Wednesday, September 22, 2010

வினவின் இணையப்புரட்சி வெத்து வேட்டாக வெடித்தே விட்டது

அலாஸ்காவில் இருந்து இரும்புத்திரையை மட்டும் இணையத்தில் படிப்பவர்கள் எதிர்வினை எழுதுவது தான் வேலை என்று யாராவது கூகுள் பஸ்,டிவிட்டர்,ஃபோரம்,ப்ளாக் போன்ற எதிலாவது எழுதி விட்டால் உடனே பிரபல பஸ்ஸர் யாராவது லைக்குவார்கள்.பிரபல பஸ்ஸர் என்று சொன்னது பகடியாக இருந்தாலும் வஞ்சப்புகழ்ச்சியாக இருந்தாலும் அதை உண்மை என்று எடுத்து கொள்ள வேண்டும்.சிரித்து விடக்கூடாது.


முதலில் ஒரு ஜூலை மாதம் இன்னொரு பிரபலத்துக்கு பெருங்காயம் ஏற்படுத்தினாலும் அட சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதே லேசாக ஆதரவு குரல் கொடுத்து தொலைத்தது தான் வினையாகி போய் விட்டது. தேவையாடா உனக்கு இது. லேசாக காலை தட்டி விட்டதற்கே பிரபலத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.குழிக்குள் விழுந்திருந்தால் மண்ணைப் போட்ட வரும் கூட்டத்தை நினைத்ததும் மனசு மகிழ்ச்சியில் பொங்கி விட்டது.

புரட்சியை எல்லாம் பார்த்தால் அவர்கள் தான் பெரியவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.காரணம் அவர்கள் வீச்சு அப்படி.அவர்களை யாராவது எதிர்த்து கருத்து சொன்னாலே போது தோழர்கள் டிவிட்டர், பஸ், ப்ளாக் என்று பாய்ந்து வருவார்கள். வழக்கம் போல அடுத்தவர் இடம் என்றால் அடியை வாங்கி கொண்டு போவார்கள்.அவர்கள் இடமாகயிருந்தாலும் தைரியமாக வருவார்களா என்றால் அதுவும் கிடையாது.முக்கால்வாசி மூடிக் கொண்டு தான் வருவார்கள்.வந்து இவர்களுடைய அல்லக்கை பட்டத்தை கோவி.கண்ணன்,பாலபாரதி (எவ்வளவு உனக்கு பட்டாலும் புத்தி வராது.இப்படி ஆதரவு கொடு உனக்கு அவங்க ஷேர் கொடுப்பாங்க என்று மனசாட்சி திட்டினாலும்) போன்றவர்களுக்கு கொடுத்து அவர்களுடைய பச்சோந்தி பட்டத்தையும் கொடுத்து விடுவார்கள்.எப்படி வேணாலும் இருங்கள். அவர்களுடன் சேர்ந்து விட்டால் யாரோ தப்பாக சொன்னார்கள்.அப்போது புரிதல் இல்லை இப்படி ஏதாவது சொல்லி சேர்த்து கொள்வார்கள். நானும் புரிதல் இல்லாமல் எழுதியதாக நினைத்து கொள்ளுங்கள்.

இணையத்தில் இவர்கள் ஒரே ஆள் வெவ்வேறு ஐடியில் வருகிறார்கள் என்று மார்க்ஸ் சொன்னதற்கு பொங்கினால் எப்படி. அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தோழர் ஏழரையைத் தவிர யாரும் வினவைத் தாண்டி வர மாட்டார்கள். ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனத்திற்கு மட்டும் எல்லாருடைய ப்ளாக்கிலும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்து எங்கு விமர்சனம் செய்ய மட்டும் செய்ய தெரியும்.விதவிதமான பெயர்களில்.அப்புறம் மார்க்ஸ் ஏன் சொல்ல மாட்டார்.

ராஜீவ் கொலை நடந்த சமயம் தி.மு.கவை இவர்கள் தான் காப்பாற்றினார்கள். அப்புறம் கலைஞர் சட்டசபை தேர்தலில் ஜெயிக்க இவர்கள் நடத்திய பிரச்சாரம் தான் காரணம்.அதற்கு கைமாறாகத்தான் முதல்வர் இவர்கள் என்ன திட்டினாலும் கைது செய்யவேயில்லையாம்.சவுக்கு அளவிற்கு பிரபலம் இல்லை என்பது தான் உண்மை.

//எழுத விரும்பினாலும் ம.க.இ.க கும்பலின் பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக எழுதுவதில்ல என்றால், தமிழ்ப் பதிவுலகில் அப்படியொரு தார்மீக அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் எமது தோழர்கள் பலரின் பணி குறித்து பெருமைப்படுகிறோம்.//

இதை விட காமெடி கிடையவே கிடையாது.ஆமாம் வீட்டுக்கு ஆள் அனுப்புவோம் என்று சொன்னவர்கள் தானே இவர்கள். இணையத்தில் எதிர்கருத்து வந்தாலே பொறுக்க முடியாது. ஒரு பஸ்ஸிற்கு இத்தனை பொங்கினால் இவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் எப்படி இருக்கும்.

ஆனால் இவர்கள் கையில் அதிகாரம் முழுமையாக இருந்தால் தோழர்களாலே ப்ளாக் எழுத முடியாது.இருந்தால் தானே எழுத.மேலும் கருணானிதியின் தலையை எடுப்போம் என்று சொன்னதற்கு திமுக தொண்டர்கள் ஆவேசப்படவில்லையாம். அப்படி எதுவும் நடக்காது என்று தெரியும்.ஏன் ஆவேசப்பட வேண்டும்.காமெடி பண்ணுங்க ஒரு அளவா பண்ணுங்க.

வினவு பதிவுககில் பிரபலம் என்பது உண்மை தான்.ம.க.இ.க கட்சி என்று ஒன்று இருப்பதே எனக்கு இன்று தான் தெரியும்.தேர்தல் ஆணையத்திற்கு என்று தெரிந்து அந்த கட்சியின் அந்தஸ்தைப் பிடுங்கி அதற்கு அங்கீகாரம் தருவார்களோ அன்று ஒத்துக் கொள்கிறேன் ம.க.இ.க கட்சி தான் பெரிய கட்சி என்று.மிளகாய் தான் பெரிசு என்றும் ஒத்துக் கொள்கிறேன்.

No comments: