Wednesday, September 22, 2010
வினவின் இணையப்புரட்சி வெத்து வேட்டாக வெடித்தே விட்டது
Thursday, September 2, 2010
மாவோயிஸ்டுகளை விரட்டியடித்த கிராம மக்கள்
மத்தியப் படைகள் தாக்குதலால் கடுமை யான சேதத்தை சந்தித்ததாலும் உள்ளூர் மக் களின் கடுமையான எதிர்ப்பை சந்திப்ப தாலும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கம், மேற்குவங்கத்தின் பஸ்சிம் மேதினிப்பூர், புருலியா மற்றும் பன்குரா மாவட்டங்களை சேர்ந்த ஜங்கல்மஹால் பகுதியில் தங்களின் செல்வாக்கை இழந்து வருவதாக தோன்றுகிறது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப்பகுதியில் மாவோ யிஸ்டுகள் செலுத்தி வந்த மிரட்டல் ராஜ்யம் தற்போது வலுவாக எதிர்கொள்ளப்படுகிறது. இந்தமுறை தாங்கள் யாருக்காக போராடிக் கொண்டிருப்பதாக மாவோயிஸ்டுகள் கூறுகி றார்களோ அந்த உள்ளூர் மக்களிடமிருந்து அவர்கள் சவாலை சந்திக்கிறார்கள்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாவோ யிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்குகிற “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழுவும் (ஞஊஞஐ) ஒவ்வொரு நாளும் கொலை, வழிப்பறி, பயமுறுத்தல் ஆகியவற்றில் ஈடு பட்டு வந்தனர். மக்கள் இவற்றையெல்லாம் அமைதியாக தாங்கிக்கொண்டார்கள். இல் லையேல் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்று சொல்லியும் போலீஸ் உளவாளி என்று சொல்லியும் மாவோயிஸ்டுகள் இவர்களை சுட்டுக்கொன்று விடுவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு கொலையையும் நியாயப்படுத்துவ தற்கு இதைத்தான் அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.
மறக்க முடியாத ஜூலை 22
ஆனால், ஜூலை 22-ம் தேதியை அவர்கள் மறக்கமுடியாத அளவிற்கு மக்கள் செய்து விட்டார்கள். பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள ஜார்க்ரம் என்கிற நகரத்தின் அருகிலுள்ள ராதாநகர் கிராமத்தில் உள்ள மக்கள் அன்றையதினம்தான் தைரியமாக அவர்களை எதிர்த்து நின்றதோடு அவர்களு டைய கட்டளைகளையும் ஏற்க மறுத்துவிட் டனர். சுமார் 20 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்கும் “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழுவும்” அந்த கிராமத்தில் பள்ளிக் கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் கூடினார்கள். தாங்கள் நடத்துகிற பேரணியில் கிராம மக்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினர். அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது அவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. மக்கள் பேரணியில் பங்கு கொள்ள மறுத்தபோது அவர்கள் தங்கள் கையி லிருந்த துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை காட்டி பயமுறுத்த ஆரம்பித்தனர். ஆனால், மக் கள் பேரணியில் பங்கேற்க உறுதியாக மறுத் ததோடு அவர்களை விரட்டியும் அடித்து விட்டார்கள்.
ஜார்க்ரம் மாவட்டத்தின் காவல்துறை கண் காணிப்பாளர் பிரவின் திருபாதி ஃப்ரண்ட் லைன் நிருபரோடு பேசுகிறபோது “இப்போது மக்கள் மாவோயிஸ்டுகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுவதால் வெறுத் துப்போய் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் காவல்துறையும், மத்தியபடையும் மாவோயிஸ் டுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மக்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி யிருக்கிறது. அவர்கள் மாவோயிஸ்டுகளை எதிர்த்து போராட துணிந்திருக்கிறார்கள். மேலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
எதிர்ப்புப் பேரணி
ராதாநகர் சம்பவம் அந்தப்பகுதியை சுற்றி யுள்ள கிராமங்களில் உள்ள மக்களை உத் வேகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்தச் சம்பவத்திற்கு அடுத்த நாள் ஜூலை 23-ம் தேதி ராதாநகரில் ஒரு பெரும் பேரணி நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் இந்த பயமுறுத்தல் நடவடிக்கைக்கு எதிராகவும் அதைக்கண்டித்தும் நடத்தப்பட்ட பேரணி இது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர். இவர்கள் ராதாநக ரைச்சார்ந்தவர்கள் மட்டுமல்ல. அதன் அருகி லுள்ள கைஹட்டா மற்றும் பச்சூர்தோபா ஆகிய கிராமங்களைச் சார்ந்தவர்களும் அந்தப்பேரணியில் கலந்துகொண்டார்கள். ஜார்க்ரம் நகரம் மற்றும் அதன் காவல்நிலைய எல்லைக்கு மிக தூரத்திலுள்ள மக்களும் கூட மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ராதாநகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு “போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் குழு” ஜார்க்ரமி லிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிஸ்சிந்தா கிராமத்திலும் இதேபோன்ற எதிர்ப் பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. ஜூலை 24-ந்தேதி இரவு இவர்கள் அந்த கிராமத்திற்கு வந்து பேரணியில் பங்கெடுக்க வேண்டுமென்று மக்களை வழக்கம் போல் கட்டாயப்படுத்தி பயமுறுத்தியிருக்கிறார்கள். மக்கள் இதற்கு செவிமடுக்க மறுத்ததோடு அவர்களில் ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டனர். அடுத்த நாள் அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஜங்கல் மஹால் பகுதியில் உள்ள மக்கள், கிராமத்தை காப்பாற்றும் கமிட்டிகள் அமைத்து ஒன்றுபட்டு மாவோயிஸ்டுகளை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ராதாநகரில் ஜூலை 22-ம் தேதி நடந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அடுத்த 10 நாட்களில் அந்தப்பகுதியிலுள்ள 52 கிராமங்களில் இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாண்டிகரண் என்பவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர். அவர் லால்கர் ஒன்றியத்திலுள்ள லட்சிப்ப+ர் கிராமத்திலுள்ள பள்ளியில் வேலை செய்கிறார். மாவோயிஸ்டு களுக்கு எதிராக உள்ளூர் மக்களை திரட்டிய தில் இவருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அவர் ஃப்ரண்ட்லைன் நிருபரிடம் கீழ்க்கண் டவாறு கூறுகிறார். “இந்த பகுதியிலுள்ள மக்கள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அரசி யல் வேறுபாடுகள் இந்த ஒற்றுமைக்கு தடை யாக இல்லை. அவர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை இனிமேலும் ஏற்பதில்லை என்று கூட்டாக முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்று மாவோயிஸ்டுகளின் அச்சுறுத் தலுக்கு பயப்படப்போவதில்லை என்றும் அறி வித்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு கிராமம் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டால் பக்கத் திலுள்ள கிராமங்கள் அந்த மக்களின் உத விக்கு வந்துவிடுகிறது. சமீபத்தில் போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழு உறுப் பினர்கள் எங்கள் ஊருக்குள் நுழைந்து போஸ் டர்களை ஒட்டுவதற்கும் துண்டுப்பிரசுரங் களை தூவி விட்டு செல்வதற்கும் முயற்சித் தார்கள். ஆனால் மக்கள் அவர்களை விரட்டி யடித்து விட்டார்கள்”
மாவோயிஸ்டுகள் மற்றும் “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள்குழு” தாங் கள் இழந்துவிட்ட செல்வாக்கை மீட்டெடுப் பதற்காக சில பகுதிகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கொலை மிரட்டல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிராம மக்களை போஸ்டர்கள் மூலமாக வும் துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் தங்களு டன் சேரவில்லையென்றால் கொலை செய்து விடுவோமென்று மிரட்டியுள்ளனர். ஆனால், மக்கள் உறுதியாக நின்று முறியடித்துவிட் டனர். பல கிராமங்களில் உள்ளூர் மக்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். ஒன்று அந்த கிரா மத்தைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது காவல் துறையினரிடம் சரணடைந்துவிட வேண்டுமென்று எச்சரித்துள்ளனர். ஆகஸ்ட் 1ந்தேதியன்று நாராயண்ப+ர் கிராமத்தைச்சார்ந்த மக்கள் அந்த கிராமத்தில் ஒட்டப்பட்டிருந்த மாவோயிஸ்டுகளின் போஸ்டர்களை கிழித்து மொத்தமாக தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
மாவோயிஸ்டு தலைவர் கொல்லப்பட்டார்
மாவோயிஸ்டுகள் போலீசுடனான சண் டையில் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறார்கள். ஜூலை 26-ந்தேதியன்று இந்த பகுதியைச்சார்ந்த மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் முக்கியமானவரான சிதுசோ ரன் மற்றும் 5 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் மேட்டானா காடுகளில் கொல்லப்பட்டனர். இது லால்கரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. “சிதுசோர னுடைய மரணத்திற்குப்பிறகு உள்ளூர் மக்களி டமிருந்து ஏராளமான விவரங்களை எங்களால் பெறமுடிகிறது. முன்னர் அவர்கள் எங்களோடு பேசுவதற்கு கூட பயப்படுவார்கள். தற்போது அவர்கள் தானாகவே முன்வந்து எங்களுடன் பேசுகிறார்கள்”
தளங்களை இழக்கிறார்கள்
பஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்தில் லால்கர் பகுதியின் காடுகளில் தங்கள் வலு வான தளங்களை இழந்திருப்பதோடு, ஒப்பீட் டளவில் புதிய பகுதிகளிலும் கூட மாவோ யிஸ்டுகள் இழப்பை சந்;தித்து வருவதாக தெரிகிறது. “முன்னர் மாவோயிஸ்டுகள் வலு வான தளத்திலிருந்து அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு தங்களுடைய தளத்தை விரிவு படுத்துவார்கள். தற்போது இவையனைத்தும் எதிர் திசையில் நடைபெறுகிறது. அவர்கள் அப்படி விரிவுபடுத்தப்பட்ட பகுதியிலிருந்து தங்கள் தளங்களை நோக்கி சென்றுகொண்டி ருக்கிறார்கள்” என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் வர்மா தெரிவிக் கிறார். மாவோயிஸ்டுகளின் ஒரு பகுதி ஒரிசா எல்லையிலுள்ள நயாக்ராம் மற்றும் கோபிபல் லபூர் பகுதிகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
“இவையெல்லாம் அவர்கள் செயல்பாட் டிற்கு ஒப்பீட்டளவில் புதிய பகுதிகள். இந்தப் பகுதிகளில் அவர்கள் செயல்பாடுகள் குறித்து மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்பகுதியிலும் மக்கள் மாவோயிஸ்டுகளின் மீதான பயத்தை போக்கிவிட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போராட வந்திருக்கிறார்கள்” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப் போதெல்லாம் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையும் தங்களுக்கு கூடுதலாக உதவிசெய்ய வேண்டுமென்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டு களின் ஊழியர்களை நெருங்கி வருவதும் மக்களிடம் மாவோயிஸ்டு எதிர்ப்பு தீவிரப் பட்டு வருவதும் இந்தப்பகுதியில் தற்போ தைக்கு மாவோயிஸ்டு இயக்கம் மறைந்து வருவதையே குறிக்கிறது. மாவோயிஸ்டு களில் பலர் குறிப்பாக புதிதாக சேர்ந்தவர்கள் அந்த இயக்கத்தை விட்டு விலகவே விரும் புகிறார்கள்.
நன்றி : ஃப்ரண்ட்லைன் ஆகஸ்ட் 14 - 27
தமிழில்: க. கனகராஜ்
Saturday, August 21, 2010
திரிணாமுல்-மாவோயிஸ்ட் கள்ள உறவு
திரிணாமுல் காங்கிரஸ் - மாவோ யிஸ்ட் கூட்டணியால் லால்கரில் சென்ற ஆகஸ்ட் 9 அன்று நடத்தப்பட்ட பேரணி மூலம், இரு கட்சிகளுக்கும் இடையே யுள்ள கள்ள உறவு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. உண்மை யில் இவ்விரு கட்சிகளும் மேற்கு வங் கத்தின் பல பகுதிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு கூட்டுச் சதிகாரர்கள் ஆவார்கள். இக்கூட்டணி யினரின் கொலைபாதகத் தாக்குதல்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் 255 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுரண் டப்படும் வர்க்கத்திலேயே மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளும் மற்றும் பழங்குடியினரும் ஆவார்கள். இவர்களின் நலன்களைக் காப்பதற்காகத்தான் போராட்டங்களில் ஈடுபடுவதாக மாவோ யிஸ்ட்டுகள் கூறிக் கொண்டிருக்கிறார் கள். இவ்வாறு கூறப்படுவதை சில ‘அறிவுஜீவிகளும்’ ‘சமூக ஆர்வலர் களும்’ இன்னமும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியே மாவோயிஸ்ட் டுகளுடன் இப்படி வெளிப்படையாக அரசியல் கூட்டு வைத்திருப்பது மெய்ப் பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்மோகன் சிங் அரசாங்கம் அதனை மூடி மறைத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளில் பரிதா பகரமான முறையில் தோல்வியடைந்து விட்டது. லால்கர் கூட்டம் தொடர்பாக “உண்மை விவரங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டபின்” நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் அது குறித்துத் தெரிவிப்பதாகக் கூறி அரசு தற்சமயம் பின்வாங்கிக் கொண்டுவிட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே, ஆகஸ்ட் 11 அன்று, மாநிலங்களவையில், ரயில் விபத் துக்களில் மாவோயிஸ்ட்டுகள் சம்பந்தப் பட்டிருப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட, நட்சத்திரக்குறியிட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில், மத்திய உள்துறை இணை அமைச்சர், ‘‘ இதுவரை மேற் கொள்ளப்பட்ட புலனாய்வுகளிலிருந்து, மாவோயிஸ்ட்டுகளின் முன்னணி அமைப்பான பிஎஸ்பிஜேசி/பிசிபிஏ (ஞளுக்ஷதுஊ/ஞஊஞஹ) ரயில்வே தண்டவாளங்க ளைத் தகர்த்ததிலும், அவற்றின் மூலம் விபத்துக்களை ஏற்படுத்தியதிலும் சம் பந்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது’’ என்று கூறியுள்ளார். அரசின் நிலைப் பாட்டில் இருநாட்களுக்குள் என்னே முரண்பாடு!
ரயில்வேயில் பயணம் செய்யும் மக் களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளித்திடுவேன் என்றும் ரயில்வேயின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற் கொள்வேன் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள மத்திய ரயில்வே அமைச் சரே, மாவோயிஸ்ட்டுகளுடன் வெளிப் படையாகவே உடந்தையாக இருந்து செயல்பட்டு வருகிறார். மாவோயிஸ்ட் வன்முறைகளுக்கு எதிராக அரசு மேற் கொண்டு வரும் பாதுகாவலர்களின் நட வடிக்கைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வெளிப் படையாகவே கோரி வருகிறார். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒருபடி மேலேயே சென்று, மாவோயிஸ்ட் தலை வர் ஆசாத் அரசின் பாதுகாப்புப் படையி னர் கூறுவதுபோல் அவர்களுடன் நடை பெற்ற என்கவுன்ட்டரில் கொல்லப்பட வில்லை என்றும் மாறாக அவர் “கொலை செய்யப்பட்டார்” என்றும் கூறக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் - மாவோ யிஸ்ட் இடையேயான பிணைப்பு என்பது மிகவும் தெளிவாகவே மாறியிருக்கிறது. ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி களின்படி, மாவோயிஸ்ட் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கிஷன்ஜி என்னும் கோடேஸ்வர் ராவ் மீண்டும் ஒருமுறை ஆசாத் பிரச்சனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூற்றை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். “போலி என்கவுன்ட்டரில் எங்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் மத்தியக் குழுவின் சார்பில் செய்தித் தொடர்பாளராகவும் விளங்கிய சாரக்குரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ஆந்திரப் பிரதேச காவல்துறை யின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். மம்தா பானர்ஜி உண்மையைப் பேசியுள் ளார். இதற்குமேல் இப்பிரச்சனை மீது நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படக் காரணம் ஏதுமில்லை.’’ இவ்வாறு நாடா ளுமன்ற ஜனநாயகத்தை வெளிப்படை யாக நிராகரித்துள்ள, இந்திய அரசுக்கு எதிராக ‘மக்கள் யுத்தத்திற்கு’ அறை கூவல் விடுத்துள்ள மாவோயிஸ்ட் தலைவர் கூறியிருக்கிறார்.
தங்கள் அமைச்சரவையின் ஒரு முக் கிய அங்கமாகத் திகழும் ஒருவரது செயல் பாடுகளுக்கு வக்காலத்து வாங்க இய லாது, ஐ.மு.கூட்டணி-2 அரசானது தனது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மூல மாக மாநிலங்களவையில், “மாவோயிஸ் டுகளை எவரொருவரும் ஆதரிக்கக் கூடாது. அவ்வாறு ஆதரிக்கும் எவரையும் அரசு நிச்சயமாக ஊக்குவிக்காது” என்று கூற வைத்திருக்கிறது. ஆயினும், ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமானது, இந்தியா வின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள மாவோயிஸ்டு களை வெளிப்படையாக ஆதரித்து வரும் திரிணாமுல் காங்கிரசை நேரடியாகக் கண்டிக்க முடியாமல், அதனை சகித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மிகவும் கேவலமான அரசியல் சந்தர்ப்பவாத நிலையை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது.
மாவோயிஸ்ட் வன்முறை இந்தியா வின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பிரதமர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். ஆயினும் அவரது அமைச்சரவையின் சகா ஒருவரே, வெளிப்படையாக மாவோ யிஸ்ட்டுகளின் வன்முறைகளுக்கு உடந் தையாக இருந்து வருகிறார் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குலைத்திடும் அவர் களுடைய நடவடிக்கைகளை நியாயப் படுத்தி வருகிறார். இத்தகைய ஐ.மு. கூட்டணி-2 அரசின் முன்னுக்குப்பின் முரணான நிலை குறித்து பலமுறை குறிப்பிட்டிருக் கிறோம்.
லால்கரில் நடைபெற்ற கூட்டத்திற் கான காரணங்கள் என்ன? இக்கூட்டத் திற்காகப் பெரும் பகுதி மக்கள் லால்க ருக்கு வெளியே இருந்து வாகனங்களின் மூலம் திரட்டப்பட்டவர்கள். அப்பகுதி மக் களில் பெரும்பகுதியினர் இக்கூட்டத் தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த னர் என்ற உண்மையானது, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி மக்களிடமிருந்து அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டு வரு வது அதிகரித்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அப்பகுதி மக்களை அச் சுறுத்திப் பணியவைப்பதற்காகவே இக் கூட்டம் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டது என்பது இப்போது துல்லியமாகத் தெரிய வந்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற் காக, மிகமிகத் தரம் தாழ்ந்த நிலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் சென்று கொண்டி ருக்கிறது. அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண் டும் என்பது குறித்தோ அல்லது நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்தோ எல்லாம் அது கவலைப்படவில்லை. திரி ணாமுல் காங்கிரசின் இத்தகைய கேடு கெட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமோ அல்லது பிரத மரோ கண்டுகொள்ளாமல் இருந்தார்களா னால், பின் நாடே இதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும். கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவா தம் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அனு மதிக்கப்படுவதன் மூலம், நாட்டின் ஒற் றுமையையும், ஒருமைப்பாட்டையும், உள் நாட்டுப் பாதுகாப்பையும் காவு கொடுத் திட அனுமதித்திட முடியாது. அறுபதுக ளின் பிற்பகுதியிலும், எழுபதுகளின் முற் பகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சலைட்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்டங் களை அரசியல்ரீதியாக எதிர்த்து முறி யடித்து முன்னேறியது போல, இப்போது அதன் புதிய அவதாரமாக வந்துள்ள மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளை யும் எதிர்த்திடும்.
