Wednesday, October 29, 2008

விவிமு சொம்பைகளும் ! மகஇக ரவுடிகளும் !!

விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போன விவிமு (மகஇக) கட்சிக் காலிகள் அங்கே ஒரு அரசியல் படுகொலை நாடகத்தை ஜூன் மாதம் 20 ஆம் தேதி அரங்கேற்றிருந்தர்கள்.

இந்த நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி காலையில் தோழர் கருணாநிதி (40) கடுமையாக தாக்கப்பட்டார். அரிவாளும் இரும்புத் தடிகளும் ஏந்திய விவசாயிகள் விடுதலை முன்னணியின் எழுமலை, ஜெயபால், ராஜா, மண்ணாங்கட்டி, சுடர்ஒளி ஆகியோர் தலையில் சுமார் 10 பேர் கொண்ட கொலைக்கும்பல், நிராயுதபாணியான தோழர் கருணாநிதிச் சுற்றி வளைத்துக் கொண்டு வெட்டிக் கொலை வெறி தாக்குதலை நடத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அவரது வீட்டையும் கடுமையாக அடித்து நொருக்கி உள்ளனர் விவிமு சொம்பைகள். பலத்த காயம் அடைந்த கருணாநிதி விழுப்புரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார். இது குறித்த புகாரின் அடிப்படையில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் ஜெயபால்,ராஜா ஆகிய இரண்டு விவிமு சொம்பைகளை மட்டுமே கைதுசெய்துஉள்ளனர். மற்ற ரவுடி தப்பி ஓடிவிட்டனர்.

No comments: