியா?' என்பதில்தான் வேறுபாடு. "அழித்தோழிப்புயை யாருக்கெதிராகப் பயன்படுத்துகிறார்கள்?' உழைக்ககும் பட்டாளி மக்களை அழித்தோழிப்புக்கு உள்ளாக்குவதுதான் அவர்கள் இதுவரை செய்த சாதனை .

சமீபத்தில் ராஜஸ்தானில் 80க்கும் மேற்பட்பட்டடோர் பிஜேபி கட்சியால் சுட்டுதள்ளப்பட்டனர் இதுகுறித்து வாய்திறக்காத இந்த போலி குண்டர்கள். நந்திகிராமிலும் சிங்கூரிலும் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மார்க்சிஸ்டுகள் 50பேர் சுட்டு கொன்ற மம்தா, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பக்கம் பக்கமாக ஏழுதி வந்த யோக்கியதையை என்ன சொல்வது .

மக்களுக்காக மதுரையில் லீலாவதி கொலை, சாத்தூரில் கள்ளச்சாராய முதலைகளுக்கு எதிராகப் போராடிய தோழர் கொலை திருப்பூரில் சாதிவெறியர்களை எதிர்த்த தோழரின் படுகொலை, தோழர்கள் கடலூரில் குமார் , ஆனந்தன் என மக்களுக்காக எதிரிகளின் அரிவாளுக்குக் சமரசம் செய்யாமல் உயிர் தியாகம் செய்த கட்சி சிபிஎம்.

ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்ப்பதற்கு நடுராத்திரி போஸ்ட்ர் ஒட்டும் போராட்டம், அரையில் நாளுபேர் அமர்ந்து கொண்டு நடந்தும் கருத்தரங்க போராட்டம், இனையத்தில் ஒப்பாரிப் போராட்டம்! மார்க்சிஸ்டுகளை எதிர்ப்பதற்கு மட்டும் ஆயுதப்போராட்டம்! இதுதான் விவிமு கட்சி! ஆம். இவர்கள் சிவப்புப் போர்வை போர்த்திய பாசிஸ்டுகள். அவர்களுக்காகபேச வந்த இராசேந்திரனை, "அஞ்சு பொம்பளப் புள்ளங்கடா, என்னக் கொல்லாதீங்கடா'' உங்களுக்காகதாண்டா வந்தேன் என்று நிராயுதபாணியாக நின்று மன்றாடிய அந்த ஏழை விவசாயியை, ஈவு இரக்கமின்றி வெட்டியது விவிமுக்களின் அரிவாள். கும்பிட்ட கைகளை வெட்டித் தள்ளிய குஜராத் இந்து வெறியர்களின் அரிவாளுக்கும் இந்த அரிவாளுக்கும் என்ன வேறுபாடு? அந்தக் கிரிமினல்களுக்கும் இந்தக் கிரிமினல்களுக்கும் என்ன வேறுபாடு? அது காவி இது போலி சிவப்பு என்பது மட்டும்தான்.

இந்தியப்புரட்சியின் முன்னேற்றத்தில் இது போன்ற சீர்குலைவாளர்களை எதிர்த்து போராடியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்துள்ளது. அப்போராட்டத்தில் பல இன்னுயிர்களையும் இழந்துள்ளது. இடது சீர்குலைவு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை இடைவிடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும்.

அரசியல் படு கொலைகளின் மூலம் மார்க்சிஸ்டுகளை நசுக்கி விடலாம் எனப் பாசிஸ்டுகளைப் போலவே கனவு காண்கிறார்கள் விவிமுவினர் கனவு கானும் இந்த மூடர்களின் கனவு விரைவில் கலையும். கலைப்போம்!