குறுகிய தேர்தல் ஆதாயங்கள் மற்றும் கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாத நிலைகளைவிட நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழில்: ச.வீரமணி
Sunday, January 24, 2010
செல்வபெருமாளுக்கு செவ்வணக்கம்
கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கணினி ஊழியராக பணியாற்றி வந்த தோழர் செல்வபெருமாள் இளம் வயதிலேயே (40) நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பது துயரமிக்கது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர்ந்து பல இயக்கங் களில் கலந்து கொண்டார். திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் மதநல்லிணக்கத்தை உருவாக்கிட பாடுபட் டவர். தான் வாழ்ந்த பகுதியில் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளை கட்டிட முனைப் பாக செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினரானார். கிளைச் செயலாள ராக சில ஆண்டுகள் பணியாற்றி திருவொற் றியூர் இடைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணி ஆற்றி வந்தார். கட்சியின் அழைப்பை ஏற்று கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக தீக்கதிர் சென்னைப் பதிப்பில் சேர்ந்தார். அங்கு அனைவரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார்.
கட்சியின் மாநில மையத்திற்கு அனுபவம் வாய்ந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தேவைப் பட்ட போது, செல்வப்பெருமாளை அழைத் தது. கட்சி முடிவு தான் என்னுடைய முடிவு என இன்முகத்துடன் ஏற்று மாநில மையத் திற்கு வந்து கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக கடந்த பத்தாண்டு காலமாக பணியாற்றி வந்தார்.
அவர் கட்சியின் மாநிலக்குழு அலுவ லகக் கிளையில் உறுப்பினராக இருந்தார். அவர் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மட்டுமல்ல; அரசியல் ஆர்வமும், தத்துவ ஞானமும் உள்ள
ஒரு முழுநேர ஊழியராக பரிணமித்தார்.
ஒரு நிலையில் மீண்டும் களப்பணிக்குச் செல்ல வேண்டிய ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அலுவலகத் தேவையை கூறியபோது அதை ஏற்று மாநிலக்குழு அலுவலகத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தார். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி செய்கிறபோது, இடையிடையே கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி பல நூல்களை படிப்பார்.
கட்சி அலுவலகத்தில் உள்ள நூலகம் மட்டுமல்லாமல், பொது நூலகத்திலிருந்தும் நூல்கள் எடுத்துப் படித்து வருவார்.
கட்சியின் தத்துவார்த்த இதழான மார்க்சிஸ்ட் மாத இதழில் பல கட்டுரைகள் எழுதி னார். மார்க்சிஸ்ட் மாத இதழை மாதந் தோறும் கணினியில் வடிவமைத்து அச்சுக்கு அனுப்பும் பணியை ஆர்வத்தோடு செய்து வந்தார். `மே தின வரலாறு’ என்று அவர் எழு திய சிறுபிரசுரத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.
மேலும், சிங்காரவேலர் எழுதிய கட்டுரை களைத் தேர்வு செய்து தொகுத்தளித்து “என்ன செய்ய வேண் டும்?” என்ற தலைப் பில் அவரது முன்னு ரையோடு புத்தகாலயம் வெளியிட்டது.
நமது கட்சியின் நிலைபாட்டை, நடை முறைக் கொள்கையை யாராவது விமர் சித்தாலோ, தாக்கினாலோ அல்லது கட்சியை அவதூறு செய்தாலோ அதற்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்று துடிப்பார். இதற்காக அவர் ‘சந்திப்பு’ என்ற வலைப்பக்கத்தை உருவாக்கினார். அதில் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சனைகள் குறித்து பல கட்டுரைகள் தொடர்ந்து வெளியிட்டு வந் தார். அதில் ஓரிரு கட்டுரைகள் குறித்து மிரட் டல் வந்தபோது கூட, அதற்கெல்லாம் அஞ்சு பவன் நானல்ல என்று பதிலளித்தார்.
12-4-2009 அன்று திருவொற்றியூரில் எஸ்சி/எஸ்டி சமூக சேவகர் மையம் என்ற தொண்டு அமைப்பினுடைய கூட்டத்தில் கலந்து கொண்டு ‘சிங்காரவேலரும் சாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில் உரையாற்றி னார். தன்னுடைய உரையில் தீண்டாமை ஒழிப்பு பற்றியும், தலித் குழந்தைகள் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தையும் வலி யுறுத்தி பேசினார். அதை மையமாக வைத்து, தான் உருவாக்கிய வலைப்பக் கத்தில் கட்டுரை எழுதி இருக்கிறார். “தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் கிராமத்தில் படித்தாலே ஆதிக்க சாதியி னருக்கு பிடிக்காது என்ற நிலையிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வந்து தனது கல் வியைத் தொடர நினைப்பவர்களுக்கு, ஆரோக்கியமான ஒரு சராசரி மாணவன் வீட்டில் என்னென்ன வசதிகளை அனுபவிப் பானோ அது போன்று குறைந்தபட்ச வசதி களை இந்த அரசால் ஏற்படுத்த முடியாதா?” என்பதே எனது கேள்வி.அரசின் முயற்சியை வலியுறுத்தும் அதே தருணத்தில், சமூகத்தில் ஓரளவு உயர்வு பெற்றவர்கள் இதுபோன்ற குழந்தைகளின் கல்விச் செலவினையும், அவர்களுக்கான உடை போன்றவற்றையும் வழங்கி உயர்த்திட முன்வருவதும் அத்தியா வசியமாகிறது. திருப்பதி வெங்கடாசலப் பெருமாளுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் வாரி வாரி வழங்கப்படும் பக்தர்களின் காணிக்கைகள் கோவிலின் சொத்துக்களை பெருக்க வைக்க உதவிடுமேயொழிய வேறு எதற்கும் பயன்படப் போவதில்லை. இப்படி வீண் விரயம் செய்யும் பொருள் உதவிகளை இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவலாமே” என தலித் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க அனைவரும் உதவிட வேண்டும் என தன்னுடைய கட்டுரையில் வலியுறுத்தி இருக் கிறார்.
தோழர் செல்வபெருமாள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிக் கொண்டே, அரசியல் பணியையும், அர்ப் பணிப்போடு செய்து வந்தார். கடந்த மே மாதம் இடையில் உடல் நலம் பாதித்து, சிகிச்சைக்காகச் சென்றவர் மீண்டும் அலுவலகத்திற்கு வர இயலாமலே போய்விட்டது. அவரை பாதித்த அந்தக் கடுமையான புற்று நோயிலிருந்து அவரை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் 22-01-2010 இரவு அவரது உயிர் பிரிந்தது. அவரோடு கட்சி அலுவல கத்தில் சேர்ந்து பணியாற்றிய மாநிலத் தலை வர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் சனிக்கிழமையன்று காலையில் கூடி கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத் தினர்.
அவர் பிறந்து வளர்ந்து, கட்சிப் பணி யாற்றிய திருவொற்றியூர் நகரத்தில் கட்சித் தலைவர்களும், தோழர்களும் இறுதி அஞ் சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றோம். அவரைப் பிரிந்து வாடும் துணைவியாருக்கும், 3 பெண் குழந்தைக ளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
Monday, September 7, 2009
மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?
மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...
எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...
சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...
எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)
நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?
1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)
2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?
3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?
4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?
இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...
கட்டுரையாளர்
குழலி பக்கங்கள்
Monday, August 24, 2009
சீரழிந்த நக்சலிசம்
மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப்பாதுகாப்புப்படை, மாநில ஆயுத போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே மேற்குவங்கத்தில் லால்கார் மலைப்பகுதியில் மார்க்சிஸ்ட்டுகளை மாவோயிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகள்
சுட்டுக் கொலை செய்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.
வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் இந்த பயங்கரவாதக் குழுக்களுக்குள் ஆயுதப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட உறவுகளும் தொடர்புகளும் உண்டு. துப்பாக்கி, வெடிகுண்டுகளோடு படுகொலைகளை நிகழ்த்தி வரும் பயங்கரவாதிகளை இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசும், அவர்களது செய்தி ஊடகங்களும் வெறும் தீவிரவாதிகள் என்றே பிரச்சாரம் செய்கின்றன. பயங்கரவாதம் இங்கு மட்டும் தீவிரவாதமாகவே கருதப்படுகிறது.
1968ம் ஆண்டில் நக்சல் பாரியில் ஆயுதமேந்திய புரட்சியை சாருமஜாம்தார், கனுசன்யால், ஜங்கால் சந்தாஸ் தலைமையில் நடத்தி தனிக்கட்சி தொடங்கினார்கள். நக்சல் பாரிப்புரட்சி நாடெங்கும் பரவுகிறது என்றனர். பின்பு பிரதேச அளவில் பல குழுக்களாய் பிளவுபட்டுப் போனார்கள். ஒன்றையொன்று மறுக்கின்ற குறுங்குழுக்களாய் சிதறிப் போயினர்.
பின்னர் இதில் பலரும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கைவிட்டதாகக் கூறினர். ஒரு பகுதியினர் தேர்தல் பாதைக்கும் வந்தனர். ஆயுதப் புரட்சிக்கு இது தருணமல்ல என்ற முடிவிலிருந்தே ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதற்கு நேபாள மாவோயிஸ்ட்டுகளை சிறந்த உதாரணமாய் கூறலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிய மார்க்சிய நிலைபாடு புரட்சியின் மூலம்தான் என்பது அனைத்து மார்க்சியர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஆயுதப் புரட்சியினால் மட்டும் என்பதல்ல. புரட்சி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் ஆளும் வர்க்கமும் அதன் அரசு இயந்திரமும் மட்டுமே தீர்மானிக்கின்றன. இந்த வடிவம் காலத்திற்குக் காலம், தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்பது கூட சட்டரீதியான நடைமுறைகளின் மூலம் மக்களைத் திரட்டுவதற்கான முயற்சிதான். சமூக மாற்றத்துக்கான புரட்சியை எந்த ஒரு குறிப்பிட்ட வடிவத்தோடும் வரம்பு கட்டிவிட முடியாது. இதற்கு நக்சலைட்டுகளின் அனுபவமே போதுமானது.
பொதுவாக மாவோயிஸ்ட்டுகள் மலைப்பிரதேசங்களையே தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ளனர். அரசுகளின் நிழல்படாமல் எந்த வளர்ச்சியுமின்றி பழங்குடி மக்கள் நிராதரவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்ற எந்த அடிப்படைத் தேவைகளும் கிடைக்காத பழங்குடி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளோடு ஊடுருவிவிடுகிறார்கள். அரசுகளின் மீதான கோபத்தில் ஒரு பகுதியும், பயத்தினால் ஒரு பகுதியுமாய் பழங்குடிகள் இவர்களிடம் சரணடைகின்றனர். போலீஸ் தாக்குதல்கள் வரும்போது மாவோயிஸ்ட்டுகள் பழங்குடிகளை மனிதக் கேடயங்களாய் பயன்படுத்துகின்றனர்.
ரயில்கள், பாலங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் உற்பத்தி மையங்கள், பெரும் தொழிற்சாலைகளுக்குக் குண்டு வைக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள், அவர்களது அத்தியாவசியத் தேவைகள், போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் மீது திட்டமிட்டு குண்டுவீசுகின்றனர். பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை சீர்குலைத்தால் தொடர்ந்து அப்பகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே நீடிக்கும். தங்கள் பிடியிலுள்ள பழங்குடிப் பகுதிகளையும் இதன்மூலம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்துக் கொள்கிறார்கள். பழங்குடி மக்களின் நலன்களுக்காகவே ஆயுதமேந்துகிறோம் என்று அவர்களை நம்ப வைக்கிறார்கள். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஊழல் மலிந்த காவல்துறையைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். போதை மருந்துக்கான பயிர் சாகுபடி மலைப்பகுதிகளில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது. பணத்தை வைத்து நவீன ஆயுதங்களை அவர்களால் வாங்கிக் குவிக்க முடிகிறது.
வர்க்கப்புரட்சியின் மூலம் வர்க்கங்களை ஒழிப்பது எனும் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடு, எதிரி வர்க்க உறுப்பினர்களை ஒழிப்பது எனும் தனிநபர் பயங்கரவாதமாய் சீரழிந்து போனது. இப்போது தனது வர்க்க உறுப்பினர்களையே கொல்வது, மார்க்சிஸ்ட்டுகளை கொலை செய்வது என்ற பயங்கரவாதமாய் வளர்ச்சியடைந்துள்ளது. இதைக் கூட மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாகவே சந்திக்க விரும்புகிறது என்று பகிரங்கமாய் கூறியுள்ளது. சந்திக்கும் என்பது உறுதி.
Monday, August 17, 2009
வார்த்தை பொருக்கிகளான இன்டர்நெட் புரட்சியாளர்களும் அவரதம் எழுத்து நடையும் (பகுதி ஒன்று)
அவர்களுக்கு இன்று தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் வர்க்க எதிரி மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான்.
நந்திகிராமை முடிந்த அளவு அவதூறு செய்ய பயன் படுத்தினார்கள் அதை எதிர்த்து சந்திப்பு, விடுதலை போன்ற வளைத்தளங்களில் பதிலடி கிடைத்தவுடன் அடுத்து காரப்பட்டு விவகாரத்தை கையில் எடுத்து "பொய் பொய்யை தவிர வேறில்லை" என்ற அடிப்படையில் எழுதினார்கள். அதற்கும் சரியான பதிலடி கொடுத்த பின்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். தற்போது லால்கர் பிரச்சனை. மாவோயிஸ்டுகள் அத்வானி மற்றும் மம்தாவுடன் கொஞ்சி குலாவுவதை இவர்களால் கண்டிக்க முடியாது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாட நடந்த போராட்டத்தில் அவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தியதாய் பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் உலாவ விடுகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி போராட்டம் நடந்தப்பட்டது. அதில் ஆறுமுகசாமி உள்ளிட்டு ப.ம.க, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ தோழர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதற்கு பின் அங்கு நடந்த பல போராட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் கலந்துக்கொண்டன. ஆனால் வெட்டி பரபரப்பும் வார்த்தை ஜாலங்களையும் முதலீடாக மற்றி, காவல் துறையுடன் மோதுவது போல சீன் போடும் இவர்கள் தற்போது நடராஜர் ஆலயத்தை விடுவிக்க ஆகப்பெறும் வேலையை தாங்கள் மட்டுமே செய்ததாக மார்தட்டுகின்றனர்.
