
மேற்குவங்கத்தில் ஆட்சி மாறியதை தமிழகத்தில் ம.க.இ.க போன்ற இன்டர்நெட் புரட்சியாளர்கள் மிகவும் சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். இவர்கள் டுபாக்கூர் புரட்சியாளர்கள் மட்டுமல்ல மம்தாயிஸ்டுகளின் தமிழக வார்ப்பாகவும் இருக்கிறார்கள். அங்கு 34 ஆண்டுகள் மக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னேற்றத்திற்காக உழைத்த இடதுசாரி ஊழியர்களின் படுகொலைகளை கொஞ்சமும் கண்டு கொல்லாமல் மார்க்சிஸ்டுகளின் எதிர்ப்பை மட்டுமே முதன்மையாக வைத்து பரிதாபமாக அரசியல் நடத்தி வருகின்றனர்.
நிலபிரபுத்துவ முதலாளித்துவ அரசியல் ஏஜென்ட் மம்தாவின் வெற்றி இவர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. அமெரிக்க ஆதரவுடன் மம்தாவும் மாவோயிஸ்டுகள் என்ற கூலிக்கு மாரடிக்கும் கொலை பட்டாளமும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களை நூற்றுக்கணக்கில் படுகொலை செய்ததை இவர்கள் மார்க்சிஸ்டுகளின் ரவுடியிஸமாக வடிவமைத்தனர். நிலசீர்திருத்தம் செய்து மக்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய மார்க்சிஸ்டுகளை வெல்ல முடியாமல் தவித்த மம்தா, அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என கூப்பாடு போட்டார். ஒட்டுண்ணி காங்கிரஸ் அதற்கு மத்திய அரசிலிருந்து ஆதரவு அளித்தது. தொழிற்சாலைகள் துவக்க அந்த இடது முன்னணி அரசு முயற்சி எடுத்த போது உழைப்பளிகளின் நிலங்களை பிடுங்குவதாக அபாண்டமாக பழி கூறினர். அங்குள்ள முதலாளித்துவ ஊடகங்கள் ஒவ்வொரு நிமிடமும் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விட்டனர்.
சிங்கூரும் நந்திகிராமும் நல்ல வாய்ப்பாக அவரக்ளுக்கு அமைந்தது. இப்பிரச்சனையை வைத்து கொடூரமக படுகொலைகளை அரங்கேற்றினர். மத்திய காங்கிரஸ் அரசு இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியா முழுவதும் அந்த ஆட்சிக்கு எதிராக கடுமையான பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த ஊடகங்களின் எச்சத்தை தமிழக இணைய புரட்சியாளர்களான "டுபாக்கூர் வீரர்கள்" ம.க.இ.க போன்றோர்கள் அப்படியே வாந்தி எடுத்தனர்.
மேற்கு வங்கத்தில் கொள்ளையடித்த நிலங்களை இழந்த நிலக்கிழார்களும், கொள்ளை லாபம் அடிக்க முடியாத முதலாளிகளும், கள்ள சந்தைகாரர்களும் ஒன்றினைந்து ஒரு மக்கள் ஆட்சியை வீழ்த்தி உள்ளனர். இப்போது ஒரு தேவதூதனாக மம்தாவை சித்தரிக்கின்றனர். இப்போதும் பல லட்சம் மக்கள் ஆதரவு உள்ள ஒரு இயக்கத்தை மொத்தமாய் அழிக்க முயற்சிக்கின்றனர். மம்தா வெற்றி அடைந்ததும் அவரகள் படுகொலைகளை துவக்கி விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர். அரசியல் படுகொலைகளை காங்கிரஸ் கட்சி 1977 இல் செய்ததை போல இப்போது மம்தா துவக்கி உள்ளார்.
ஒன்று மட்டும் நிச்சயம் வரலாற்று பக்கம் எப்போது இத்தகைய கொலைகாரர்களை விரட்டிய வரலாற்றைதான் பதிந்து வைத்திருக்கிறது. இவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. மக்களுக்காக பல தியாகங்களை செய்த மார்க்சிஸ்டுகள் மீண்டும் எழுவார்கள் முன்பைவிட வீரியத்துடன். தமிழகத்தில் மார்க்சிஸ்டுகள் ஒழிந்துவிட்டதாக ஓலமிடும் டுபாக்கூர் புரட்சியாளர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது அவசியம். துரோகத்தால் வீழ்த்தப்பாட்டர்களே ஒழிய மார்க்சிஸ்டுகளை அங்கு மம்தா மற்றும் மத்தாயிஸ்டுகளான மாவோயிஸ்டுகளும் ஒட்டுண்ணி காங்கிரசும் நேர்மையாய் வெற்றி கொள்ளவில்லை என்பதை நினைவில் வைப்பது அனைவருக்கும் நல்லது.
சிபிஎம் என்ற கட்சி இல்லை என்றால் இந்த மகஇக கூட்டத்தை ( 5பேர்தான்) எப்போதும் இப்படி வெளிப்படையாக செயல்பட விடமாட்டார் நமது இந்திய முதலாளிகள் பின்லேடனுக்கு ஏற்பட்ட கதி ஏற்படும் என்பதையும் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.
நன்றி
1 comment:
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News
Post a Comment