Tuesday, December 30, 2008

மகஇக சொம்பைகளும் அவர்களின் போலி வார்த்தை புரட்சியும்?


மகஇக உள்ளவர்கள் யார்?

புத்தகத்ததை படித்துவிட்டு களம்பற்றி தெரியாமல் புரட்சி செய்ய வந்தவர்கள்.
சிபிஎம் கட்சியில் இருந்து முறைகேடுகளில் ஈடுப்பட்டதால் நீக்கபட்டவர்கள்.
மார்க்சிய லெலினிய கோட்பாடுகளை மக்கள் மத்தியில் பரவாமல் தடுக்கும் நோக்கோடு முதலாளித்து சிந்தாந்தவாதிகளின் சிந்தனைபோக்கில் ஊரி திளைப்பவர்கள்.
வேலைவெட்டி இல்லாத உழைத்து உண்ண தெரியாத மற்ற கட்சியில் இருந்து வந்தவர்கள்.
மார்க்சியம் குறித்து மக்கள் மத்தியல் பீதியை உண்டாக்கி அதன் மூலம் முதலாளித்துவ சத்திகளுக்கு சேவகம் செய்பவர்கள்.
போதிய வழிகாட்டல் இல்லாத ஒன்று இரண்டு தோழர்கள்.

1967 இல் இளம்பிள்ளவாத கோளாரின் காரணமாக சீர்குலைவாளர்களின் நக்சல்பாரி சிபிஐ எம் எல் இயக்கம் துவக்கப்பட்டது. அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம் தான் சரி என்பது அவர்களது கொள்கையாகும் . இந்த அணுகுமுறையே மிக செயற்கையானதாகும். அந்தப் பகுதியின் நிலைமை என்ன பகுதி மக்களின் உடனடித் தேவை என்னஇ இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே கிடையாது. கண்மூடிதனமான வழியில் தான் அழித்தொழிப்புக்கு ஆட்களைத் தயார் செய்தார்கள். அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது.

இந்தியாவின் ஓர்ஜினல் புரட்சியாளர்கள் இவர்கள்தான் என்று இந்த இயக்கத்திற்கு வந்த அப்பாவி தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாக புரட்சி வரும் சமூகம் மாற்றம் பெறும்என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள் புரட்சிகரவாய்வீச்சில் உள்ள வேகம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள். அழித்தொழிப்பு யாரை எதிர்த்து என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத காரணத்தினால் உணர்ச்சிகராமக வேலைசெய்த பல தோழர்கள் வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

ஆனால் தொடர்ந்து கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கைகூலியாக செயல்பட்ட சிபிஐ எம் எல் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிரிந்து அழித்தொழிப்பு என்ற பெயரில் கொலைஇ கொள்ளைஇ வழிபறி போன்ற கேவலமான சீர்குலைவு நடவடிக்கைகளை புரட்சி என்ற லேபில் ஒட்டி செயல்பட்டு வருகின்றனர்.

2 comments:

Anonymous said...

மகஇக சாயம்
வெளுத்து போச்சு டிங் டிங் டிங்

பன்னி வேசம்
கலஞ்சு போச்சு டிங்டிங்டிங்

புதியசனநாயகம். புதிய கலாச்சாரம்
குப்பையாச்சு டிங்டிங்டிங்

வினைவுக்கு
பைத்தியம் முத்தி டிங்டிங்டிங்

தமிழ் நர்ட்டுக்கு மட்டும்
புரட்சி என்கிறான் டிங்டிங்டிங்

அவன் கட்சி பெயர கேட்டாமட்டும்
எல்லாத்தையும் மூடிக்குறான் டிங்டிங்டிங்

Anonymous said...

ok pa we will discuss our plans by each and every line ok

1. we found our existing system is semi colonial, semi feudal and semi capitalist system. What is your/cpm view and how it is correct?

2. so in india, new democratic revolution is possible. what is your view?

3. what is your view on eelam and kashmir and north-eastern problems..

CITU celebrate AYUTHA PUJA. Gow you justify it.
cpm now join with aliance of jeya. is it ok for your revolution..
are you accept the varnaashramatharmaa.. if not why your peoples call such peoples as BRAHMNAAS (son of brahmmaas)...
Thirunelveli city's cpm secratary was join in sarathkumar party.. he complainted that crs. were womanisers, bankers, castist...etc in last kumudham reporter. how it is possible...
why you cant grow in many states except few.
your aliances ie aliance parties were differ from state to state. it is not our comment only. peoples generally ask ..tell maa.. how it is use to your revolution