ஒரு போராட்டட்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்களை அங்கீகாரம் செய்யத்தெரியாத அல்லது அவர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. தங்களது கட்சியின் பெயரை வெளியே சொல்ல அசிங்கப்பட்டுக் கொண்டு அதாவது த.நா.மா.லெ.க என்ற பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு பல்வேறு பெயர்களில் உலாவந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது கட்சி திட்டம் எப்படி காலாவதியானது என்று வரி வரியாக சந்திப்பு கிழித்து காயப்போட்ட பிறகு அதற்கும் பதில் சொல்ல தயாரில்லை. ஆனால் இணையதளத்தில் வேலை செய்யும் பல அப்பாவி இளைஞர்களை தங்களது போலி புரட்சிகர வசனங்களால் மூளை சலவை செய்து, வளைதளத்தில் எழுதியே புரட்சியை உண்டாக்கலாம் என்று முயற்சி செய்கின்றனர்.
கருத்துக்களை தூர எரிந்துவிட்டு வார்த்தைகளை தேடித்தேடி பொறுக்கி அவர்கள் எழுதுவது அவர்களுக்கே உரிய கலை. (தலைப்பு இப்போது புரிந்திருக்கும்) உதாரணமாக: "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்று மாமேதை லெனின் சொன்னதை பயன்படுத்தி மற்ற கட்சிகளை வீராவேசத்துடன் திட்டுவார்கள். ஆனால் "தேவையேற்படும் போது அதையும் கம்யுனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்" என்று அவரின் அடுத்த வரியை மறைத்து அல்லது மறந்து விடுவர். (இப்படி இவர்களது "கட்டிங் பீஸ்" பல உள்ளது தேவையெனில் எழுதுவோம்) ஒரு சம்பவம் குறித்து அவர்களின் பொய் எப்படி பட்ட அடிபடையற்றது என்பது பல முறை நிருபிக்கப்பட்டுள்ளது, வேண்டு மென்றால் இதற்கு பிண்ணூட்டம் அவர்கள் அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அவர்கள எத்துனை அய்யோக்கியதனமான பொய்யர்கள் என்று மீண்டும் ஒரு முறை நிருபனம் செய்யலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை சேர்ப்பதற்கென்றே அவர்கள் ஒரு பிரிவை வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவை சார்ந்த வர்க, வெகுஜன இயக்கங்கள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டங்களில் துண்டு பிரசுரத்துடன் நுழைவது வேண்டுமென்றே கலகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேப்போல் தனிநபர்களை தாக்காமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. அவர்கள் எழுத்து நடையின் லட்சனம் அதுதான். கேட்டால் பெரிய லட்சிய கொம்பர்கள் போல கதையளப்பார்கள். எத்தனை பேர் அவர்களுக்கு பிண்ணூட்டம் அனுப்பினாலும் அத்தனை பிண்ணூட்டங்களையும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு நபர்கள் அனுப்புவதாக கற்பனை செய்துக்கொண்டு தனிநபர் தாக்குதலில் இறங்குவார்கள். அவர்களின் நரகல் எழுத்து நடையை படிப்பவர்கள் உடன் கண்டு பிடித்து விடலாம். அவர்கள் அனானி போலவும், புனைப்பெயரிலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அதை எதிர்த்து எழுதுபவர்கள் அவர்களது முகவரி மற்றும் ஜாதகத்தை வெளியிட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். என்னே ஒரு ஜனநாயக மான்பு. இப்போது இந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் எத்துனை நரகல் நடை பதில் வரும் என்று பாருங்கள். ஒன்னு அப்படி வரும் இல்லை எனில் இதை படித்ததாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பொய்கள் ஆதாரத்துடன் அடுத்தடுத்து நிருபிக்கப் படும் என்று மேலே உள்ளது அல்லவா.
இன்னும் கூட பல அப்பாவி நண்பர்கள் அவர்களை புரட்சியாளர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். த.நா.மா.லெ.க வினர் புரட்சிகரமான வார்த்தைகளை பொறுக்குவார்களே அல்லாது எதையும் அவர்களால் களத்தில் நின்று செய்யமுடியாது. இலங்ககை பிரச்சினையில் அவர்கள் ஒருப்பக்கம் தமிழ் என்று கதைப்பார்கள், மறுபக்கம் புலிகளின் ஆதரவு முகம் காட்டுவார்கள், முத்துக்குமரனை வீரனாக சித்தரிப்பார்கள், மற்றொறுபுறம் அந்த அப்பாவி இளைஞனை கேவலப்படுத்துவார்கள், இலங்கை பிரச்சினையில் அவர்கள் நிலை என்ன என்று கண்டு பிடிப்பத்ற்குள் உங்கள் தலைமுடி பாதியாகிவிடும். இவர்கள் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுவார்கள் இணையதள வாசகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கூட்டத்தை அடையாள படுத்தவே இந்த பதிவு இங்கு செய்யப்படுகிறது.
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
